மேலும் அறிய

Madurai: கேரளாவிற்கு கடத்தப்பட்ட ரேசன் அரிசி.. மடக்கி பிடித்த போலீசார்.. 4 பேர் அதிரடி கைது

கண்டெய்னர் லாரியுடன் வந்த காரை சோதனை செய்து பார்த்த போது அதில்  நான்கு இலட்சம் ரூபாய் பணம் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மதுரையில் இருந்து கேரளாவிற்கு கண்டெய்னர் லாரியில் 24,700 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சியில்   9பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த 494 மூட்டைகள் அரிசி மற்றும் 4 லட்சம் பணம் பறிமுதல் செய்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் அதிரடி.
 

மதுரையில் இருந்து கேரளாவிற்கு அரசி கடத்தல்

மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர்  இனிக்கோ திவ்யன்  அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை சரகம் காவல் துணை கண்காணிப்பாளர்  செந்தில் இளந்திரையன் தலைமையில்  மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி புறக்காவல் நிலையம் அருகில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக வாகன சோதனை நடைபெற்றது.
 
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த  கண்டெய்னர்  லாரியை சோதனை செய்து பார்த்த போது அதில் தலா சுமார் 50 கிலோ எடை கொண்ட 494 சாக்குகளில் ரேசன்  24 ஆயிரத்தி 700 கிலோ ரேசன் புழுங்கல் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.
 

கடத்தில் ஈடுபட்ட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்

இதனையடுத்து கண்டெய்னர் லாரியுடன் வந்த காரை சோதனை செய்து பார்த்த போது அதில்  நான்கு லட்சம் ரூபாய் பணம் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரேசன் அரிசியை மூட்டைகளில் அடைத்து கேரளாவிற்கு கடத்த முயன்றதாக அரிசி உரிமையாளரான மதுரை மேல அனுப்பானடி கதிர்வேல், கன்னியாகுமரி மாவட்டம் புல்லயான்விளை முருகதாஸ், பாறைசாலை பகுதியை சேர்ந்த சிஜி, ஜோஷ்வா, அஷின்ஷா, கேரள மாநிலம் எர்ணாகுளம் டான் வர்கிஸ், மதுரை பேச்சிக்குளம் பாலசுப்ரமணியன், லாரி ஓட்டுனரான பாண்டிச்சேரி மாநிலம் சூரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், லாரி்கிளீனரான லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த குமார் ஆகிய 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
 
பின்னர் இந்த அரிசி கடத்தல் வழக்கில்  அரிசி உரிமையாளரான முருகதாஸ்,  பாலசுப்பிரமணியன், லாரி ஓட்டுனர் மணிகண்டன், கிளீனர் குமார் ஆகிய 4பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 
 

அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்கலாம்

மேலும் இது போன்று குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர் அதிரடி சோதனை நடைபெறும் எனவும் குற்றவாளிகள் மீது கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் மற்றும் காவல்துறை தலைவர்  ஜோஷி நிர்மல் குமார் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உணவுப்பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 1800-599-5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு புகார் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget