மேலும் அறிய
சிவகங்கை ஆகாஷ் மரணம்: நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு.. தந்தை கோரிக்கை, காவலர்கள் சஸ்பெண்ட் - பரபரப்பு தகவல்!
நிதி இல்லை எனக்கூறினால் ஏற்க இயலாது" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஆகாஷ் டெலீசன்
Source : whatsapp
சிவகங்கை, மானாமதுரை ஆகாஷ் மரண விவகாரம்: வழக்கில் தீர்ப்பை பிறப்பிப்பதற்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து மதுரை அமர்வு உத்தரவு.
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் சீயோன் நகரில் கடந்த 5-ஆம் தேதி இரவு, இருவராக இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பானது. இந்த சம்பவத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த மானாமதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூர் அழகர்சாமி ஆகிய இருவரும் காயமடைந்தனர். இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஆகாஷ் டெலிசன்(26) மற்றும் குணா (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆகாஷ்டெலிசனை தேடும்போது கீழே விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இதையடுத்து மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவகங்கை அரசு மருத்துவமனை சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாலை ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து ஆகாஷ்டெலிசனின் உடலானது உடற் கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மானாமதுரையில் 4 நாட்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நீதிமன்றம் உத்தரவுபடி தொடர் போராட்டமானது கைவிடப்பட்டது.
நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் உயிரிழந்த ஆகாஷின் டெலிசனின், தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை அமர்வில் பல்வேறு கோரிக்கை முன்வைத்து மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி விக்டொரியா கௌரி முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "பெற்றோர் ஆகாஷின் உடலை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை" என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், "இடைக்கால நிவாரணமாக 6 லட்சம் ரூபாய் தற்போது வழங்கப்பட்டுள்ளது. 12 லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருக்க வேண்டும். பரவாயில்லை" என தெரிவித்தார். தொடர்ந்து, "தடய அறிவியல் துறை மாணவர்கள், அரசு பிணவறையில் உடற்கூராய்வு செய்ய வேண்டுமென விரும்புகின்றனர். இதற்கென தனியார் மருத்துவ கல்லூரிகள் பெருமளவிலான தொகையை அரசுக்கு வழங்குகின்றன. ஆகவே போதுமான பணம் உள்ளது. நிதி இல்லை எனக்கூறினால் ஏற்க இயலாது" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஆகாஷ் கொலை வழக்கில் ஆறு பேர் அதிரடி சஸ்பெண்ட்
இந்த சூழலில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் ஆறு பேர் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீலிபன் காவல் ஆய்வாளர், குகன் காவல் சார்பு ஆய்வாளர், தேவேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார், மனோகரன் ஆகிய ஆறு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















