மேலும் அறிய

EWS: 10 சதவிகித இட ஒதுக்கீடு...சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டி நீதிபதி ரவிந்திர பட் எதிர்ப்பு..! அதிரடி வாதங்கள்..

சமூக நீதி கட்டமைப்பையும் அரசியலமைப்பின் அடிப்படையையும், இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் பலவீனமாக்குகிறது என நீதிபதி ரவிந்திர பட் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டு வழக்கில் மத்திய பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட 10 சதவிகித இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

காலம் காலமாக, இந்திய சமூகத்தால் ஒடுக்கப்பட்ட விளம்புநிலை மக்களின் பின்தங்கிய நிலையை கருத்தில் கொண்டு, இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. இதை, கடந்த 1992ஆம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. குறிப்பிட்ட நபர் பின்தங்கியவரா என்பதை சாதியின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஆனால், 10 சதவிகித இட ஒதுக்கீட்டை பொருத்தவரை, பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வு வழங்கியுள்ளது.

அதில், பல்வேறு விதமான கேள்விகளையும் கருத்துகளையும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நீதிபதி ரவிந்திர பட், சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டி, 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லாது என தெரிவித்துள்ளார். அவர், குறிப்பிட்ட முக்கிய கருத்துகளை கீழே காண்போம்.

1) யாரையும் தவிர்க்க, நம் அரசியலமைப்பு அனுமதிப்பதில்லை. சமூக நீதி கட்டமைப்பையும் அரசியலமைப்பின் அடிப்படையையும், இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் பலவீனமாக்குகிறது. 

2) சமூக மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பலன்களைப் பெறுபவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள் என்று நம்பும்படி இந்தத் சட்ட திருத்தம் நம்மை ஏமாற்றுகிறது. அரசியலமைப்பு சட்ட பிரிவு 16(1) மற்றும் (4) ஆகியவை ஒரே சமத்துவக் கொள்கையின் அம்சங்கள் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

3) சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினரில் உள்ள ஏழை மக்களை தவிர்க்கும் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டின் தன்மை சரியானது அல்ல. பலன்கள் என்று விவரிக்கப்படுவதை இலவசம் என்று புரிந்து கொள்ள முடியாது. பொதுவாக, இட ஒதுக்கீடு என்பது ஈடுசெய்யும் ஒரு இழப்பீட்டு வழிமுறையாகும்.

4) பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள ஏழை மக்களை, 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைப்பதன் மூலம் அரசியலமைப்பால் தடை விகிக்கப்பட்ட பாகுபாட்டை கடைபிடிக்கப்படுகிறது. சமத்துவக் குறியீட்டின் இதயத்தில் இந்த புறக்கணிப்பு, தாக்குதலை தொடுக்கிறது.

5) ஏழைகளில் பெரும்பாலோர், 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள SC/ST/OBC பிரிவினரை சார்ந்தவர்களே.

6) தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது விதிமீறல் இல்லை. இந்த நிறுவனங்கள் சமூகத்தின் பொருள் வளங்களை உருவாக்குகின்றன. அதில் மாநிலத்தின் முக்கிய அக்கறை உள்ளது.

7) எனவே, திருத்தம் செல்லுபடியாகும் என்று நான் நம்புகிறேன். ஆனால், மூன்றாவது கேள்வியின் அடிப்படையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கிறேன்.

8) நான் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இட ஒதுக்கீட்டில் 50 சதவிகித வரம்பு மீறப்பட்டிருப்பது என்பது 10 சதவகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அடிப்படை தாக்குதல். அந்த வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் சட்டத்திருத்தம் விதிமீறல் எனக் கருதப்பட்டது. இந்த தீர்ப்பு அந்த வழக்கில் எழுப்பப்படும் கேள்விகளை யோசிக்க வைக்கிறது.

9) இரண்டு சமூக சீர்திருத்தவாதிகளின் கருத்துகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 1893இல், சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் சகோதரத்துவம் பற்றி ஆற்றிய உரையை மேற்கொள்காட்டுகிறேன்.

10) தன்னுடைய மதம் மட்டும் பிழைக்க வேண்டும் என்றும் மற்றவர்களின் மதம் அழிய வேண்டும் என கனவு காண்பவர்களை கண்டு பரிதாபப்படுகிறேன்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget