மேலும் அறிய

Pugar Petti: “அப்பா பொங்கலுக்கு வர்றேன்னு சொன்னார்; கொன்னுட்டாங்களானு தெரியல”- கண்ணீர் வடிக்கும் 4 பெண் பிள்ளைகள்!

அப்பா பொங்கலுக்கு வர்றதாதான் சொன்னாரு. ஆனா இப்ப அவர் உடலைக் கூட பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கு.

வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற தந்தை திரும்பவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தும் நான்கு பெண் குழந்தைகள் சிவகங்கை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 
 
சிவகங்கை மாவட்டம் பனங்காடி அருகே உள்ளது அல்லூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் - இன்பவள்ளி தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
குடும்ப வறுமை காரணமாகவும், சிவகங்கை மாவட்டத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாகவும் ஆனந்தன் கடந்த 8 வருடமாக வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். தற்போது துபாயில் அல்த்தோஸ் என்ற இடத்தில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழலில் வேலை முடிந்து ஊர் திரும்புவதாக குடும்பத்தினரிடம் போனில் தெரிவித்துள்ளார்.
 

ஆனால் கடந்த டிசம்பர் 30ம் தேதி போனில் பேசிய பிறகு அவர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் கிடைத்து வருகிறது. ஆனால் அவர் தற்போது உயிரோடு இருக்கிறாரா, இல்லை இறந்துவிட்டாரா என்ற உறுதியான தகவல் இல்லை. இதனால் ஆனந்தனின் குடும்பத்தினர் கண்ணீர் வடித்தபடி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Pugar Petti: “அப்பா பொங்கலுக்கு வர்றேன்னு சொன்னார்; கொன்னுட்டாங்களானு தெரியல”- கண்ணீர் வடிக்கும் 4 பெண் பிள்ளைகள்!
 
இதுகுறித்து ஏபிபி நாடு சார்பில், ஆனந்தனின் மூத்த மகள் சரண்யாவிடம் பேசினோம்."அப்பா பொங்கலுக்கு வர்றதாதான் சொன்னாரு. ஆனா இப்ப அவர் உடலைக் கூட பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கு. அப்பா உயிரோட இருக்காரா இல்லையானு எங்களுக்கு தெரியல.
 
அப்படி அவர் இறந்திருந்தால். அவர் வேலை செஞ்ச கம்பெனிதான் முழு பொறுப்பு. கடைசியா அவர் பேசும்போது அவர் வேலை செஞ்ச கம்பெனி கொடுமப்படுத்துறதா சொன்னாரு. அவர் மீது திருட்டுப் பழிய போட்டு போலீஸ் வச்சு அடிச்சுருக்காங்க அதனால கூட அவர் இறந்திருக்கலாம். எனவே அந்த கம்பெனி மேல நடவடிக்கை எடுக்கனும். எங்க அப்பாவ நல்லபடியா மீட்கனும்" என்று கண்ணீர்விட்டுக் கதறி அழுதார்.

Pugar Petti: “அப்பா பொங்கலுக்கு வர்றேன்னு சொன்னார்; கொன்னுட்டாங்களானு தெரியல”- கண்ணீர் வடிக்கும் 4 பெண் பிள்ளைகள்!
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டியிடம் பேசினோம். ”அயலக வாழ் தமிழர் ஆணையத்திற்கு இது குறித்து தகவல் அனுப்பியுள்ளோம். அவர்கள் மூலம் மீட்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனு அளிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுவிடும். இது தான் நடைமுறை. விரைவில் ஆனந்தன் மீட்கப்படுவார்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.

உங்கள் பகுதிகளிலும் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளனவா?

ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் எழுதி அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம். வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget