மேலும் அறிய

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!

மணல் திருட்டு வழக்கு விசாரணையை கண்காணிக்க தவறியதாக, துாத்துக்குடி எஸ்.பி., மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுத்து, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தலைச் சேர்ந்தவர் முத்துகுமார் இவர் உட்பட சிலர், சட்டவிரோதமாக ஆற்று மணலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்ட்டரில் அள்ளி சென்றதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாயர்புரம் போலீசார் வழக்கு பதிந்தனர். சிலர் இவ்வழக்கில் ஜாமின், முன்ஜாமின் பெற்றனர். இவ்வழக்கில் தொடர்புடையோர், தனி நபர் பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக மணல் எடுத்தது தொடர்பாக, துாத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க, 2019ல் சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!
இதை சற்று கவனிக்கவும் -Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
சாயர்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கில், 22.7.2021-ல் முத்துகுமார் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  இந்நிலையில் நீதிபதி பி.புகழேந்தி உத்தரவு...,”முத்துகுமார் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. துாத்துக்குடி கலெக்டர் விசாரித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டு வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையை, துாத்துக்குடி எஸ்.பி., கண்காணிக்க இந்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு மணல் எடுக்கப்பட்டது, அது எத்தகைய கனிமம் என விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!

இந்நீதிமன்றம் 2019- ல் உத்தரவிட்டும், இதுவரை உண்மையை கண்டறியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை.விசாரணையை கண்காணிக்க எஸ்.பி., தவறி விட்டார். அவர் மீது, இந்நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கிறது. அவர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வரும் 22க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என மாண்புமிகு நீதிபதிகள் உத்தரவிட்டார்.
விசாரணையை கண்காணிக்க தவறியதாக, துாத்துக்குடி எஸ்.பி., மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் கீழ் உள்ள 13 மாவட்டங்களில் மணல் அள்ள தடை உள்ளது, இந்நிலையில் பல மாவட்டங்களில் மணல் கொள்ளை ஜோராக நடைபெறுகிறது. எனவே இவர்கள் மீது காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பாடுகள் பணத்தை நோக்கியே இருக்கின்றது - வீரத்தமிழர் மக்கள் கழகம் கடும் தாக்கு !
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பாடுகள் பணத்தை நோக்கியே இருக்கின்றது - வீரத்தமிழர் மக்கள் கழகம் கடும் தாக்கு !
தேர்தல் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு, இணையவழி  சேவைகளை ஒருங்கிணைந்து ECINET என்ற செயலி பயன்பாட்டில் !
தேர்தல் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு, இணையவழி  சேவைகளை ஒருங்கிணைந்து ECINET என்ற செயலி பயன்பாட்டில் !
தமிழகத்தில் நான்கு முனை போட்டி அல்ல அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மட்டும்தான் இருமுனை  போட்டி - வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி !
தமிழகத்தில் நான்கு முனை போட்டி அல்ல அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மட்டும்தான் இருமுனை  போட்டி - வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி !
திருப்பரங்குன்றத்தில் வாக்குவாதத்திற்கு பின் தொழுகை... ஏராளமான இஸ்லாமியர்கள் ரம்ஜான் வழிபாடு !
திருப்பரங்குன்றத்தில் வாக்குவாதத்திற்கு பின் தொழுகை... ஏராளமான இஸ்லாமியர்கள் ரம்ஜான் வழிபாடு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
US Iran War: ”இன்னைக்கு பொளக்குறோம்” ட்ரம்ப் ஹிண்ட் ? “அடிச்சா, திருப்பி அடிப்போம்.. ஸ்யூர்” ஈரான் திட்டவட்டம்
US Iran War: ”இன்னைக்கு பொளக்குறோம்” ட்ரம்ப் ஹிண்ட் ? “அடிச்சா, திருப்பி அடிப்போம்.. ஸ்யூர்” ஈரான் திட்டவட்டம்
திருமாவளவன் ஏன் குரலும் கொடுக்கவில்லை.? கேள்வியும் கேட்கவில்லை- லிஸ்டு போட்டு விளாசும் இபிஎஸ்
திருமாவளவன் ஏன் குரலும் கொடுக்கவில்லை.? கேள்வியும் கேட்கவில்லை- லிஸ்டு போட்டு விளாசும் இபிஎஸ்
’’எனக்கு விஜய்தான் போட்டியே; அவர் TVK, நான் AVK'’- புதுக்கட்சி தொடங்கிய பவர்ஸ்டார் சீனிவாசன்!
’’எனக்கு விஜய்தான் போட்டியே; அவர் TVK, நான் AVK'’- புதுக்கட்சி தொடங்கிய பவர்ஸ்டார் சீனிவாசன்!
அரசு ஊழியர்களுக்கு 30% ஊதியம் குறைப்பா? திமுக தொடர்ந்தால் இங்கும் பேராபத்து- அன்புமணி எச்சரிக்கை!
அரசு ஊழியர்களுக்கு 30% ஊதியம் குறைப்பா? திமுக தொடர்ந்தால் இங்கும் பேராபத்து- அன்புமணி எச்சரிக்கை!
ADMK alliance seat allocation : அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு.! ரெடியான பட்டியல்.? யாருக்கு எத்தனை தொகுதி.?
அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு.! ரெடியான பட்டியல்.? யாருக்கு எத்தனை தொகுதி.?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட். ! இன்று ஒரே நாளில் 5,360 ரூபாய் குறைந்தது- ஒரு சவரன் இவ்வளவு தானா.!!
நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட். ! இன்று ஒரே நாளில் 5,360 ரூபாய் குறைந்தது- ஒரு சவரன் இவ்வளவு தானா.!!
Share Market: ரூ.7.3 லட்சம் கோடி கோவிந்தா..! பேங்க், ஐடி முதலீட்டாளர்கள் கதறல்.. பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
Share Market: ரூ.7.3 லட்சம் கோடி கோவிந்தா..! பேங்க், ஐடி முதலீட்டாளர்கள் கதறல்.. பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
Embed widget