மேலும் அறிய

Bilkis Bano Case: இந்த வழக்கு குற்றவாளிகளை மட்டும் விடுவித்தது ஏன்? பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

பில்கிஸ் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான பரிந்துரை வழங்கிய சிறை ஆலோசனைக் குழு எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. 

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி:

குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் கோரிக்கையை ஏற்றது. அதன்படி, இந்த மனுக்களை கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகிய நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. கே.எம்.ஜோசப் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாகரத்னாவுடன் இணைந்து, உஜ்ஜல் புயான், வழக்கை விசாரித்து வருகிறார்.

கடைசியாக நடைபெற்ற விசாரணையின்போது, விதிகளுக்கு உட்பட்டு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசும் குஜராத அரசும் பரிசீலித்து வருவதாக மத்திய அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த வழக்கு குற்றவாளிகளை மட்டும் விடுவித்தது ஏன்?

இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், குஜராத் அரசிடம் உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்விகளை எழுப்பியது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை பொறுத்தவரையில், குஜராத் அரசு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி கொண்டுள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

"குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு எப்படி அவர்களை விடுவிக்க முடிந்தது? மற்ற கைதிகள் ஏன் விடுதலை செய்யப்படவில்லை? இந்த வழக்கின் குற்றவாளிகளை தேர்வு செய்து ஏன் கொள்கை பலன் வழங்கப்பட்டுள்ளது?

14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு சீர்திருத்த வாய்ப்பளிக்கும் இந்த விதி மற்ற கைதிகளுக்கு எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது? இங்கு பின்பற்றுள்ள கொள்கை ஏன் இந்த வழக்கு குற்றவாளிகளுக்கு மட்டும்  பயன்படுத்தப்பட்டுள்ளது? சீர்திருத்தும் வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். இது எவ்வளவு தூரம் செயல்படுத்தப்படுகிறது? நமது சிறைகள் ஏன் நிரம்பி வழிகின்றன? எங்களுக்கு தரவு கொடுங்கள்" என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

பில்கிஸ் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான பரிந்துரை வழங்கிய சிறை ஆலோசனைக் குழு எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது தொடர்பான விவரங்களை அளிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், கோத்ரா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படாத நிலையில், அதன் கருத்து ஏன் கேட்கப்பட்டது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget