கோரைக்குட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ராஜராஜ சோழன் காலத்து ஈழக்காசுகள்! 1100 வருட பழமையான மகாவீரர் சிற்பம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்துள்ள இடங்கள் பெரும்பாலும் கடற்கரையை ஒட்டிய வணிகப் பாதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோரைக்குட்டத்தில் முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
யோக நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பமும், நின்ற நிலையில் கால் பகுதி சிற்பமும் உள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் உப்பங்கழி பகுதியில் கிடக்கும் 1100 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தைப் பாதுகாக்கவேண்டும் என தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது...,” திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் செல்லும் வழியில் கொட்டகுடி ஆற்றின் உப்பங்கழிப் பகுதியில் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் தலைப்பகுதி இல்லாத யோக நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பமும், நின்ற நிலையில் கால் பகுதி சிற்பமும் உள்ளது. இது திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவன் அபுரார் அகமது கொடுத்த தகவலின் பேரில் 2013-ல் கண்டறியப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்





















