மேலும் அறிய

கொட்டும் பருவ மழை: தேனி அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை உட்பட அனைத்து அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் வைகை அணை , மஞ்சலாறு அணை , சண்முகா நதி அணை, சோத்துப்பாறை அணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தேனி மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் ,சிவகங்கை என 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் தமிழக கேரள எல்லையான தேக்கடியில் உள்ள முல்லை பெரியாறு அணையும் உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து வரும் நீர் வரத்தானது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய தேவைகளுக்கும் , குடி நீருக்குமான நீராதாரமாக விளங்குகிறது.

கொட்டும் பருவ மழை: தேனி அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

முல்லை பெரியாறு அணையிலிருந்து வரும் நீரானது வைகை அணையில் தேக்கப்பட்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைகை அணைக்கு வரும் நீரானது முல்லை பெரியாறு அணையிலிருந்து மட்டுமல்லாமல் சோத்துப்பாறை அணை, மஞ்சலாறு அணையிலிருந்து தேக்கிவைக்கப்பட்டு இரு அணைகளின் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையை சென்றடையும். கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவார  பகுதிகளில் பெய்யும் மழையானது சோத்துப்பாறை அணை , மஞ்சலாறு அணை இரண்டு அணைகளில் தேக்கப்படும் தண்ணீர் வைகை அணைக்கும் திறந்துவிடப்படும்.

கொட்டும் பருவ மழை: தேனி அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

தற்போது சென்ற மாதம் ’டவ் தே’ புயலின் தாக்கத்தால் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சலாறு அணையில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து வைகை அணையிலும் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் வைகை அணையிலிருந்து மதுரை , திண்டுக்கல் மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடி நீருக்கும் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது கேரளா மாநிலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து முல்லை பெரியாறு அணையில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொட்டும் பருவ மழை: தேனி அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு

இதனால் கடந்த நாட்களை விட அணைக்கு நீர் வரத்தானது தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும் மஞ்சலாறு, சோத்துப்பாறை அணை பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் வைகை அணைக்கு நீர் வரத்து தொடந்து அதிகரித்துள்ளது. தென் மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் முல்லை பெரியாறு அணை உட்பட தேனி மாவட்ட அணைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தேனி மாவட்ட அணைகளின் நிலவரம்: 

வைகை அணை,

நிர்மட்டம்  - 66.71 (71 அடி),  நீர் இருப்பு – 4893 மி.க.அடி,  நீர் வரத்து – 840 க. அடி,  நீர் திறப்பு – 969 க.அடி                                                     

முல்லை பெரியாறு அணை, 

நிர்மட்டம்  - 132.75 (142 அடி, நீர் இருப்பு – 5341 மி.க.அடி), நீர் வரத்து – 4289 க. அடி, நீர் திறப்பு – 1400 க.அடி 

மஞ்சலார் அணை, 

நீர்மட்டம்  - 50.0 (57 அடி) ,நீர் இருப்பு – 435.32 மி.க.அடி , நீர் வரத்து – 0 , நீர் திறப்பு – 0 

சோத்துப்பாறை அணை, 

நிர்மட்டம்  - 126.28 (12.28 அடி) , நீர் இருப்பு – 100.0 மி.க.அடி ,நீர் வரத்து – 3  க. அடி,நீர் திறப்பு – 3 க.அடி 

சண்முகா நதி அணை,

நிர்மட்டம்  - 42.0 (52.55 அடி) ,நீர் இருப்பு – 48.95 மி.க.அடி,நீர் வரத்து – 0 க. அடி , நீர் திறப்பு – 0  க.அடி                                                           

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!
திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Embed widget