மேலும் அறிய

”முஸ்லிம்களிடம் காய்கறி வாங்காதீர்கள்; ஆட்டோவில் ஏறாதீர்கள்” : பாதிரியாரின் வெறுப்புப் பேச்சை எதிர்த்த கன்னியாஸ்திரிகள்..

4 பேரும் ஏற்கெனவே கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழகில் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் வியாபாரிகளிடம் காய்கறி வாங்காதீர்கள், அவர்கள் ஓட்டும் ஆட்டோக்களில் ஏறாதீர்கள் என்றெல்லாம் வெறுப்பைக் கக்கி பிரசங்கம் செய்த பாதிரியாருக்கு கன்னியாஸ்திரிகள் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கேரள மாநிலம் பாலா பகுதி பிஷப் ஜோசப் கல்லரங்கட் நார்கோடிக் ஜிஹாத் என்று விமர்சித்துப் பேசிய வெறுப்புப் பேச்சின் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை அதற்குள் கோட்டயம் மாவட்டம் குருவிலங்காடு பகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் 4 பேர் மற்றுமொரு கிறிஸ்தவ பாதிரியார் முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பேச்சைக் கொட்டியுள்ளதாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். நேற்று செப்டம்பர் 13-ஆம் தேதி அந்த 4 கன்னியாஸ்திரிகளும் செய்தியாளர்களை சந்தித்தனர். இவர்கள் 4 பேரும் ஏற்கெனவே கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழகில் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனுபமா, ஆல்ஃபி, அன்கிட்டா உரும்பில், ஜோஸ்ஃபின் உள்ளிட்ட அந்த 4 கன்னியாஸ்திரிகளும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் குருவிலங்காடு புனித பிரான்சிஸ் மிஷன் தேவாலயத்தில் கடந்த ஞாயிறு அன்று வழக்கமான பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. அதில் ராஜீவ் என்ற பாதிரியார் பிரசங்கம் செய்தார். அவரது பிரசங்கம் முஸ்லிம்களை சிறுமைப்படுத்துவதாக இருந்தது. 

அவரது பேச்சின் மதவாதம் இருந்தது. அவர் முஸ்லிம் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறி வாங்காதீர்கள் என்றார். அவர்கள் ஓட்டும் ஆட்டோரிக்‌ஷாவில் ஏற வேண்டாம் என்றார். எங்களில் இருவர் அன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறுனோம். கர்த்தர் அனைவரிடத்திலும் அன்பு காட்டவெ சொல்லியிருக்கிறார். அண்டைவீட்டாரை நேசிக்கச் சொல்லியிருக்கிறார். மதவாதத்தைப் பரப்ப வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார். கர்த்தர் கூறியதற்கு மாற்றாக பாதிரியார் பிரசங்கம் செய்ததால் நாங்கள் இப்போது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி கல்லரங்கட் பேராயர் தனது பிரசங்கத்தில் முஸ்லிம்கள் பிற மதத்தினர் மத்தியில் போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி நார்காட்டிக் ஜிஹாத்தில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தார். இந்தப் பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியில் விவாதப் பொருளானது. இதில் தலையிட்ட முதல்வர் பினராயி, போதைப் பொருளுக்கு யாரும் மதச்சாயம் பூச வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீஷன், குற்றங்களுக்கு சாதி, மத, பாலின அடையாளம் கிடையாது. அதனால் எந்த ஒரு குற்றத்துக்கும் மதச் சாயம் பூச வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 

தலைப்பு செய்திகள்

Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget