மேலும் அறிய

‘தடுப்பூசி திருவிழா’ வந்தும் மாறாத எண்ணிக்கை.. தயக்கத்துக்கு என்ன காரணம்?

இந்தியாவில் தினசரி கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் சராசரி மிகவும் குறைந்து காணப்படுகிறது. உதாரணமாக ஒரு நாளைக்கு சராசரியாக 40 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டால், அதுவே அடுத்த நாளில் 20 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகிறது

கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை கடந்த 15 நாட்களாக தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திருவிழாவான ‘திகா உத்சவ்’ என்ற நிகழ்வை அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திருவிழா தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் தரவுகளின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. 


‘தடுப்பூசி திருவிழா’ வந்தும் மாறாத எண்ணிக்கை.. தயக்கத்துக்கு என்ன காரணம்?

அதன்படி இந்தியாவில் கடந்த 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா தொடங்குவதற்கு முன்பு வரை ஒரு நாளைக்கு 33.47 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதுவே தடுப்பூசி திருவிழா தொடங்கிய பிறகு 31.38 லட்சமாக குறைந்துள்ளது. 

மேலும் கடந்த 17ஆம் தேதி வரை இந்தியாவில் மொத்தமாக தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 12.26 கோடியாக உள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7.71 சதவிகிதம் ஆகும். இதன்மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகள் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. இப்பட்டியலில் இஸ்ரேல்(61.73), அமெரிக்கா(38.72), பஹரேன்(34.78) முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. 

அதேபோல் மாநிலங்களுள் இடையேயும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் வித்தியாசமாக உள்ளது. உதாரணமாக கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவும் கேரளா மாநிலத்தில் சராசரியாக 7 சதவிகித மக்கள் மட்டுமே ஒரு தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். 


‘தடுப்பூசி திருவிழா’ வந்தும் மாறாத எண்ணிக்கை.. தயக்கத்துக்கு என்ன காரணம்?

இந்தச் சூழலில் வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அடுத்த 2 மாதங்களுக்குள் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது சராசரியாக இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு கோடி தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 

எனினும் இந்தியாவில் தினசரி கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் சராசரி மிகவும் குறைந்து காணப்படுகிறது. உதாரணமாக ஒரு நாளைக்கு சராசரியாக 40 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டால், அதுவே அடுத்த நாளில் 20 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகிறது. இத்தகைய தினசரி மாறுபாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்த மக்களுக்கு ஏதுவாக நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழா இன்னும் சரியாக மக்களிடம் செல்லவில்லை என்பது இந்த தரவுகளின் மூலம் தெளிவாக தெரிகிறது. எனவே மத்திய மாநில அரசு மக்களிடம் தடுப்பூசி தொடர்பாக இருக்கும் அச்சத்தை போக்கி விரைவில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget