மேலும் அறிய

சென்னை-காஞ்சிபுரம் ரயில் தாமதம்: பயணிகள் கொந்தளிப்பு! ரயில் மறியல் போராட்டம் ஏன்? தீர்வு என்ன?

"சென்னை - காஞ்சிபுரம் ரயில் தாமதம், பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது" 

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் அடிக்கடி தாமதமாவதைக் கண்டித்து, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாலூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகள் போராட்டத்திற்கு காரணம் என்ன ?

தினமும் மாலை 6:30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மின்சார ரயில், வழக்கம் போல இரவு 8:30 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடைய வேண்டும். ஆனால், பாலூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் காரணமாக, இந்த ரயில் பாலூரில் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நிறுத்தப்படுகிறது.

இதனால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்குத் திரும்பும் பயணிகள், தினமும் இரவு 9:30 மணிக்கு மேல் வீட்டை அடைவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று இதேபோன்ற தாமதம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரயில் தாமதமானதால், பொதுமக்கள் ஆத்திரமடைந்து தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். 

அதிகாரிகள் பேச்சுவார்த்தை 

சிலர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தொடர்ந்து ஏற்படும் இந்த தாமதம் குறித்து ரயில்வே நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.இதனால், தங்கள் வேலைகளை முடித்துவிட்டு உரிய நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் மறியல் காரணமாக, அப்பாதையில் செல்ல வேண்டிய மற்ற ரயில்களும் தாமதமாகி வருகின்றன. சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர், பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக முன்பை - நாகர்கோவில் விரைவு ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீர்வுதான் என்ன ?

அரக்கோணம் -காஞ்சிபுரம் -செங்கல்பட்டியிலேயே இரண்டாவது தண்டவாளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்கள் ரயில் மூலமாக பயணித்து வருகின்றனர். இவர்கள் மூலம் ரயில்வே துறைக்கும் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், அரக்கோணம் செங்கல்பட்டு இடையே, காஞ்சிபுரம் வழியாக இரட்டை ரயில் பாதை அமைக்கப்படாததே முதன்மை பிரச்சனை என பயணிகள் தெரிவிக்கின்றனர். விரைந்து இரண்டாவது ரயில் பாதை அமைப்பதற்கான நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

தலைப்பு செய்திகள்

மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!
மக்களே உஷார்! ஜூலை 25 வரை செம்ம ட்விஸ்ட்... சென்னை வானிலை மையம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
மக்களே உஷார்! ஜூலை 25 வரை செம்ம ட்விஸ்ட்... சென்னை வானிலை மையம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?
Indian Army: ராணுவத்தில் சேரப் போறீங்களா இளைஞர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ஆகஸ்ட் 1 முக்கிய முகாம்!
ராணுவத்தில் சேரப் போறீங்களா இளைஞர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ஆகஸ்ட் 1 முக்கிய முகாம்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Mahindra New Upcoming SUV: டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Embed widget