மேலும் அறிய

மீண்டும், மீண்டுமா.. யாருப்பா நீங்க, மதுரை மாநகராட்சி சமுதாய கூடத்திற்கு வந்த சோதனை.. சீல் வைத்த அதிகாரிகள் !

மதுரையில் சமுதாயக் கூடத்தை வாடகைக்கு விட்டு 10 ஆண்டாக வருமான ஈட்டிய முன்னாள் கவுன்சிலர் - மீண்டும் முயற்சியால் சீல்.

கடந்த பத்து ஆண்டுகளாக மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடத்தை மாஜி கவுன்சிலர் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து, வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சியால் சீல் வைக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் மோசடி    
 
100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் அதிகளவு மக்கள் தொகை கொண்டுள்ளது. இந்த சூழலில் மாநாகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கட்டங்களுக்கு வரிகுறைப்பு செய்து மோசடி நடைபெற்றது, பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 5 மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 நபர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பில்கலெக்டர்கள் முதல் மேல் அதிகாரிகள் வரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்த சூழலில் கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி சமுதாயக்கூடத்தை முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அரசியல் கட்சியினர் பிடியில் சமுதாயக்கூடம்
 
மதுரை மாநகராட்சியின் கீழ் 50-க்கும் மேற்பட்ட சமுதாயக் கூடங்கள் செயல்படுகின்றன. இந்த சமுதாயக் கூடங்களின் நிர்வாகப் பொறுப்பையும், பராமரிப்பையும் அந்தந்த பகுதி உதவிப் பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர். சமீபகாலமாக சில வார்டுகளில் இது போன்ற சில சமுதாயக்கூடங்கள், மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமலேயே பொது மக்களுக்கு வாடகைக்கு விடப்படுவதாகவும், அதன் பின்னணியில் அப்பகுதியில் செல்வாக்கு படைத்த அரசியல் கட்சியினர் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. தற்போதைய ஆணையர் சித்ரா, இதுபோன்ற சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சியினரின் பிடியில் இருந்து மீட்டு, மீண்டும் மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கொண்டிருக்கிறார். 
 
மின் இணைப்பையே தனி நபர் பெயருக்கு மாற்றி பயன்பாடு
 
இதற்காக ஆணையர் ஆய்வு மேற்கொண்டபோது, மண்டலம்-3-ல் உள்ள 54-வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் ஒன்று, கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகத்திலேயே இல்லாமல் இருந்ததும், அதன் வருவாய் மாநகராட்சிக்கு செலுத்தப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார். அதனடிப்படையில் தெற்கு வெளி வீதி அருகே குப்புபிள்ளை தோப்பு 2-வது தெருவில் உள்ள அந்த மாநகராட்சி சமுதாயக்கூடத்தை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அப்போது, முன்னாள் கவுன்சிலர் ஒருவர் அந்த சமுதாயக்கூடத்தின் மின் இணைப்பையே தனி நபர் பெயருக்கு மாற்றி, தனியார் மண்டபம் போல் அவரே நிர்வாகம் செய்து வந்ததும் தெரியவந்தது. ஆணையர் சித்ரா, உடனடியாக அந்த சமுதாயக் கூடத்தை மீட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். ஆணையரின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
 
சமுதாயக் கூடம் விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
 
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ”சமுதாயக்கூடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த முன்னாள் கவுன்சிலர் வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அங்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். கடந்த காலத்தில் அதிகாரிகள் கண்காணிக்காமலேயே விட்டுவிட்டதால், இந்த சமுதாயக் கூடத்துக்கு தனியார் மண்டபம் போல் வண்ணங்கள் பூசி பராமரித்து வந்துள்ளனர். அதனால், இந்த மண்டபம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்பதை மக்களும், அதிகாரிகளும் மறந்து விட்டனர். தற்போது சொத்துவரி தொடர்பாக ஆணையர் அனைத்து கட்டடங்களையும் ஆய்வு செய்தபோது தனி நபர் கட்டுப்பாட்டில் இருந்த இந்த சமுதாயக் கூடம் விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்றார்.
 
மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்பு?
 
இந்த சூழலில் சமுதாயக்கூடம் மீட்கப்பட்ட நிலையில் மாநகராட்சி சமுதாயக்கூடம் என பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த பேனர்கள் கிழிக்கப்பட்டது. மீண்டும், மீண்டும் சமுதாயக்கூடத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர் என பொதுமக்கள் தரிப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழலில் அதிகாரிகள் மீண்டும் வந்து சம்மந்தப்பட்ட நபர்களை எச்சரித்து சமுயாக்கூடத்திற்கு சீல் வைத்தனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
Embed widget