மேலும் அறிய

வீட்டை விற்று சாப்பிடும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள்!

ஊரடங்கு கட்டுப்பாடு, கொரோனா இரண்டாம் அலை , தொடரும் வேலை இழப்பு என அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் கேரள தோட்டத் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் பரவும் இரண்டாம் கட்ட அலை எதிரொலி , தொடரும் வேலை இழப்பு , அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லை என கேரள தோட்டத் தொழிலாளர்கள் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வீட்டை விற்று சாப்பிடும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள்!
தமிழக-கேரள எல்லையை இணைக்கும் மாவட்டங்களில் ஒன்றாக தேனி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே இருந்து வருகிறது. அது போக  தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ளதால் பல்வேறு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களும் நடந்து வருகிறது. போடி, கம்பம் ,தேவாரம் ,கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள் கேரளாவில் உள்ள ஏல தோட்ட வேலைகளுக்காக தமிழகத்திலிருந்து கம்பமெட்டு , குமுளி மற்றும் போடி மெட்டு வழியாக ஜீப்புகளில் சென்று வருகின்றனர். இன்னிலையில் கடந்த ஆண்டின் கொரோனா பாதிப்பிலிருந்து மீளமுடியாத நிலையில் தற்போது இரண்டாம் கட்ட அலையாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் எதிரொலியாக தமிழக கேரள எல்லைகளில் இரு மாநில போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

வீட்டை விற்று சாப்பிடும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள்!

கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுப்பதற்கு இரு மாநில அரசுகளும் முழு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆதலால் இப்பகுதியில் இருந்து அதாவது தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது தினசரி அத்தியாவசிய தேவைகளுக்கு போதிய வருமானமின்றி சிரமப்படுவதாகவும் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க தோட்ட வேலைகளுக்கு சென்று திரும்பி வந்தால் மட்டுமே தினசரி ஊதியம் என்ற நிலையில் இப்பகுதியில் உள்ள பெண்கள் தங்களது குடும்ப நிலைக்காக மகளிர் குழுக்கள் வங்கிகள் போன்ற நிறுவனங்களில் கடனுதவி பெற்று திருப்பி செலுத்த முடியாத நிலையில் தற்போது மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு கடுமையாக தொந்தரவு செய்வதாக புகார் தெரிவித்தும் வேதனை அடைந்துள்ளனர்.

வீட்டை விற்று சாப்பிடும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள்!

தமிழக அரசு மகளிர் குழுக்கள் வங்கிகள் போன்ற நிறுவனங்களில்  மாதச் சந்தா கட்டுவதற்கு கூடுதல் கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் மகளிர் குழு மற்றும் இதர வங்கி நிறுவனங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தினசரி ஊதியம் கிடைத்தால் மட்டுமே தங்களுக்கு வாழ்வாதாரம் என இருக்கும் குடும்பங்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தோட்டத் தொழிலாளர்கள் சொல்ல முடியாத அளவிற்கு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இது மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. குழந்தைகளுடன் உணவுக்கு சிரமப்படுகின்றனர். வெளிமாநில பணி என்பதால், இங்கு அவர்களுக்கு உதவ ஆளில்லை. மாற்று வேலையும் தேட முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். 

 
 

தலைப்பு செய்திகள்

சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget