மேலும் அறிய
காஞ்சிபுரம் பட்டு முதல் காட்டன் சேலை வரை அதிரடி ஆஃபர்- எங்கு தெரியுமா?
மகளிருக்காக சுடிதார் ரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலைகள் பார்வையிட்டார்
Source : whats app
மதுரை வெங்கலக்கடைத் தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கயற்கண்ணி விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, கோ-ஆப்டெக்ஸ்ரமலான் மற்றும் ஆண்டு இறுதி 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்
தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்ததாவது..,” கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 90 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.
சேலை வகைகள் என்ன இருக்கிறது
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம் பட்டு, சேலம் பட்டு, திருப்புவனம் பட்டு, கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள் கண்டாங்கிச் சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், காஞ்சி காட்டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன், அருப்புகோட்டை காட்டன் மற்றும் ஆர்கானிக் காட்டன் சேலை ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் பருத்தி (Linen/Cotton) சட்டைகள், காட்டன் சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும் மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது.
இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்
கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க ரமலான் தினத்தினை முன்னிட்டு பட்டு, பருத்தி போன்ற அனைத்து ரகங்களுக்கும் 20.03.2025 முதல் 31.03.2025 வரை 30% சிறப்புத் தள்ளுபடி மற்றும் குறிப்பிட்ட 3 பொருட்களை ஒன்றாக வாங்கினால் 33.3% சிறப்பு தள்ளுபடி (Buy 2 Get 1 Free) அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. கோ.ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். ரமலான் மற்றும் ஆண்டு இறுதி சிறப்பு விற்பனையினை முன்னிட்டு 31.03.2020 வரை அனைத்து நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும் என்று என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அதிகாரிகள்
இந்நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் S.மாணிக்கம், மேலாளர் (இரகம் & பகிர்மானம்) திரு.R.செந்திவேல், கோ-ஆப்டெக்ஸ் முன்னாள் கோ.ஆப்டெக்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.ச.க.ஸ்டாலின், மேலாளர் S.பாடலிங்கம், துணை மண்டல மேலாளர், A.தீபா, திரு.K.மணிவண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க - கொலை வழக்கு தொடர்பாக பணியில் அலட்சியம்; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ’வீர தீர சூரன்’ வெளியாகாததால் சோகத்தில் சீயான் விக்ரம் ரசிகர்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion