மேலும் அறிய

அதிக கடன் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் கொண்டு சென்று தமிழகத்தை சீரழித்து விட்டார் ஸ்டாலின்- ஆர்.பி.உதயகுமார்

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் 10 மாநிலங்களில் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பதால் தமிழகத்தில் தலை தாழ்ந்து கிடக்கிறது.

முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,” இன்றைக்கு கடன் சுமையிலே தமிழகம் தலை தாழ்ந்திருக்கிறது என்பதற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கிற புள்ளி விபர தகவல்கள் நமக்கு அதிர்ச்சியை காட்டுகிறது.  முதல் முதலாக  தமிழகத்திற்கு கடன் சுமை என்று வந்ததே 2006 இல் இருந்து 2011 வரை நடைபெற்ற கருணாநிதி ஆட்சி காலத்தில் தான். அந்த கடன் சுமை ஒன்னரை லட்சம் கோடியாகும். கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சிகாலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள், கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள், நகராட்சிகளுக்கு புதிய கட்டிடங்கள், மாநகராட்சிக்கு புதிய கட்டிடங்கள்,  மாவட்ட ஆட்சியருக்கு புதிய கட்டடங்கள், வட்டாட்சியருக்கு புதிய கட்டிடங்கள் கோட்டாட்சியார்க்கு புதிய கட்டிடங்கள், புதிய யூனியன் அலுவலகங்கள் உள்ளிட்ட மூலதன செலவுகள், தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் இது போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி அந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி தான் கடன் சுமை இருந்தது.

அதிக கடன் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் கொண்டு சென்று தமிழகத்தை சீரழித்து விட்டார் ஸ்டாலின்- ஆர்.பி.உதயகுமார்
 
இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது  நான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை சீர்மிகு நிர்வாகமாக மாற்றுவேன் என்று கூறினார். ஆனால் இன்றைக்கு சீரழிந்த நிர்வாகமாக காட்சியளிப்பது நமக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புள்ளி விவரங்களோடு வெளியிட்டு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளிலே 2021, 2022 ஆண்டில் 87 ஆயிரத்து 977 கோடி கடன் வாங்கிய தமிழ்நாடு, 2022,2023ஆம் ஆண்டில் முதல் 11 மாதங்களில் தமிழகம் 68 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. மடிக்கணினி திட்டத்தை நிறுத்திவிட்டனர், குடிமாரமத்து திட்டத்தை நிறுத்திவிட்டனர், தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர், அம்மா உணவகத்தை படிப்படியாக நிறுத்தி வருகின்றனர் , 2000 அம்மா மினி கிளினிக்கை மூடி விட்டனர். எந்த மூலதன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை, அப்படி என்றால் இவ்வளவு கடன் சுமை எப்படி ஏற்பட்டது. ரிசர்வ்ஆப் இந்தியா வெளியிட்ட இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் 10 மாநிலங்களில் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பதால் தமிழகத்தின் தலை தாழ்ந்து கிடக்கிறது.

அதிக கடன் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் கொண்டு சென்று தமிழகத்தை சீரழித்து விட்டார் ஸ்டாலின்- ஆர்.பி.உதயகுமார்
 
கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கும், மதுரையில் கலைஞர் நூலகத்தை 114 கோடி ரூபாயில் கட்ட  ஆர்வம் காட்டும் திமுக அரசு, இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கும்பாபிஷேகம் செய்வதற்கும், வசந்த ராயர் மண்டபத்தை புதுப்பிப்பதற்கும் அக்கறை காட்டாதது ஏன்?. இந்த இரண்டு ஆண்டுகளில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, ஒன்பது மாத இடைவெளியில் 50 லட்சம் சிறு,குறு நிறுவனங்கள் பாதிக்கும் வகையில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு , இலவச மின்சாரம் கேள்விக்குறி, இது ஒருபுறம் இருந்தாலும் தற்போது தமிழகத்தில்  வறுமை வாடிக் கொண்டுள்ளது. முன்னுக்கு பின் முரணாக பேசி, பொய் சொல்வதில் ஸ்டாலின் புலவராக உள்ளார்.  ஸ்டாலின் மக்களின் காவலராக இல்லை இன்றைக்கு மக்களின் காவலராக எடப்பாடியார் உள்ளார்.  ஆகவேதான் இந்த நாட்டு மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் மக்கள் போற்றும் அம்மாவின் ஆட்சி மலரும்” என்று கூறினார். 

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget