மேலும் அறிய

சிவகங்கை: எத்தனை, எத்தனை கஷ்டம்..? கொரோனாவை வென்ற கர்ப்பிணிக்கு இரட்டைக்குழந்தை!

கொரோனாவை சமாளித்து, பிரசவம் பார்த்த மருத்துவ குழுவினருக்கு நோயாளியின் உறவினர்கள் நெகிழ்ச்சிப்பட நன்றி தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுப்ரமணி- மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 8-ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தையின்று தவித்து வந்தனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் மருத்துவர் ஆலோசனைப்படி (ஐ.சி.எஸ்.ஐ) எனும் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்சன்’ (Intracytoplasmic sperm injection - ICSI) என்னும்  ‘ஓரணு ஒரு கருமுட்டை செயற்கைச் சேர்க்கை’ முறைதான் இது.

சிவகங்கை: எத்தனை, எத்தனை கஷ்டம்..? கொரோனாவை வென்ற கர்ப்பிணிக்கு இரட்டைக்குழந்தை!
இந்நிலையில் ஸ்கேன் மூலம் மீனாட்சிக்கு இரட்டை குழந்தை உண்டாகி இருப்பது தெரிய வந்தது. மேலும் கர்ப்பமாக இருந்த மீனாட்சி இரத்த அழுத்தம் மற்றும் தைராடு  குறைபாடு நோய்க்காகவும் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முப்பது வாரம் கர்ப்ப காலத்தின் போது இவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தலைமையில்
மகளிர் நோய் பிரிவு துறை தலைவர்  காயத்ரி, குழந்தைகள் பிரிவு துறை தலைவர்  குணா, பொதுமருத்துவ துறைத் தலைவர்  பீர் முஹம்மது, மயக்கவியல் துறைத்தலைவர்  வைரவராஜன் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சிவகங்கை: எத்தனை, எத்தனை கஷ்டம்..? கொரோனாவை வென்ற கர்ப்பிணிக்கு இரட்டைக்குழந்தை!
தொடர்ந்து அனைவரின்  ஆலோசனையின் படி உடனடியாக ரெம்டெசிவர்,  டெக்ஸாமெத்தாசன் போன்ற உயிர் காக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டது. மேலும் நெஞ்சக பகுதிக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் 30% நுரையீரல் பாதிப்பு கண்டறியப்பட்டது. நோயாளி தனிமை படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பகுதியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அன்று பிரசவ வலி ஏற்பட்டு நேற்று முந்தினம்  23-ம் தேதி குழந்தை பிறந்தது. முதல் குழந்தை தலை திரும்பாமல் இருந்ததாலும், நீண்ட கால குழந்தையின்மை காரணமாகவும் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு குழந்தைகளும் நலமுடன் பிரசவிக்கபட்டன.  முதலாம் ஆண் குழந்தை 2.2 கிலோ எடையுடனும் இரண்டாம் பெண் குழந்தை 2 கிலோ எடையுடன் நலமாக உள்ளன. அதிகப் படியான ரத்தக்கசிவு இருந்ததால் கர்ப்பப்பை மற்றும் இரத்த நாளங்கள் அடைக்கப்பட்டன.  தொடர்ந்து பல்வேறு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். மருத்துவ குழுவினருக்கு நோயாளியின் உறவினர்கள் நெகிழ்ச்சிபட நன்றிகளை தெரிவித்தனர்.
 
 ”கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு எந்த பிரச்னையும் இன்றி இரட்டை குழந்தை பிறந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதற்கு உதவிய மருத்துவ குழுவிற்கு நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக” சிவகங்கை மருத்துவமனை  முதல்வர் ரேவதி  நம்மிடம் கூறினார்.
 
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

சிவகங்கை பிரான்மலையில் பட்டப்பகல் கொள்ளை: 60 கிராம் தங்கம், பணம் மாயம்!
சிவகங்கை பிரான்மலையில் பட்டப்பகல் கொள்ளை: 60 கிராம் தங்கம், பணம் மாயம்!
உங்கள் ஊராட்சிக்கு ரூ.1 கோடி பரிசு! சமூக நல்லிணக்க விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
உங்கள் ஊராட்சிக்கு ரூ.1 கோடி பரிசு! சமூக நல்லிணக்க விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
உசிலம்பட்டி நகராட்சி: சாக்கடையை தூர்வாரிய நகர் மன்ற உறுப்பினர்கள்; பெரும் பரபரப்பு!
உசிலம்பட்டி நகராட்சி: சாக்கடையை தூர்வாரிய நகர் மன்ற உறுப்பினர்கள்; பெரும் பரபரப்பு!
மருத்துவக் காப்பீடு 'வடிவேலு காமெடி': ரூ.150 கோடி கஜானாவுக்கு கேட்கும் அரசு ஊழியர்கள்!
மருத்துவக் காப்பீடு 'வடிவேலு காமெடி': ரூ.150 கோடி கஜானாவுக்கு கேட்கும் அரசு ஊழியர்கள்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
Embed widget