மேலும் அறிய

மதுரையில் தான் வைத்த மரங்களை இழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட மரங்களின் காதலன்!

குலதெய்வத்தை கொன்னுட்டாங்கம்மா... என கூறி  உயிரை மாய்த்துக்கொண்ட மரங்களின் காதலன் - மறைந்தும் இரு கண்களை தானமாக வழங்கி வாழ்வளித்த நெகிழ்ச்சி.

தன் கையால் நட்ட மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டதால் நொறுங்கிபோன இளைஞரின் இதயம்.

மரங்களின் காதலன்
 
மதுரை மாநகர் முத்துப்பட்டி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி - ஜெகநாதன் தம்பதியினரின் மூத்த மகனான ஜெகதீஷ்குமார். தந்தை இல்லாத நிலையில் தாயின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார் ஜெகதீஸ்குமார். சிறு வயது முதலே மரக்கன்றுகளை நடுவது மரங்களை பராமரிப்பது, பொது இடங்களில் உள்ள மரங்களை காய்ந்து போக விடாமல் காப்பாற்றுவது என எப்போதும் மரம் செடிகள் என வாழ்ந்து வந்துள்ளார். பசுமையான சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவயதில் இருந்தே எங்கு சென்றாலும் கையில் மரக்கன்று மண்வெட்டி, கம்பியோடு செல்வார். மேலும் உயிரினங்கள் மீதும் அதீத பாசம் வைத்திருந்த ஜெகதீஷ் குமார் மதுரை மாநகர் முத்துப்பட்டி, பாண்டியன் நகர், டிவிஎஸ் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதிலும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வரிசையாக மரக்கன்றுகளை நட்டு நாள்தோறும் தண்ணீர் ஊற்றி மரமாக வளர்த்துவந்துள்ளார்
 
மரமே மரணத்திற்கு காரணமாக மாறியுள்ளது.
 
தாயாரின் பராமரிப்பில் வளர்ந்த ஜெகதீஷ் குமார் திருமணம் செய்ய வேண்டும் என தாயார் கூறியபோதும் எனக்கு மரம் செடி வளர்ப்பு, பசுமையான சூழலை உருவாக்கம் என்பது தான் லட்சியம் திருமணம் வேண்டாம் என தவிர்த்து மரம் செடிகளுக்காவே வாழ்ந்து வந்துள்ளார். பொதுமக்கள் வந்துசெல்லும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளார். ஓட்டுனராக பணி புரிந்தாலும் தனது வண்டிகளிலும் எப்போதும் மரக்கன்றுகளை வைத்திருப்பார் எங்கெல்லாம் வண்டியை நிறுத்துகிறாரோ அங்கெல்லாம் மரக்கன்றுகளை நட்டு வைத்து தினசரி பராமரித்து வந்துள்ளார். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எப்போது பார்த்தாலும் மரம் செடிகள் என மரங்களின் காதலனாக இருந்து வந்த ஜெகதீஷ் குமாருக்கு அந்த மரமே மரணத்திற்கு காரணமாக மாறியுள்ளது.
 
நடவடிக்கை எடுக்க புகார்
 
மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் ஜெகதீஷ் குமார் சிறுவயதில் நட்டு வைத்த மரமானது. அப்பகுதி மக்களுக்கு நிழல் தந்து வந்த நிலையில் திடீரென கடந்த வாரம் வேரோடு மரங்கள் பிடுங்கி கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது குறித்து அருகில் உள்ளவர்களிடம் ஏன் மரத்தை வேரோடு சாய்த்தீர்கள் என கேள்வி எழுப்பிய போது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து தனது சமூகவலைதளத்திலும் வீடியோ பதிவிட்டுள்ளார். தான் சிறுவயதில் வைத்த மரங்கள் வேரோடு  பிடுங்கப்பட்ட மரங்கள் வீசப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று மரங்கள் வெட்டி கிடப்பதை பார்த்து இதயம் நொறுங்கிப் போன ஜெகதீஷ் குமார்  மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.
 
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
 
இந்நிலையில் விசாரணைக்காக வந்த காவல்துறையினர் இதெல்லாம் ஒரு பிரச்சனையா தம்பி என  பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஜெகதீஷ் குமாரிடம் விசாரணை என்ற பெயரில் ஆவணங்களை எடுத்து வர கூறிய அடுத்த நொடியில் ஏற்கனவே மரங்களை வேரோடு பிடுங்கியதால் இதயம் நொறுங்கி காணப்பட்ட ஜெகதீஷ் குமார் தன் வீட்டிலிருந்து செடிகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்தை குடித்துள்ளார். அப்போது அங்கு இருந்த சிலர் ஜெகதீஷ் மருந்தை குடிக்கிறார் என காவல்துறையினருக்கு சொன்ன போதும் அவர் மோர் குடிக்கிறார் என அலட்சியமாக கூறியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து அவர் மயங்கிய போது தான் காவல்துறையினர் அவரை மீட்டு ஆட்டோ மூலமாக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த சில  நாட்களாக சிகிச்சையில் இருந்த ஜெகதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
 
தான் இறந்தாலும் தன் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக உடல் உறுப்பு தானம் அளித்திருந்த ஜெகதீஷ் குமார் விஷ மருந்து அருந்த உயிரிழந்ததால் உடல் தானம் செய்ய முடியாத நிலையில் இரு கண்களை மட்டும் தானமாக கொடுக்க தாயார் சம்மதம் தெரிவித்தார். இதன்காரணமாக மரங்களின் காதலன் ஜெகதீஷ் குமார் கண்களை தானமாக கொடுத்து வாழ்வளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget