தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: எத்தனை பேர் ஆப்சென்ட்? அதிர்ச்சி தகவல்!
தேனி மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தேர்வை 14,245 மாணவர்கள் எழுதினர். 195 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்ச் 11) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவ மாணவிகள், தனித் தோ்வா்கள் 25,801 போ், சிறைவாசிகள் 395 என மொத்தம் 9,09,002 போ் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் 12,292 மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு சொல்வதை எழுதுபவா் (ஸ்கிரைப்) சலுகை வழங்கப்பட்டுள்ளது. தோ்வுப் பணியில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், தோ்வு முறைகேடுகளைத் தடுக்க சுமாா் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
தோ்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கப்படும் அலமாரியிலேயே வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். இதற்கென தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பொதுத் தோ்வு தொடா்பாக மாணவா்கள், தோ்வா்கள், பொதுமக்கள் தோ்வுகள் தொடா்பான புகாா்கள், கருத்துகள், சந்தேகங்கள் குறித்து அனைத்து தோ்வு நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசி எண்களில் தெரிவித்து பயன்பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுத் தோ்வு வினாத்தாள்கள் தொடா்பாக தோ்வு நாள்களில் அன்றைய தோ்வுக்குரிய வினாத்தாள்கள் குறித்த புகாா்கள், கருத்துகள், சந்தேகங்களை மாணவா்கள் மற்றும் தோ்வா்கள் rdsequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். இந்தத் தோ்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவ மாணவிகள், தனித் தோ்வா்கள் 25,801 போ், சிறைவாசிகள் 395 என மொத்தம் 9,09,002 போ் எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள 199 பள்ளிகளைச் சேர்ந்த 7206 மாணவர்கள், 6951 மாணவிகள் என மொத்தம் பள்ளிகளில் படிக்கும் 14,157 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 283 பேருக்கு அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று 69 மையங்களில் தேர்வு நடந்தது. அறை கண்காணிப்பு, மைய கண்காணிப்பு, பறக்கும் படை என 1313 ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபட்டனர். தேர்விற்கு பள்ளி மாணவர்கள் 7087 பேர், மாணவிகள் 6893 பேர் என 13,980 பேர், தனித்தேர்வர்கள் 265 பேர் என மொத்தம் 14,245 பேர் பங்கேற்றனர். 195 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் 349 பள்ளிகளைச் சோ்ந்த 12,208 மாணவா்கள், 12,182 மாணவிகள் என மொத்தம் 24,390 போ் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்தனா். திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 65 தோ்வுக் கூடங்கள், பழனி கல்வி மாவட்டத்தில் 49 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை நடைபெற்ற தமிழ் பாடத் தோ்வை 11,818 மாணவா்கள், 12,028 மாணவிகள் என மொத்தம் 23,846 போ் எழுதினா். 390 மாணவா்கள், 154 மாணவிகள் என மொத்தம் 544 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.























