மேலும் அறிய

மதுரையில் மாணவன் கடத்தல்: சொத்துக்களை எழுதி கேட்டு கொலை மிரட்டல் புகார்..!

தனக்கும்  குடும்பத்தினரின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயிரிழந்த மாணரிவரின் தாயார் புகாரளித்துள்ளார்.

மதுரையில் மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் உயிரிழந்த சூர்யாவின் பெற்றோர் பெயரைச் சொல்லி தன்னிடம் உள்ள சொத்துக்களை எழுதி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவரின் தாயார் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்

பள்ளி மாணவன் கடத்தல்

மதுரையில் கடந்த 11-ம் தேதி தனியார் பள்ளியில் படித்து வரும் பள்ளி மாணவன் ஆட்டோ ஓட்டுநருடன் கடத்தப்பட்ட வழக்கில் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முன்னாள் காவலர் செந்தில்குமார், திருநெல்வேலி மாவட்டம் ரகுமான் பேட்டை சேர்ந்த அப்துல் காதர், தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்த வீரமணி காளிராஜ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 
 
இதில் தொடர்புடையதாக கூறப்படும் சூர்யா என்ற பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த தூத்துக்குடியை சேர்ந்த ஐகோர்ட் மகாராஜனை தனிப்படை காவல்துறையினர் வேறொரு வழக்கில் கைது செய்துள்ளனர். 
 
இந்நிலையில் மாணவனின் தாயார் ராஜலட்சுமி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆணையர் லோகநாதனை சந்தித்து தனக்கு கொலை மிரட்டல் வருவதால் தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி புகார் மனு அளித்தார்

புகார் மனு 

கடந்த 29-ம் தேதியன்று இரவு தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த (உயிரிழந்த) சூர்யாவின் நண்பர் கிஷோர் மற்றும் அவரது நண்பரும் என்னிடம் சூர்யாவின் பெற்றோர் பேச வேண்டும் என தெரிவித்தனர், அப்போது எதற்கு என கிஷோரிடம் கேட்டபோது ”உயிரிழந்த சூர்யா உங்ககிட்ட கொடுத்த  சொத்துக்களை திருப்பி கொடுக்க வேண்டும் என (உயிரிழந்த) சூர்யாவின் பெற்றோர் கூறியதாக” கிஷோர் தெரிவித்தார். 
 
உயிரிழந்த சூர்யா என்னிடம் கடன் பெற்றதற்கான பணத்திற்கு மட்டும்தான் எனக்கு சொத்துக்களை கிரையம் செய்து கொடுத்துள்ளார் என கிஷோரிடம் கூறியதோடு தொந்தரவு அளித்தால் காவல்துறையில் புகார் அளிப்பேன் என சொன்னதற்கு, ”எங்கிட்ட சொல்வது போல சூர்யாவின் பெற்றோர் முன்னாடியெல்லாம் இப்படி பேசிட்டு இருக்காதீங்க எனவும்,  ஐகோர்ட் மகாராஜா ரிமாண்டு ஆகும் போது, அவருக்கும். உங்களுக்கும் தான் பழக்கம், நீங்க சொல்லி தான் குழந்தையை கடத்திட்டு, பழியை சூர்யா மேல தூக்கி போட்டீங்கன்னு வாக்குமூலம் கொடுக்க வச்சுருவாங்களாம் எனவும்,  சூர்யா எழுதிய மாதிரியே லெட்டர். டைரியெல்லாம் ரெடி பண்ணி வச்சுருக்காங்களாம். 
 
அதவச்சு தூத்துக்குடில புகார் கொடுத்து, அவுங்க மருமகன் கலெக்டராக இருக்கிறதுனால உங்களை அலைக்கழிப்பாங்களாம். மேலும் தூத்துக்குடி பக்கம் வரவச்சு ஐகோர்ட் மகாராஜாவை வச்சு உங்க மகனை கடத்துன மாதிரி உங்களையும் கடத்தி கொலை பண்ணிருவாங்க, யோசித்து நாளைக்கு நல்ல முடிவாக கூறுங்கள் என்று மிரட்டி விட்டு சென்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கும்  குடும்பத்தினர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு அந்த மனுவை வழங்கினார்.
 

தலைப்பு செய்திகள்

மதுரையில் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்: தள்ளுமுள்ளு, மக்கள் ஏமாற்றம்!
மதுரையில் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்: தள்ளுமுள்ளு, மக்கள் ஏமாற்றம்!
மதுரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு: பலத்த சோதனைக்கு பின் நடைபெற்றது !
மதுரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு: பலத்த சோதனைக்கு பின் நடைபெற்றது !
மேடையில் யாருமில்லை: அப்செட் ஆன அமைச்சர் நிர்மல்குமார் புறப்பட்டதால் பரபரப்பு!
மேடையில் யாருமில்லை: அப்செட் ஆன அமைச்சர் நிர்மல்குமார் புறப்பட்டதால் பரபரப்பு!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Embed widget