மேலும் அறிய

மதுரை மாநகராட்சி சொத்து வரியில் 200 கோடி இழப்பு ; சிபிஐ விசாரணைக்கு மாறுமா? பரபரப்பு தகவல் !

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது தொடர்பாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பதில் மனுவாக தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவு.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது - அரசுத்தரப்பு.

மதுரை மாநகராட்சியில் மோசடி  
 
100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் அதிகளவு மக்கள் தொகை கொண்டுள்ளது. இந்த சூழலில் மாநாகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கட்டங்களுக்கு வரிகுறைப்பு செய்து மோசடி நடைபெற்றது, பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 5 மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 நபர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பில்கலெக்டர்கள் முதல் மேல் அதிகாரிகள் வரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேட்டில் ”பாஸ்வேர்டை மேலதிகாரிகள் திருட்டுத்தனமாக பயன்படுத்தினார்கள்” - என பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்களின் குற்றஞ்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
பொதுநல வழக்கு
 
மதுரை 83 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சமீபத்தில் மதுரை மேயர் தலைமையில் பெரிய அளவிலான சொத்து வரி முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதனால் பலரும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு முறையான வரியை செலுத்தாதது தெரியவந்தது. இதனால் மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று விசாரணை குழு அமைக்கப்பட்டது.  மாநகராட்சி ஆணையர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவும் செய்யப்பட்டது.
 
200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது
 
2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை மேயர் மற்றும் மண்டல குழு தலைவர்களுக்கு தெரிந்தே இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. கட்டடத்தின் அளவை குறைவாக காட்டுவது, வணிக கட்டடங்களை, பகுதி வணிக கட்டடங்களாக காட்டுவது, கட்டடங்களில் சில மாற்றங்களை செய்வது ஆகியவற்றின் மூலம் வரிக்குறைப்பு செய்ததன் மூலமாக மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களும், மாநகராட்சி அலுவலர்களும் பயன் பெற்றுள்ளனர். வழக்கை விசாரிக்கும் காவல்துறையினரும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கை மதுரை மாநகர காவல் துறையினர் விசாரித்தால் உண்மை வெளிவராது. ஆகவே மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
 
நடவடிக்கைகள் குறித்தும் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு
 
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், "சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது தொடர்பாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Red Fort Blast: வெடித்து சிதறிய ஹுண்டாய் i20 கார், உரிமையாளர் கைது - அதிர்ந்த டெல்லி, குண்டு வெடிப்பு அப்டேட்
Red Fort Blast: வெடித்து சிதறிய ஹுண்டாய் i20 கார், உரிமையாளர் கைது - அதிர்ந்த டெல்லி, குண்டு வெடிப்பு அப்டேட்
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
Bihar Election 2025: பீகாரில் எதிரொலிக்குமா டெல்லி வெடிப்பு? 2ம் கட்ட வாக்குப்பதிவு, 122 தொகுதிகள், 3.7 கோடி மக்கள்
Bihar Election 2025: பீகாரில் எதிரொலிக்குமா டெல்லி வெடிப்பு? 2ம் கட்ட வாக்குப்பதிவு, 122 தொகுதிகள், 3.7 கோடி மக்கள்
Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!
Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்
Christmas Cake Making | வந்தாச்சு கிறிஸ்துமஸ்!தனியார் சொகுசு ஹோட்டலில் தயாராகும் 200 கிலோ CAKE
90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Red Fort Blast: வெடித்து சிதறிய ஹுண்டாய் i20 கார், உரிமையாளர் கைது - அதிர்ந்த டெல்லி, குண்டு வெடிப்பு அப்டேட்
Red Fort Blast: வெடித்து சிதறிய ஹுண்டாய் i20 கார், உரிமையாளர் கைது - அதிர்ந்த டெல்லி, குண்டு வெடிப்பு அப்டேட்
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
Bihar Election 2025: பீகாரில் எதிரொலிக்குமா டெல்லி வெடிப்பு? 2ம் கட்ட வாக்குப்பதிவு, 122 தொகுதிகள், 3.7 கோடி மக்கள்
Bihar Election 2025: பீகாரில் எதிரொலிக்குமா டெல்லி வெடிப்பு? 2ம் கட்ட வாக்குப்பதிவு, 122 தொகுதிகள், 3.7 கோடி மக்கள்
Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!
Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!
சேரன் நடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த பாண்டிராஜ் - என்ன நடந்தது?
சேரன் நடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த பாண்டிராஜ் - என்ன நடந்தது?
Operation Sindoor 2.0: டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்! ”இந்த முறை விடக்கூடாது” டிரெண்டாகும் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0..
Operation Sindoor 2.0: டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்! ”இந்த முறை விடக்கூடாது” டிரெண்டாகும் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0..
 செவ்வாய் பெயர்ச்சி - நீங்கள்தான் ராஜா!
 செவ்வாய் பெயர்ச்சி - நீங்கள்தான் ராஜா!
Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
Embed widget