மேலும் அறிய

வீட்டை விற்று சாப்பிடும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள்!

ஊரடங்கு கட்டுப்பாடு, கொரோனா இரண்டாம் அலை , தொடரும் வேலை இழப்பு என அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் கேரள தோட்டத் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் பரவும் இரண்டாம் கட்ட அலை எதிரொலி , தொடரும் வேலை இழப்பு , அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லை என கேரள தோட்டத் தொழிலாளர்கள் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வீட்டை விற்று சாப்பிடும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள்!
தமிழக-கேரள எல்லையை இணைக்கும் மாவட்டங்களில் ஒன்றாக தேனி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே இருந்து வருகிறது. அது போக  தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ளதால் பல்வேறு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களும் நடந்து வருகிறது. போடி, கம்பம் ,தேவாரம் ,கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள் கேரளாவில் உள்ள ஏல தோட்ட வேலைகளுக்காக தமிழகத்திலிருந்து கம்பமெட்டு , குமுளி மற்றும் போடி மெட்டு வழியாக ஜீப்புகளில் சென்று வருகின்றனர். இன்னிலையில் கடந்த ஆண்டின் கொரோனா பாதிப்பிலிருந்து மீளமுடியாத நிலையில் தற்போது இரண்டாம் கட்ட அலையாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் எதிரொலியாக தமிழக கேரள எல்லைகளில் இரு மாநில போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

வீட்டை விற்று சாப்பிடும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள்!

கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுப்பதற்கு இரு மாநில அரசுகளும் முழு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆதலால் இப்பகுதியில் இருந்து அதாவது தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது தினசரி அத்தியாவசிய தேவைகளுக்கு போதிய வருமானமின்றி சிரமப்படுவதாகவும் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க தோட்ட வேலைகளுக்கு சென்று திரும்பி வந்தால் மட்டுமே தினசரி ஊதியம் என்ற நிலையில் இப்பகுதியில் உள்ள பெண்கள் தங்களது குடும்ப நிலைக்காக மகளிர் குழுக்கள் வங்கிகள் போன்ற நிறுவனங்களில் கடனுதவி பெற்று திருப்பி செலுத்த முடியாத நிலையில் தற்போது மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு கடுமையாக தொந்தரவு செய்வதாக புகார் தெரிவித்தும் வேதனை அடைந்துள்ளனர்.

வீட்டை விற்று சாப்பிடும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள்!

தமிழக அரசு மகளிர் குழுக்கள் வங்கிகள் போன்ற நிறுவனங்களில்  மாதச் சந்தா கட்டுவதற்கு கூடுதல் கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் மகளிர் குழு மற்றும் இதர வங்கி நிறுவனங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தினசரி ஊதியம் கிடைத்தால் மட்டுமே தங்களுக்கு வாழ்வாதாரம் என இருக்கும் குடும்பங்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தோட்டத் தொழிலாளர்கள் சொல்ல முடியாத அளவிற்கு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இது மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. குழந்தைகளுடன் உணவுக்கு சிரமப்படுகின்றனர். வெளிமாநில பணி என்பதால், இங்கு அவர்களுக்கு உதவ ஆளில்லை. மாற்று வேலையும் தேட முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். 

 
 

தலைப்பு செய்திகள்

மீனாட்சியம்மன் கோ ல் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மீனாட்சியம்மன் கோயில் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!
மின்சாரத் துறை சீரமைப்பு, 15,000 வேலைகள்: ஊழல் அம்பலமாகும் - அமைச்சர் நிர்மல் குமார்!
மின்சாரத் துறை சீரமைப்பு, 15,000 வேலைகள்: ஊழல் அம்பலமாகும் - அமைச்சர் நிர்மல் குமார்!
ராமேஸ்வரத்தில் பழைய ரயில் பெட்டிக்கு மறு அவதாரம்: அசத்தும் உணவகம் திறப்பு!
ராமேஸ்வரத்தில் பழைய ரயில் பெட்டிக்கு மறு அவதாரம்: அசத்தும் உணவகம் திறப்பு!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Embed widget