மேலும் அறிய

MLC Kavitha: தெலங்கானா தேர்தல்: 'மக்கள் ஆதரவு எங்களுக்கு தான்; எங்கள் டிஎன்ஏ எங்கள் மக்களுடன் ஒத்துப்போகிறது' - கவிதா

இந்த தேர்தலில் மக்கள் பி.ஆர்.எஸ் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் எம்.எல்.சி கவிதா தெரிவித்துள்ளார்.

இன்று வாக்கு பதிவில் கலந்துக்கொண்டு ஜனநாயகத்தை வலுப்பெற செய்வதற்கான நாள் என எம்.எல்.சி கவிதா தெரிவித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெலங்கானா சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவானது தொடங்கியுள்ளது. அங்கு யாருக்கு மக்கள் ஆதரவு அளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ஆளும் பாரத ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 பிரதான கட்சிகள் இடையே அங்கு பலத்த போட்டி நிலவுகிறது. இது தவிர ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களம் காண்பதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த கவிதா தேர்தலில் வாக்களிக்க புறப்பட்ட போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ஆண்கள், பெண்கள், இளம் தலைமுறையினர் என அனைவரும் தேர்தலில் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோளாக கேட்டுக்கொள்கிறேன். இன்று விடுமுறை நாள் அல்ல அனைவரும் வாக்குப்பதிவில் கலந்துக்கொண்டு ஜனநாயகம் வலுபெற செய்வதற்கான நாள். 2018-ம் ஆண்டு மக்கள் எப்படி பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ஆதரவளித்தனரோ, அதே நிலைமையே இந்த முறையும் காணப்படுகிறது. மக்கள் இந்த முறையும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

எங்கள் மக்களை நாங்கள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளோம், எங்கள் டிஎன்ஏ எங்கள் மக்களுடன் ஒத்துப்போகிறது. இப்போது பெரிய அளவிலான பிராந்தியக் கட்சிகளாக மாறிவிட்ட தேசியக் கட்சிகள் போலல்லாமல் நாங்கள் எப்போதும் மக்கள் பிரச்சனைக்கு செவி சாய்ப்போம். தேசிய கட்சிகள் முன்பு போல் வலுவாக இல்லை. இருப்பினும் அவர்கள் மக்களை புரிந்துக்கொண்டுள்ளனர் என கூறுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உலகளாவிய அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் – அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் மக்களை புரிந்துக்கொள்ளாமல் செயல்படுகின்றனர். தெலுங்கானாவிலும் இதே நிலைதான், காங்கிரஸும், பா.ஜ.க.வும் எங்களை போல் மக்களை அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. நாங்கள் மாநிலத்திற்காக போராடினோம், மாநிலத்திற்காக உழைத்தோம். மக்கள் பி.ஆர்.எஸ் –க்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்.  நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், நாங்கள் சதம் அடிக்கப் போகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவுக்கு முன்னதாக, சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டசபைகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள் உள்ள மாநிலம் முழுவதும் 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலுக்காக 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்துள்ளார்.


 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Udhayanidhi Stalin Interview : ’திமுகவிற்கு எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
’திமுகவின் எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
Embed widget