மேலும் அறிய

'நீதிமன்றம் தலையிட முடியாது’ - ரயில்வே மேம்பாலம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக கள நிலவரத்தை ஆய்வு செய்து ரயில்வே நிர்வாகத்தினரே முடிவெடுக்க வேண்டும்.

நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயில் பாதையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தினர் எடுக்க வேண்டிய முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது மதுரைக்கிளை.

நாகர்கோவிலை சேர்ந்த அந்தோணி முத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயில் பாதையின் குறுக்கே பேயன்குழி கிராமத்தில் இருந்து நுள்ளிவிளை கிராம ஊராட்சி சாலையை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி பல முறை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவ்வப்போது சாலையைக் கடக்க முயலும் போது ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆகவே, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயில் பாதையின் குறுக்கே பேயன்குழி கிராமத்தில் இருந்து நுள்ளிவிளை கிராம ஊராட்சி சாலையை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, "ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக கள நிலவரத்தை ஆய்வு செய்து ரயில்வே நிர்வாகத்தினரே முடிவெடுக்க வேண்டும்.  அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 
 

மற்றொரு வழக்கு

ரூ. 2 லட்சம் பணம் தராததால் மண்டபம் உள்ள பகுதியில் குப்பைகளை சேகரிக்காமல் பஞ்சாயத்துராஜ் சட்டத்தை மீறி மாப்பிள்ளையூரணி ஊராட்சித்தலைவர் செயல்பட்டு வருகிறார் என்றும் அவரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
 
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியைச் சேர்ந்த பிரான்சிஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, எங்கள் கிராமம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியை சார்ந்தது. எங்கள் நிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு திருமண மண்டபம் மற்றும் கடைகள் கட்டினோம். இதற்காக அப்போதைய ஊராட்சித்தலைவரிடம் உரிய விதிகளின்படி முறையான கட்டிட வரைபட அனுமதி பெற்றிருந்தோம். தற்போது வரை உரிய வரியை செலுத்தி வருகிறோம். இந்தநிலையில் சமீபத்தில் எங்கள் திருமண மண்டபத்திற்கு அனுமதி பெறவில்லை என்று கூறி, வரி வசூலிக்க ஊராட்சித்தலைவர் மறுக்கிறார். வரி வசூலிக்க வேண்டுமென்றால் ரூ.2 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். 
 
அதற்கு நான், 2002ம் ஆண்டிலேயே கட்டிட அனுமதி பெற்றுவிட்டோம் என்றதற்கு, அந்த அனுமதியெல்லாம் இப்போது செல்லாது என்றார். மேலும், நான் கேட்ட தொகையை கொடுக்கவில்லையென்றால் மண்டபத்தை நடத்த முடியாது என்று கூறி மிரட்டினார். இதன்பிறகும், எங்கள் மண்டபம் உள்ள பகுதியில் குப்பைகளை சேகரிக்கக்கூடாது என துப்புரவு தொழிலாளர்களிடமும் உத்தரவிட்டுள்ளார். 
 
இதனால் எங்கள் பகுதி முழுவதும் குப்பைகளை சேகரிப்பதில்லை. பஞ்சாயத்துராஜ் சட்டத்தை மீறி மாப்பிள்ளையூரணி ஊராட்சித்தலைவர் செயல்பட்டு வருகிறார். அவர் தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்துகிறார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து, ஊராட்சித்தலைவரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

 
 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேடசந்தூரில் ரவுடியின் அட்டகாசம்: மாமூல் தர மறுத்ததால் பட்டாக்கத்தியால் மளிகை கடை மீது தாக்குதல்! CCTV காட்சி வெளியீடு
வேடசந்தூரில் ரவுடியின் அட்டகாசம்: மாமூல் தர மறுத்ததால் பட்டாக்கத்தியால் மளிகை கடை மீது தாக்குதல்! CCTV காட்சி வெளியீடு
திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்: மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்!
திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்: மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்!
தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!
தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
ABP Premium

வீடியோ

Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TVK Alliance : பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.! கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
Netanyahu New Video: என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
DMK alliance seat allocation : திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்
kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்
Embed widget