மேலும் அறிய

MLC Kavitha: தெலங்கானா தேர்தல்: 'மக்கள் ஆதரவு எங்களுக்கு தான்; எங்கள் டிஎன்ஏ எங்கள் மக்களுடன் ஒத்துப்போகிறது' - கவிதா

இந்த தேர்தலில் மக்கள் பி.ஆர்.எஸ் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் எம்.எல்.சி கவிதா தெரிவித்துள்ளார்.

இன்று வாக்கு பதிவில் கலந்துக்கொண்டு ஜனநாயகத்தை வலுப்பெற செய்வதற்கான நாள் என எம்.எல்.சி கவிதா தெரிவித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெலங்கானா சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவானது தொடங்கியுள்ளது. அங்கு யாருக்கு மக்கள் ஆதரவு அளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ஆளும் பாரத ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 பிரதான கட்சிகள் இடையே அங்கு பலத்த போட்டி நிலவுகிறது. இது தவிர ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களம் காண்பதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த கவிதா தேர்தலில் வாக்களிக்க புறப்பட்ட போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ஆண்கள், பெண்கள், இளம் தலைமுறையினர் என அனைவரும் தேர்தலில் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோளாக கேட்டுக்கொள்கிறேன். இன்று விடுமுறை நாள் அல்ல அனைவரும் வாக்குப்பதிவில் கலந்துக்கொண்டு ஜனநாயகம் வலுபெற செய்வதற்கான நாள். 2018-ம் ஆண்டு மக்கள் எப்படி பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ஆதரவளித்தனரோ, அதே நிலைமையே இந்த முறையும் காணப்படுகிறது. மக்கள் இந்த முறையும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

எங்கள் மக்களை நாங்கள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளோம், எங்கள் டிஎன்ஏ எங்கள் மக்களுடன் ஒத்துப்போகிறது. இப்போது பெரிய அளவிலான பிராந்தியக் கட்சிகளாக மாறிவிட்ட தேசியக் கட்சிகள் போலல்லாமல் நாங்கள் எப்போதும் மக்கள் பிரச்சனைக்கு செவி சாய்ப்போம். தேசிய கட்சிகள் முன்பு போல் வலுவாக இல்லை. இருப்பினும் அவர்கள் மக்களை புரிந்துக்கொண்டுள்ளனர் என கூறுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உலகளாவிய அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் – அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் மக்களை புரிந்துக்கொள்ளாமல் செயல்படுகின்றனர். தெலுங்கானாவிலும் இதே நிலைதான், காங்கிரஸும், பா.ஜ.க.வும் எங்களை போல் மக்களை அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. நாங்கள் மாநிலத்திற்காக போராடினோம், மாநிலத்திற்காக உழைத்தோம். மக்கள் பி.ஆர்.எஸ் –க்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்.  நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், நாங்கள் சதம் அடிக்கப் போகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவுக்கு முன்னதாக, சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டசபைகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள் உள்ள மாநிலம் முழுவதும் 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலுக்காக 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்துள்ளார்.


 

தலைப்பு செய்திகள்

இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Embed widget