மேலும் அறிய

Kuno Cheetah First Kill: இந்தியாவில் முதல் வேட்டை..! அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்த சிவிங்கிப்புலிகள்..!

குனோ தேசிய பூங்காவில் தனிமைப்படுத்தப்படுதலில் இருந்து விடுவிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் சிவிங்கிப்புலிகள் தங்களது முதல் வேட்டையை ஆடியது.

இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் இனம் அழிந்ததையடுத்து, நமீபியா நாட்டில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 17-ந் தேதி 5 ஆண் சிவிங்கிப்புலிகளும், 3 பெண் சிவிங்கிப்புலிகளும் தனி விமானம் மூலமாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிவிங்கிப்புலிகளை  மத்திய பிரேதசத்தில் உள்ள குனோ பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார்.

நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட இந்த சிவிங்கிப்புலிகள் புதிய இடத்திற்கு பழகுவதற்காக தனிமைப்படுத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்ட சிவிங்கிப்புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட சிவிங்கிப்புலிகளில் இரண்டு புலிகள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டது. ப்ரெட்டி மற்றும் எல்டன் என்று பெயரிடப்பட்ட இந்த சிவிங்கிப்புலிகள் இரண்டும் விடுவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தங்களது முதல் வேட்டையை ஆடியுள்ளது.


Kuno Cheetah First Kill: இந்தியாவில் முதல் வேட்டை..! அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்த சிவிங்கிப்புலிகள்..!

இந்த இரண்டு சிவிங்கிப்புலிகளும் புள்ளி மானை வேட்டையாடியதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 50 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்ட சிவிங்கிப்புலிகள் சற்று சோர்வடைந்து காணப்பட்டிருக்கும் என்றும், இதனால் அதன் தசைகள் வலுவிழந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடுவிக்கப்பட்ட 24 மணி நேரத்திலே இவையிரண்டும் வேட்டையாடியது வனத்துறை அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப்புலிகளில் தனிமைப்படுத்தலில் இருந்து முதலில் விடுவிக்கப்பட்டது இந்த இரண்டு சிவிங்கிப்புலிகள் மட்டுமே. மற்ற சிவிங்கிப்புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வரும் சூழலில், கர்ப்பமாக இருக்கும் ஆஷா என்ற சிவிங்கிப்புலி வரும் 10-ந் தேதிக்கு பிறகு விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Kuno Cheetah First Kill: இந்தியாவில் முதல் வேட்டை..! அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்த சிவிங்கிப்புலிகள்..!

இந்திய மண்ணில் 1952ம் ஆண்டே சிவிங்கிப்புலிகளின் இனம் அழிந்துவிட்டது. இதையடுத்து, இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப்புலிகளின் இனத்தை உருவாக்கும் பொருட்டு நமீபியாவில் இருந்து மத்திய அரசு சிறப்பு முயற்சி எடுத்து ஆண் மற்றும் பெண் சிவிங்கிப்புலிகளை கொண்டு வந்தது. ஆண் சிவிங்கிப்புலிகளுக்கு 4.5 முதல் 5.5 வயதும், பெண் சிவிங்கிப்புலிகளுக்கு 2 முதல் 5 வயதும் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிவிங்கிப்புலிகள் நமீபியாவில் 58 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியில் வாழ்ந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் படிக்க : 100 year Old Bridges: நாட்டில் 38 ஆயிரம் பாலங்கள், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை: இத எப்படி பராமரிக்கிறாங்க தெரியுமா?

மேலும் படிக்க : EWS: 10 சதவிகித இட ஒதுக்கீடு...சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டி நீதிபதி ரவிந்திர பட் எதிர்ப்பு..! அதிரடி வாதங்கள்..

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget