மேலும் அறிய

Tungsten Protest: டங்ஸ்டன் திட்டம் ரத்து; போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி - சமூக ஆர்வலர் பெருமிதம்

டங்ஸ்டன் திட்டம் கொண்டுவரப்படாது என, மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். மக்களின் போராட்ட சக்திக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.

மேலூர் பகுதியில் டங்ஸ்டன்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி,சண்முகநாதபுரம், எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்திருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யும்வரை  தொடர் போராட்டம் செய்யப் போவதாக அரிட்டாபட்டி  மக்கள் முடிவெடுத்து கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
 
 

மலை பகுதியில் அமர்ந்து போராட்டம்

 
தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான இப்பகுதியை அழிக்கும் வகையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைத்து ஏலம் விட முயற்சிக்கும் மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த கிராம சபை கூட்டத்தில் மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தில் தமிழக அரசு டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தனர். இத்திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்க உள்ளோம் என, அரிட்டாபட்டி கிராம மக்கள் அங்குள்ள மலை பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
 

திருப்பத்தை ஏற்படுத்திய தமுக்கம் போராட்டம்

இந்நிலையில் மக்கள் போராட்டம் பெரியளவில் வெடிக்க ஆரம்பித்தது. மத்திய அரசுக்கு கீழ் செயல்படும் தமுக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டமாக மாறியது. அதனால் தமுக்கம் திக்குமுக்காடியது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.., மாநிலத் தலைவர் அண்ணாமலை அரிட்டாபட்டி, வல்லாளபட்டி கிராமத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் பேசினார். அப்போது நிம்மதியாக பொங்கல் கொண்டாடுங்கல் கண்டிப்பாக நல்ல செய்திவரும் டெல்லிக்கு விவசாயிகளை அழைத்துச் செல்கிறோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு டாங்ஸ்டன்ட் திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவித்தது. இதைத், தொடர்ந்து அ. வெல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, தெற்குதெரு  உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கும்மியடித்து, கொண்டாடி வருகின்றனர்.
 

மக்கள் போராட்டம் வென்றது

 
மேலும் இந்த டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராட்ட குழுவில் இருந்துவரும் சமூக ஆர்வலர் கம்பூர் செல்வராஜிடம் பேசியபோது அவர் கூறுகையில், “டங்ஸ்டன் திட்டம் கொண்டுவரப்படாது என, மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தீர்மானம் கொண்டுவந்த தமிழ்நாடு அரசுக்கு, திட்டத்திற்கு தடை விதித்த மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். முக்கியமாக போராட்டத்திற்கு வந்த கிராம மக்களுக்கும் நன்றி. மக்களின் போராட்ட சக்திக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்” என தெரிவித்தார்.
 
 
 

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget