மேலும் அறிய

டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்

டங்ஸ்டன் சுரங்கத்திட்ட விவகாரம்: அடுத்த கட்டம் குறித்து பேசிமுடிவு செய்வதற்காக அழகர்கோயிலில் கூடிய 48 கிராம மக்கள்.

டங்க்ஸ்டன் சுரங்கத் திட்டத்ததின் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசின் டங்க்ஸ்டன் ஏல அறிவிப்பை முழுமையாக இரத்து செய்யவும் தொல்லியல், பல்லுயிர் பாதுகாப்பு பகுதிகள் அடங்கிய மதுரை மாவட்டத்தை பாரம்பரிய பண்பாட்டு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரக்கூடாது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொள்கை முடிவை அறிவித்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி அரிட்டாபட்டி தாய் கிராமங்களான 48 கிராம மக்கள் அழகர் மலையில் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
 
 

அழகர்கோயிலில் ஒன்றுகூடிய மக்கள்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஏலம் விடப்பப்பட்ட விவகாரம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் இதுகுறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக 26ந்தேதி அழகர்கோயிலில் கூட உள்ளதாக கடந்த வாரத்தில்  அரிட்டாபட்டி மந்தையில் கூடிய சுற்றுவட்டார மக்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று செவ்வாய்கிழமை அ.வல்லாளபட்டி, கிடாரிபட்டி, அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, மாங்குளம், கள்ளந்தரி, மேலவளவு, சூரக்குண்டு , சுக்காம்பட்டி, எட்டிமங்கலம், நரசிங்கம்பட்டி, தெற்குதெரு, வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட 48 ஊர்களை  சார்ந்த மக்கள் நாட்டார்கள் முன்னிலையில் ஒன்று கூடி டங்ஸ்டன் கனிமத்திட்டத்தால் திட்டப் பகுதிக்குள்ளும், திட்டப்பகுதியை ஒட்டியும் வரும் சுமார் 50 ஊர்களின் குடியிருப்பு பகுதிகள், விவசாயம், பெரியாறு பாசன கால்வாய், நீர்நிலைகள், வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பது குறித்து பேசி முடிவுகள் எடுப்பதோடு, மத்திய மாநில அரசுளுக்கு தங்கள் நிலைப்பாடு குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.
 

போராட்டங்களை மேற்கொள்ளலாம் என்கின்ற ஆலோசனை நடத்தினர்

 
அதே போல் 2015 ஹெக்டேர் அதாவது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமம் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை எடுத்து இருக்கிறது. இதற்கு மேற்கண்ட ஊர் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மேற்கண்ட ஊர்களைச் சார்ந்த பிரதிநிதிகள் அரிட்டாப்பட்டியில் ஒன்று கூடி சுரங்கம் அமையாமல் இருப்பதற்கு என்ன வகையான போராட்டங்களை மேற்கொள்ளலாம் என்கின்ற ஆலோசனை நடத்தினர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.