மேலும் அறிய

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!

மணல் திருட்டு வழக்கு விசாரணையை கண்காணிக்க தவறியதாக, துாத்துக்குடி எஸ்.பி., மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுத்து, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தலைச் சேர்ந்தவர் முத்துகுமார் இவர் உட்பட சிலர், சட்டவிரோதமாக ஆற்று மணலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்ட்டரில் அள்ளி சென்றதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாயர்புரம் போலீசார் வழக்கு பதிந்தனர். சிலர் இவ்வழக்கில் ஜாமின், முன்ஜாமின் பெற்றனர். இவ்வழக்கில் தொடர்புடையோர், தனி நபர் பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக மணல் எடுத்தது தொடர்பாக, துாத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க, 2019ல் சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!
இதை சற்று கவனிக்கவும் -Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
சாயர்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கில், 22.7.2021-ல் முத்துகுமார் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  இந்நிலையில் நீதிபதி பி.புகழேந்தி உத்தரவு...,”முத்துகுமார் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. துாத்துக்குடி கலெக்டர் விசாரித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டு வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையை, துாத்துக்குடி எஸ்.பி., கண்காணிக்க இந்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு மணல் எடுக்கப்பட்டது, அது எத்தகைய கனிமம் என விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!

இந்நீதிமன்றம் 2019- ல் உத்தரவிட்டும், இதுவரை உண்மையை கண்டறியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை.விசாரணையை கண்காணிக்க எஸ்.பி., தவறி விட்டார். அவர் மீது, இந்நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கிறது. அவர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வரும் 22க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என மாண்புமிகு நீதிபதிகள் உத்தரவிட்டார்.
விசாரணையை கண்காணிக்க தவறியதாக, துாத்துக்குடி எஸ்.பி., மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் கீழ் உள்ள 13 மாவட்டங்களில் மணல் அள்ள தடை உள்ளது, இந்நிலையில் பல மாவட்டங்களில் மணல் கொள்ளை ஜோராக நடைபெறுகிறது. எனவே இவர்கள் மீது காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
 

தலைப்பு செய்திகள்

மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget