மேலும் அறிய

Pugar Petti: “அப்பா பொங்கலுக்கு வர்றேன்னு சொன்னார்; கொன்னுட்டாங்களானு தெரியல”- கண்ணீர் வடிக்கும் 4 பெண் பிள்ளைகள்!

அப்பா பொங்கலுக்கு வர்றதாதான் சொன்னாரு. ஆனா இப்ப அவர் உடலைக் கூட பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கு.

வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற தந்தை திரும்பவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தும் நான்கு பெண் குழந்தைகள் சிவகங்கை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 
 
சிவகங்கை மாவட்டம் பனங்காடி அருகே உள்ளது அல்லூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் - இன்பவள்ளி தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
குடும்ப வறுமை காரணமாகவும், சிவகங்கை மாவட்டத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாகவும் ஆனந்தன் கடந்த 8 வருடமாக வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். தற்போது துபாயில் அல்த்தோஸ் என்ற இடத்தில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழலில் வேலை முடிந்து ஊர் திரும்புவதாக குடும்பத்தினரிடம் போனில் தெரிவித்துள்ளார்.
 

ஆனால் கடந்த டிசம்பர் 30ம் தேதி போனில் பேசிய பிறகு அவர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் கிடைத்து வருகிறது. ஆனால் அவர் தற்போது உயிரோடு இருக்கிறாரா, இல்லை இறந்துவிட்டாரா என்ற உறுதியான தகவல் இல்லை. இதனால் ஆனந்தனின் குடும்பத்தினர் கண்ணீர் வடித்தபடி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Pugar Petti: “அப்பா பொங்கலுக்கு வர்றேன்னு சொன்னார்; கொன்னுட்டாங்களானு தெரியல”- கண்ணீர் வடிக்கும் 4 பெண் பிள்ளைகள்!
 
இதுகுறித்து ஏபிபி நாடு சார்பில், ஆனந்தனின் மூத்த மகள் சரண்யாவிடம் பேசினோம்."அப்பா பொங்கலுக்கு வர்றதாதான் சொன்னாரு. ஆனா இப்ப அவர் உடலைக் கூட பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கு. அப்பா உயிரோட இருக்காரா இல்லையானு எங்களுக்கு தெரியல.
 
அப்படி அவர் இறந்திருந்தால். அவர் வேலை செஞ்ச கம்பெனிதான் முழு பொறுப்பு. கடைசியா அவர் பேசும்போது அவர் வேலை செஞ்ச கம்பெனி கொடுமப்படுத்துறதா சொன்னாரு. அவர் மீது திருட்டுப் பழிய போட்டு போலீஸ் வச்சு அடிச்சுருக்காங்க அதனால கூட அவர் இறந்திருக்கலாம். எனவே அந்த கம்பெனி மேல நடவடிக்கை எடுக்கனும். எங்க அப்பாவ நல்லபடியா மீட்கனும்" என்று கண்ணீர்விட்டுக் கதறி அழுதார்.

Pugar Petti: “அப்பா பொங்கலுக்கு வர்றேன்னு சொன்னார்; கொன்னுட்டாங்களானு தெரியல”- கண்ணீர் வடிக்கும் 4 பெண் பிள்ளைகள்!
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டியிடம் பேசினோம். ”அயலக வாழ் தமிழர் ஆணையத்திற்கு இது குறித்து தகவல் அனுப்பியுள்ளோம். அவர்கள் மூலம் மீட்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனு அளிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுவிடும். இது தான் நடைமுறை. விரைவில் ஆனந்தன் மீட்கப்படுவார்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.

உங்கள் பகுதிகளிலும் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளனவா?

ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் எழுதி அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம். வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது.

தலைப்பு செய்திகள்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget