மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( செம்டம்பர் 18, 2025, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதி
மேலூர் சுற்றுவட்டாரப் பகுதி
* மேலவளவு, * பட்டூர், * எட்டிமங்கலம், * சென்னகரம்பட்டி, * கைலாசபுரம்,
* ஆலம்பட்டி, * கேசம்பட்டி, * அன்பில்நகர், * புலிப்பட்டி, * வெள்ளிமலை பட்டி,
* சாணிபட்டி, * அருக்கம்பட்டி, * சேக்கிபட்டி, * கைலம்பட்டி, * தும்பைபட்டி,
* கச்சிராயன்பட்டி, * மணப்பட்டி, * கல்லம்பட்டி, * ராயன்பட்டி, * வஞ்சிநகரம்,
* அரிட்டா பட்டி, * வல்லாளபட்டி, * செட்டியார்பட்டி, * சாம்பிராணிபட்டி,
* கிடாரிபட்டி, * கூலாண்டிபட்டி, * தேர்குன்றான்பட்டி, * அழகாபுரி, * ஆயத்தம்பட்டி,
* மரைக்காயர்புரம், * கோனவராயன்பட்டி, * வேப்பட்டப்பு, * பூஞ்சுத்தி, * சுண்ணாம்பூர்,
* ஆமூர், * இடையபட்டி, * டி.வல்லாளபட்டி, * திருவாதவூர், * கட்டையம்பட்டி, * கொட்டகுடி.
திருப்பரங்குன்றம் தொகுதி
* வலையங்குளம், * எலியார்பத்தி, * நெடுமதுரை, * பாரபத்தி,
* சோளங்குருணி, * நல்லுார், * குசவன்குண்டு, * மண்டேலாநகர்,
* சின்னஉடைப்பு, * வலையபட்டி, * ஓ.ஆலங்குளம், * கொம்பாடி.
அய்யர்பங்களா சுற்றுவட்டார பகுதிகள்
* திருப்பாலை, * நாராயணபுரம், * ஆத்திக்குளம், * அய்யர்பங்களா, * வள்ளுவர் காலனி,
* விஸ்வநாதபுரம், * மகாத்மாகாந்தி நகர், * சிவக்காடு, * முல்லை நகர், * குலமங்கலம்,
* கிருஷ்ணாபுரம்காலனி, * ஆனையூர், * பனங்காடி, * மீனாட்சிபுரம், * பிபிகுளம்,
* மருதுபாண்டியர்நகர், * கண்ணனேந்தல், * சூர்யாநகர், * ஊமச்சிக்குளம், * கடச்சனேந்தல்,
* மண்மலைமேடு,
* விஜய்நகர்,
* கலைநகர்,
* மகாலட்சுமிநகர்,
* உச்சபரம்புமேடு,
* பார்க்டவுன், * பி மற்றும் டி காலனி, * பாமாநகர், * பம்பாநகர், * பொறியாளர்நகர்,
* டி.டபிள்யு.ஏ.டி., * காலனி,* சொட்டிகுளம், * சண்முகா நகர்.
சோழவந்தான்
* சோழவந்தான், * தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், * இரும்பாடி,
* மீனாட்சி நகர், * ஜெயராம் டெக்ஸ், * விஜயலெட்சுமி பேக்டரி, * மவுண்ட் லிட்ரா ஸ்கூல்,
* தாராப்பட்டி, * கச்சிராயிருப்பு, * கீழமட்டையான், * மேலமட்டையான்,
* நாராயணபுரம், * தச்சம்பத்து, * தென்கரை, * முள்ளிப்பள்ளம், * மன்னாடிமங்கலம்,
* அய்யப்பநாயக்கன்பட்டி, * தாமோதரன்பட்டி, * குருவித்துறை, * சித்தாதிபுரம்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.