மேலும் அறிய

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!

மணல் திருட்டு வழக்கு விசாரணையை கண்காணிக்க தவறியதாக, துாத்துக்குடி எஸ்.பி., மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுத்து, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தலைச் சேர்ந்தவர் முத்துகுமார் இவர் உட்பட சிலர், சட்டவிரோதமாக ஆற்று மணலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்ட்டரில் அள்ளி சென்றதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாயர்புரம் போலீசார் வழக்கு பதிந்தனர். சிலர் இவ்வழக்கில் ஜாமின், முன்ஜாமின் பெற்றனர். இவ்வழக்கில் தொடர்புடையோர், தனி நபர் பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக மணல் எடுத்தது தொடர்பாக, துாத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க, 2019ல் சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!
இதை சற்று கவனிக்கவும் -Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
சாயர்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கில், 22.7.2021-ல் முத்துகுமார் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  இந்நிலையில் நீதிபதி பி.புகழேந்தி உத்தரவு...,”முத்துகுமார் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. துாத்துக்குடி கலெக்டர் விசாரித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டு வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையை, துாத்துக்குடி எஸ்.பி., கண்காணிக்க இந்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு மணல் எடுக்கப்பட்டது, அது எத்தகைய கனிமம் என விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

Madurai | மணல் திருட்டு விவகாரம்.. தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!

இந்நீதிமன்றம் 2019- ல் உத்தரவிட்டும், இதுவரை உண்மையை கண்டறியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை.விசாரணையை கண்காணிக்க எஸ்.பி., தவறி விட்டார். அவர் மீது, இந்நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கிறது. அவர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வரும் 22க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என மாண்புமிகு நீதிபதிகள் உத்தரவிட்டார்.
விசாரணையை கண்காணிக்க தவறியதாக, துாத்துக்குடி எஸ்.பி., மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் கீழ் உள்ள 13 மாவட்டங்களில் மணல் அள்ள தடை உள்ளது, இந்நிலையில் பல மாவட்டங்களில் மணல் கொள்ளை ஜோராக நடைபெறுகிறது. எனவே இவர்கள் மீது காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget