மேலும் அறிய

தனித்துவமான மேலூர் கரும்புக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

மேலூர் கரும்பிற்கு புவிசார் குறியீடு வழங்குவதால் மதுரை மற்றொரு அடையாளமாக உருவெடுக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கரும்பின் இனிப்பு பின்னால் உள்ள விவசாயிகளின் கடின உழைப்பு - கரும்பு வயலில் உள்ள வாய்க்காலில் வெறும்கால்களுடன் கட்டுகட்டாக கரும்புகளை சுமந்துசெல்லும் கரும்புவெட்டும் விவசாய தொழிலாளர்கள்.
 

மேலூரில் இருந்து வெளியூர்களுக்கு கரும்பு

 
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு உட்பட்ட எட்டிமங்கலம், சுக்காம்பட்டி, கீழையூர், தனியாமங்கலம், மாங்குளம், நாவினிபட்டி, நொண்டிகோவில்பட்டி, பல்லவராயன்பட்டி, சருகு வலையப்பட்டி, வடக்கு வலையப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 900 ஏக்கர் பரப்பளவில் பயிரப்படப்பட்ட கரும்புகள் மும்பை, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது கடைசிக் கட்ட பணி நடைபெற்று வருகிறது. மேலூர் கரும்புகள் அதிக இனிப்பு சுவையுடையது என்பதால் நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மேலூர் கரும்புகளுக்கு வரவேற்பு உள்ள நிலையில்  ஏராளமான தொழிலாளர்கள் கரும்புகளை வெட்டி லாரிகள் மூலமாக அனுப்பி வைத்தனர். இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தாலும்  குறைவாக பயிரிடப்பட்டதால் கடந்தாண்டை விட கரும்புவின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தகவல்  தெரிவித்துள்ளனர்.
 

கரும்புக்கு பின்னால் இருக்கும் உழைப்பு

 
கரும்புகளை அனுப்பும் பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாய தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு கரும்புகளை கடும் சிரமத்தோடு வயல்வெளிகளில் மண்கட்டிகள் மற்றும் வரப்புகளில் காலில் காலணி கூட இல்லாமல் 15 கரும்புகள் அடங்கிய கட்டுகளை வேகமாக சுமையோடு ஓடோடி சென்று வாய்க்காலில் நடந்துசெல்லும் சிறு மரப்பலகையில் நடந்தபடி லாரிகளில் கரும்புகளை ஏற்றிவைக்கின்றனர். கரும்புகட்டுகளின் அடிப்படையில் சொற்ப ஊதியமே கிடைக்கும் நிலையிலும் கழுத்து வலியோடு் கரும்புகட்டுகளை லாரியில் ஏற்றும் கழுத்தே உடையும் அளிவிற்கு அவசரவசரமாக ஏற்றும் பணிகளில் ஈடுபடுகின்றனர். கரும்பு விவசாய இடத்தில் உள்ள கரும்புகளை வெட்டி எடுத்து, அதனை கட்டாக கட்டி கையில் கரும்புதோகையின் சொனை ஒட்டும் நிலையில் கடின உழைப்பை வெளிப்படுத்துகின்றனர். இப்படி பல்வேறு உழைப்பிற்கு பின் இல்லங்களுக்கு இனிப்பாக சென்றடையும், மேலூர் கரும்புக்கு புவிசார் குறியீடு வேண்டும் என சொல்லப்படும் Geographical indication (புவியியல் சார்ந்த குறியீடு) வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

மேலூர் கரும்பிற்கு புவிசார் குறியீடு

 
இதுகுறித்து மேலூர் கரும்பு விவசாயி ஸ்டாலின் பாஸ்கரன் கூறுகையில்...,” தமிழகத்தில் பல பகுதியில் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. ஆனாலும் மேலூர் கருப்பிற்கு தற்போதும் மவுசு குறையாமல் இருக்கிறது. காரணம் இப்பகுதியில் இருக்கும் மண் வளம் மற்றும் நீர் வளம் தான். இயற்கையாகவே பல்வேறு வளத்தை மேலூர் பகுதி பெற்றுள்ளதால் தான் கிரானைட், டங்ஸ்டன் போன்ற கனிமங்களை எடுக்க இப்பகுதியை தேர்வு செய்கின்றனர். மேலூர் கரும்பை முறையாக வளர்த்தால் உயரம், தடிமன், கருமை நிறம் சிறப்பாக இருக்கும். இதனுடன் கரும்பு அதிகமான இனிப்பு சுவை மற்றும் கடித்து இழுக்க இலகு வான பட்டை இருப்பதால் மேலூர் கரும்பு தனித்துவம் பெருகிறது. எனவே அதிகாரிகள் மேலூர் கரும்புகளை முறையாக ஆய்வு செய்து புவிசார் குறியீடு வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் எங்கள் பகுதியின் விளைபொருள் பல இடங்களில் கிடைக்கும். விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும். அதே போல் மதுரை மாவட்டத்திற்கு மற்றொரு பெருமையும் சேரும்” என்றார்.
 

தலைப்பு செய்திகள்

காரைக்குடியில் MIW WATER அதிசயம்: தினமும் 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு!
காரைக்குடியில் MIW WATER அதிசயம்: தினமும் 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு!
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
மதுரை ஆலமரத்தின் 107வது பிறந்தநாள்: பாதுகாப்புக்கு விழிப்புணர்வு தேவை!
மதுரை ஆலமரத்தின் 107வது பிறந்தநாள்: பாதுகாப்புக்கு விழிப்புணர்வு தேவை!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget