மேலும் அறிய

மதுரை : கி.பி.13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு..

தே.கல்லுப்பட்டி அருகே கி.பி.13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால  பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு.

மதுரை மாவட்டம் வில்லூர் அருகே போத்தநதி என்ற ஊரில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத் தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போத்தநதி ஊராட்சி மன்றத் தலைவர் விநாயகமூர்த்தி என்பவர் தங்கள் ஊரில் பழமையான கோவில் இருப்பதாக கொடுத்த தகவலின்  அடிப்படையில்  பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் ஆனந்தகுமரன், கருப்பசாமி  ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்புக் கள ஆய்வில் கி.பி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன்  சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டும்,  சிதைந்த நிலையில் சிவன் கோவிலும்  கண்டறியப்பட்டுள்ளன.

மதுரை : கி.பி.13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு..
இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது, " செங்குடிநாடு பகுதியில் மதவேல நாயக்கனூரின் கட்டுப்பாட்டில் கௌசீக நதிக்கரையின்  மேற்குப் பகுதியில் போத்தன் என்ற சிற்றரசர் ஆட்சி புரிந்ததாகவும் அவர் பெயரில் போத்தநதி என்ற ஊர் பெயர் வந்ததாகவும் அறியப்படுகிறது .
 
இடிந்த நிலையில் சிவன் கோயில் 
 
இவ்வூரின் தெற்குப் பகுதியில் போத்தன் ஊரணியின் அருகே பாழடைந்த நிலையில் கருவறை,  கோபுரம்,  முன் மண்டபம் கொண்ட கோயில் கண்டறியப்பட்டன.கோயிலின் அமைப்பினை ஆய்வு செய்தபோது செங்கற்கள் சாந்து சேர்ந்து கட்டிய  கோபுரம் முற்றிலும் சிதிலமடைந்து சிற்பங்கள் சிதைந்த நிலையில் இருக்கிறன. கருவறை சதுர வடிவத்தில் கிழக்கு நோக்கியும்,  உட்பகுதி வடக்கு, தெற்கு திசையில் மாடக்குழிகளும் சிலைகள் இன்றி அமைந்துள்ளன. முன்மண்டபம் முற்றிலும் சிதிலமடைந்ததால் மிஞ்சிய தூண்களில் வாயிற் காவலர்கள் ஆண், பெண் சிற்பங்களாக நின்று வணங்கிய நிலையிலும்,  பூ மொட்டு போதிகையுடன்  தூணின் இரண்டு பக்கமும் செதுக்கப்பட்டுள்ளது.

மதுரை : கி.பி.13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு..
 
கல்வெட்டு
 
கோயிலின்  பாத பந்த அதிட்டானம் குமுத வரி பகுதியில் 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட 8 வரி  சொற்கள் கல்வெட்டு  பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் தமிழ்நாடு தொல்லியல் துறையில் இருந்து  ஓய்வு பெற்ற முனைவர் சாந்தலிங்கம் உதவியுடன்  மை   படியெடுத்து ஆய்வு செய்த போது "திருவாய்க்கேழ்விக்கு மேல் ஸ்ரீ கோமாற பன்மரன் திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு மாடக்குழக்கு மதுரை திருவாலவாயுடையார் கோவில்" என்ற வரிகள் செதுக்கப்பட்டுள்ளன.
 
இக்கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி காலத்தைச் ( 1216- 1239) சேர்ந்தவையாகும். திருவாலவாயுடையர் என்று அழைக்க கூடிய சிவன் கோவிலுக்கு சந்தியா தீபம் ஏற்றிட நிலம் தானமாக வழங்கப்பட்டு இருக்கலாம். கல்வெட்டின் காலம் கி பி 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சிவகங்கை மகளிர் கல்லூரியில் தமிழரின் மரபு கருத்தரங்கம்: கல்வெட்டுகள், நெல் வகைகள், எழுத்துகள் குறித்த அரிய தகவல்கள்!
சிவகங்கை மகளிர் கல்லூரியில் தமிழரின் மரபு கருத்தரங்கம்: கல்வெட்டுகள், நெல் வகைகள், எழுத்துகள் குறித்த அரிய தகவல்கள்!
மதுரை இனி இப்படி தான் இருக்கும்.. போக்குவரத்து நெரிசல் தீர்வு ரூ.6 கோடி மேம்பாட்டுப் பணிகள்: 6 மாதங்களில் மாற்றம்!
மதுரை இனி இப்படி தான் இருக்கும்.. போக்குவரத்து நெரிசல் தீர்வு ரூ.6 கோடி மேம்பாட்டுப் பணிகள்: 6 மாதங்களில் மாற்றம்!
Madurai ; ஊழல் பண்றவங்கள நோட் பண்ணிருக்கோம்... அதிமுக ஆட்சி அமைந்தால் சிறைவாசம் உறுதி - செல்லூர் ராஜு கடும் எச்சரிக்கை !
Madurai ; ஊழல் பண்றவங்கள நோட் பண்ணிருக்கோம்... அதிமுக ஆட்சி அமைந்தால் சிறைவாசம் உறுதி - செல்லூர் ராஜு கடும் எச்சரிக்கை !
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களில் உணவு கட்டுப்பாடு! தேனியில் டீ கடைகள் மூடல்!
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களில் உணவு கட்டுப்பாடு! தேனியில் டீ கடைகள் மூடல்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget