Jallikattu : நாட்டின மாடுகளை காப்பாற்ற இப்படியொரு முயற்சியா... இளைஞரின் புது ஐடியா
”தொடர்ந்து இந்த முயற்சியை பலரும் செய்ய வேண்டும், என்பதுதான் என்னோட விருப்பம். அதுதான் ஒரு முழுமையான வெற்றியை கொடுக்கும்” என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.

மதுரை ஜல்லிக்கட்டு போராட்டம்:
வெற்றிபெறும் காளைக்கு பரிசு:
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் சேர்ந்த பொன்.குமார் இயற்கை ஆர்வலர். மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு களப்பணிகளை செய்துள்ளார். ஏப்ரல் மாதங்களில் ஏப்ரல் ஃபூல் இல்லை ஏப்ரல் கூல் என மாற்றி ஏப்ரல் மாதத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை நடவு செய்து வருகிறது. மியா வாக்கி முறை, நாட்டு மரங்கள் நடவு என இயற்கை மீதான அவரது காதல் நீண்டது. ஜல்லிக்கட்டு மீதும், நாட்டு இன மாடுகள் மீது கொண்ட விழிப்புணர்வு காரணமாக பிரசித்திபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைகளுக்கு பசுவும், கன்றும் வழங்கி வருகிறார். இந்தாண்டு 2025-ஆம் ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் 6-வது முறையாக காங்கேயம் நாட்டின பசுவும், கன்று வழங்க உள்ளார். தொடர்ந்து 6-வது முறை ஏ2 ரக பால் கொடுக்கும் பசுவும் கன்று கொடுப்பது வரவேற்பை பெற்று வருகிறது.
நாட்டினங்களை காப்பாற்ற முயற்சி:
இது குறித்து பொன்.குமார் நம்மிடம் பேசுகையில்...," காங்கேயம், உம்பளச்சேரி, தேனி மலைமாடு, புலிக்குளம், ஆலம்பாடி, பர்கூர் என பல்வேறு வகையான நாட்டின மாடுகள் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட அளவிற்கு மட்டும்தான் தற்போது இந்த நாட்டு இனங்கள் உள்ளது. பல நாட்டின இனங்கள் அழிந்து வருகிறது. அதன் பெயர்கள் கூட வெளியில் தெரியவில்லை.
இதனை நாம் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் இப்போது தொடர்ந்து நாட்டு இன பசுவும், கன்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு வழங்கி வருகிறேன். பாலமேடு மஞ்சமலைசாமி முன்னிலையில் நடத்தப்படும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் கிராம கமிட்டி தொடர்ந்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி வருகிறார்கள். இதனால் நான் ஆண்டுதோறும் இதனை செய்து வருகிறேன். ஜல்லிக்கட்டுகளில் கார், பைக் கொடுப்பதை காட்டிலும் இதுபோன்ற நாட்டினத்தை மீட்டெடுக்கும் முயற்சி செய்வது, ஆரோக்கியமான சமுதாயமாக மாறும் என நம்புகிறேன்.





















