மேலும் அறிய

2 உயிர்களை பலி வாங்கிய மகளிர் விடுதி; மதுரையில் தரைமட்டமாகப்போகும் கட்டடம்

பெண்கள் தங்கு விடுதி தீ விபத்து 2 ஆசிரியர்கள் உயிரிழந்த சம்பவம் எதிரொலி விபத்து நடந்த கட்டடம் இடிக்கும் பணிகள் தொடங்கியது. மாநகராட்சி நகரமைப்பு திட்ட அதிகாரி நேரில் ஆய்வு செய்கின்றனர்.

கட்டட இடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் கட்டடத்திற்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இடிக்கும் பணிகள் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

திடீரென விடுதியில் இருந்த பிரிட்ஜில் தீ விபத்து

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் விசாகா பெண்கள் தங்கு விடுதி என்ற பெயரில், தனியார் விடுதி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  45க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி  படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர்.  இதில் ஆசியர்களும், அரசு தேர்வு எழுதும் பெண்களும் தங்கியுள்ளனர்.  இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென விடுதியில் இருந்த பிரிட்ஜில் தீ விபத்து ஏற்பட்டு அதிகளவிற்கான நச்சு கரும்புகை  வெளியேறியுள்ளது.  

இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம்

இதில் மதுரை இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த  தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த  பரிமளா சௌத்ரி மற்றும்  எட்டயபுரம் பேரிலோவன்பட்டியை சேர்ந்த அன்னம்மாள் டெக்னிகல் இன்ஸ்டியுட்டில் ஆசிரியராக பணிபுரியும் சரண்யா(27) ஆகிய இரு பெண் ஆசிரியர்களும் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலயே உயரிழந்தனர். மேலும் தீ விபத்தில் காயமடைந்த மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த வார்டன் மற்றும் மேலளாராக இருந்து வந்த  புஷ்பா (56) என்ற பெண்ணும், மேலூர் அட்டபட்டி பகுதியை சேர்ந்த ஜனனி என்ற முதலாமாண்டு செவிலியர் மாணவி மற்றும் விடுதியின் சமையலறான கனி ஆகிய 3 பேரும் மதுரை கென்னட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விடுதி உரிமையாளர் இன்பா மற்றும் மேலாளர் புஷ்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்  விபத்து நடைபெற்ற பெண்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் நேரில் ஆய்வு நடத்தினா். அப்போது  விபத்து நடந்த கட்டடத்திற்கு ஏற்கனவே மாநகராட்சி சார்பில் கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு அது விடுதி உரிமையாளரிடம் வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தீ விபத்தில் கட்டடம் முழுவதும் சேதமடைந்த்தோடு, கட்டடம் பாதுகாப்பின்றி சேதமடைந்த நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தீ விபத்து நடைபெற்ற கட்டடத்தை இடிப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டு கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 

கட்ராபாளையம் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு

பின்னர் நேரடியாக மாநகராட்சி நகரமைப்பு திட்ட அதிகாரி மாலதி தலைமையிலான அதிகாரிகள் தலைமையில் சீல் அகற்றப்பட்டு கட்டடத்தின் தன்மை குறித்து ஆய்வு நடத்தினர். இதையடுத்து அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் கட்டடத்தை இடிக்கும் பணிகளை கட்டட உரிமையாளர் தரப்பிலான பணியாளர்கள் தொடங்கினர். இதனையடுத்து கட்டடம் இடிக்கும் பணிகள் தொடங்கிய நிலையில், இடிப்பு பணி நடைபெறும் கட்ராபாளையம் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முன்னதாக தீ விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்து தீ விபத்துக்கு காரணமான பிரிட்ஜ்சில் இருந்து ஆய்வகத்திற்கு அனுப்புவதற்காக தடயவியல் நிபுணர்கள் மாதிரி எடுத்துசென்றனர். கட்டட இடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் கட்டடத்திற்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இடிக்கும் பணிகள் பாதுகாப்புடன் நடைபெற்றுவருகிறது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை: தீ விபத்தில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம்: பெண்கள் தங்கும் விடுதிக்கு சீல்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget