மேலும் அறிய
மதுரை இனி இப்படி தான் இருக்கும்.. போக்குவரத்து நெரிசல் தீர்வு ரூ.6 கோடி மேம்பாட்டுப் பணிகள்: 6 மாதங்களில் மாற்றம்!
மதுரை அம்மா பாலத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்வு ஏற்பட ரூ.6 கோடி மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளது, 6 மாதங்களில் மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

அம்மா பாலம் மாதிரி
Source : whatsapp
மதுரை அம்மா பாலத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாட்டுப் பணிகள்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
மதுரை மாநகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் முக்கியப் பாலமான வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அம்மா' பாலத்தில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக முக்கியப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
நெரிசலுக்கான காரணம்:
அரப்பாளையம் (தெற்கு) மற்றும் தத்தநேரி (வடக்கு) சாலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்தப் பாலம் 324 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தப் பாலத்தின் இரண்டு முனைகளிலும் சாலைகள் செங்கோண வடிவில் (90 டிகிரி) சந்திப்பதால், வாகனங்கள் திரும்புவதற்குப் போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டு வந்தது.
அரசு எடுத்த நடவடிக்கை:
இந்த இடர்பாட்டைக் குறைக்க, CRIDP 2025-26 திட்டத்தின் கீழ் 6 கோடி ரூபாய் (600 லட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பாலத்தின் இருபுறங்களிலும் வாகனங்கள் எளிதாகத் திரும்பும் வகையில் 'பெல் மவுத்' (Bell Mouth) விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே தலா ஒரு பக்கத்திற்கு 21.60 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலம் கொண்ட கூடுதல் தளம் (Deck bridge) அமைக்கப்படும்.
இதற்காக வலுவான அடித்தளம் (Pile Foundation) அமைக்கப்பட உள்ளது.
காலக்கெடு:
ஒப்பந்தத்தின்படி, அடுத்த 6 மாத காலத்திற்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது (ஒப்பந்தத் தேதி: 03.12.2025). இந்தப் பணிகள் முடிவடைந்தால், வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரைச் சாலைகளில் போக்குவரத்து மிகவும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























