மேலும் அறிய
மதுரையில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட காவலர் உடல் நல்லடக்கம்
விரைவில் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

21 குண்டுகள் முழங்க காவலரின் உடல்
Source : whats app
உசிலம்பட்டி அருகே படுகொலை செய்யப்பட்ட காவலர் உடல் கடும் போராட்டத்திற்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட காவலர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் நேற்று முன்தினம் டாஸ்மார்க் கடை அருகில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலின்போது காவலருடன் உடனிருந்த அவரது உறவினரான ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க கோரியும், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவலரின் உடல் வைக்கப்பட்டிருந்த, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டியில் போராட்டம்
தொடர்ந்து உடற்கூறாய்வு முடிந்த காவலரின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், பார்வட் ப்ளாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கதிரவன், பார்வட் ப்ளாக் தலைவர் முருகன் ஜீ தலைமையிலான நிர்வாகிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மட்டுமல்லாது உசிலம்பட்டி தேவர் சிலை முன்பும் ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. அஷிஷ் ராவத், உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
21 குண்டுகள் முழங்க காவலரின் உடல்
இந்த சூழலில் இன்று திமுக சார்பில் 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், அரசின் நிவாரண நிதி மற்றும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உசிலம்பட்டி திமுக நிர்வாகிகள் உறுதியளித்தை அடுத்து காவலரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக சொந்த ஊரான கள்ளப்பட்டி மயானத்திற்கு காவலரின் பூத உடல் கொண்டு செல்லப்பட்டு விருதுநகர் மாவட்ட எஸ்.பி., கண்ணன் தலைமையில் காவல்துறையின் அரசு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க காவலரின் உடல் உறவினர்கள் முன்னிலையில் எரியூட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. விரைவில் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காஞ்சிபுரம் பட்டு முதல் காட்டன் சேலை வரை அதிரடி ஆஃபர்- எங்கு தெரியுமா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கொலை வழக்கு தொடர்பாக பணியில் அலட்சியம்; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















