மேலும் அறிய

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!

மணல் திருட்டு வழக்கு விசாரணையை கண்காணிக்க தவறியதாக, துாத்துக்குடி எஸ்.பி., மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுத்து, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தலைச் சேர்ந்தவர் முத்துகுமார் இவர் உட்பட சிலர், சட்டவிரோதமாக ஆற்று மணலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்ட்டரில் அள்ளி சென்றதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாயர்புரம் போலீசார் வழக்கு பதிந்தனர். சிலர் இவ்வழக்கில் ஜாமின், முன்ஜாமின் பெற்றனர். இவ்வழக்கில் தொடர்புடையோர், தனி நபர் பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக மணல் எடுத்தது தொடர்பாக, துாத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க, 2019ல் சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!
இதை சற்று கவனிக்கவும் -Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
சாயர்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கில், 22.7.2021-ல் முத்துகுமார் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  இந்நிலையில் நீதிபதி பி.புகழேந்தி உத்தரவு...,”முத்துகுமார் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. துாத்துக்குடி கலெக்டர் விசாரித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டு வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையை, துாத்துக்குடி எஸ்.பி., கண்காணிக்க இந்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு மணல் எடுக்கப்பட்டது, அது எத்தகைய கனிமம் என விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!

இந்நீதிமன்றம் 2019- ல் உத்தரவிட்டும், இதுவரை உண்மையை கண்டறியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை.விசாரணையை கண்காணிக்க எஸ்.பி., தவறி விட்டார். அவர் மீது, இந்நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கிறது. அவர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வரும் 22க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என மாண்புமிகு நீதிபதிகள் உத்தரவிட்டார்.
விசாரணையை கண்காணிக்க தவறியதாக, துாத்துக்குடி எஸ்.பி., மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் கீழ் உள்ள 13 மாவட்டங்களில் மணல் அள்ள தடை உள்ளது, இந்நிலையில் பல மாவட்டங்களில் மணல் கொள்ளை ஜோராக நடைபெறுகிறது. எனவே இவர்கள் மீது காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
 

தலைப்பு செய்திகள்

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget