மேலும் அறிய

மதுரை ஆலங்குளம், செல்லூர் கண்மாய் மற்றும் பந்தல்குடி கால்வாய் நிரம்பி தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுப்பு

மதுரை மாநகரில் வெளுத்து வாங்கிய கனமழை - மதுரை ஆலங்குளம், செல்லூர் கண்மாய் மற்றும் பந்தல்குடி கால்வாய் நிரம்பி தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுப்பு - மூழ்கிய குடியிருப்பு பகுதிகள்.

மதுரையில் கனமழை
 
மதுரை மாநகரில் நேற்று மதியம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக திடீரென கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை  வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதியான ஆலங்குளம், செல்லூர் கண்மாய்கள் நிரம்பி பந்தல்குடி கால்வாய்களில் நரம்பியது இதனால் நேற்றிரவு முதல் நீர் நிரம்பி தெருவுக்குள் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதன் காரணமாக முல்லைநகர், செல்லூர், 50 அடி ரோடு, கட்டபொம்மன் நகர், நரிமேடு, பந்தல்குடி, குடியிருப்பு பகுதிகள் முழுவதிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் அவசர அவசரமாக உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர். பந்தல்குடி கால்வாயில் இருந்து வெளியேறக்கூடிய நீர் ஒவ்வொரு வீடுகளில் முன்பாக முழங்கால் அளவிற்கு சிறு வெள்ளம் போல பெருக்கெடுத்து மழை நீர் ஓடுகிறது. செல்லூர் மற்றும் தத்தனேரி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியதோடு நரிமேடு பகுதியில் அமைந்துள்ள 3க்கும் மேற்பட்ட பள்ளிகள் நீரில் மூழ்கியதோடு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் நீரில் மூழ்கியது. மதுரை செல்லூர் முல்லைநகர் நரிமேடு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர்.
 
மழை நீரை விரைவாக அகற்றுவதற்கு போர்க்கால அடிப்படைகள் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
 
மதுரையில் ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி...,” மதுரையில் கடந்த தினங்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் (25.10.2024) மட்டும் ஒரே நாளில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத மிக கனமழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை மாநகரக்குட்பட்ட சில தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. நேற்று மாலையிலிருந்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, மாநகராட்சி நிர்வாகம் என மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறை அலுவலர்களும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
 
அடிப்படைகள் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
 
மழைநீர் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் 1000 பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று தங்கினர். இரண்டு இடங்களில் மட்டும் தலா 35 வீதம் மொத்தம் 70 நபர்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பால், உணவு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக தற்காலிக கால்வாய் அமைக்கப்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை விரைவாக அகற்றுவதற்கு போர்க்கால அடிப்படைகள் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
Embed widget