மேலும் அறிய

‛பாலியல் வன்கொடுமையில் சமரசம் இல்லை’ பாதிரியாருக்கு ஜாமின் கேட்ட பெண் மனு தள்ளுபடி!

பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அச்சிறுமி  கர்ப்பமாகி பிப்ரவரி 2, 2017 அன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அப்பெண்ணுக்கு தற்போது 21 வயது.

பாலியல் வன்கொடுமையை செய்தவரையே திருமணம் செய்ய அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடிய பெண்ணின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு, கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூரில் 16 வயது சிறுமி, கத்தோலிக்க பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். போக்ஸோ சட்டத்தின் கீழ் தலச்சேரி சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை விரிவு செய்யக் கூடிய  சிறைத் தண்டனையும், ரூ .3 லட்சம் தண்டனைத் தொகையும் விதித்தது.  பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அச்சிறுமி  கர்ப்பமாகி பிப்ரவரி 2 2017 அன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அப்பெண்ணுக்கு தற்போது 21 வயது. பின்னர் தானே அந்தபெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன் என்றும், ஜாமின் வழங்க வேண்டுமென்றும் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார் பாதிரியார். ஆனால் மனுவை தள்ளுபடி செய்தது கேரள நீதிமன்றம்.


‛பாலியல் வன்கொடுமையில் சமரசம் இல்லை’ பாதிரியாருக்கு ஜாமின் கேட்ட பெண் மனு தள்ளுபடி!

இந்நிலையில், அப்பெண்ணின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஜோசப் மூலம் தாக்கல் செய்த மனுவில், "சிறைத்தண்டனை பெற்றுவரும் பாதிரியாரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், குழந்தைக்கு திருமணமாகாத தாய் என்ற அவப்பெயரை தவிர்க்க விரும்புவதாகும்" தெரிவித்திருந்தார். குற்றவாளி சிறைக்குள் இருக்கும் போது திருமணம் நடப்பதற்கு  சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, குற்றவாளியை இரண்டு மாத காலம் பிணையில் வெளியிட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் கேரளா உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் மனுதாக்கல் செய்தார். இருப்பினும், இந்த வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் துரதிஷ்டவசமானது என்று பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரரின் மன உளைச்சல், குழந்தையின் வாழ்க்கை சூழல், மனுதாரர் மற்றும் குற்றவாளி திருமணம் செய்வதற்கான உரிமையை உயர்நீதிமன்றம் கணக்கில் கொள்ள வில்லை என்றும் தெரிவித்தார்.     


‛பாலியல் வன்கொடுமையில் சமரசம் இல்லை’ பாதிரியாருக்கு ஜாமின் கேட்ட பெண் மனு தள்ளுபடி!

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் பினேஷ் மகேஸ்வரி ஆகியோர் பாதிரியாருக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர். இது குறித்து தெரிவித்த நீதிபதிகள், பாலியல் வன்கொடுமை வழக்கில் சமரசம் என்பதை ஏற்க முடியாது.  இது தவறான முன்னுதாரணமாகிவிடும். இதனைக் காரணம் காட்டி எதிர்காலத்தில் குற்றவாளிகள் தப்பிக்க நேரிடும் என தெரிவித்தனர்.

போக்ஸோ சட்டம்:  

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (The Protection of Children from Sexual Offences (POCSO) Act,) போக்ஸோ சட்டம் 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.  இச்சட்டத்தின்படி, சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்த 30 நாட்களுக்குள், குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும். இதன் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் கூடிய விரைவில்  அல்லது ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையில் இச்சட்ம் 2019ம் ஆண்டு திருத்தப்பட்டது. 

சிறப்பு நீதிமன்றங்கள் மூலம்,  2021 மே மாதம் வரை நிலுவையில் இருந்த 50,484 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
IPL CSK: அஷ்வின் மட்டுமல்ல.. பர்ஸை நிரப்ப மொத்த அன்பு டென்னையும் காலியாக்கும் சிஎஸ்கே - ரூ.40 கோடிக்கு ஏலம்
Embed widget