மேலும் அறிய

முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: போராட்டக்களமாக மாறிய இந்திய பகுதிகள்.. என்ன நடக்குது?

இந்தியாவின் பெரிய மசூதிகளில் ஒன்றான ஜாமியா மசூதிக்கு வெளியே போராட்டம் வெடித்துள்ளது.

பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபூர் சர்மா, நவீன் குமார் ஆகியோர் முகமுது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரச்னையை தீர்க்கும் வகையில் அனைத்து மதங்களை மதிப்பதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சர்ச்சை தீர்ந்தபாடில்லை. 


முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: போராட்டக்களமாக மாறிய இந்திய பகுதிகள்.. என்ன நடக்குது?

ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரெபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவுகள், லிப்யா, இந்தோனேசியா ஆகிய 15 நாடுகள் இந்திய அரசுக்கு எதிராக தங்களது அதிகாரப்பூர்வ எதிர்ப்பினை தெரிவித்தன.


முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: போராட்டக்களமாக மாறிய இந்திய பகுதிகள்.. என்ன நடக்குது?

இதை கண்டித்துள்ள அந்த நாடுகள், இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்த பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை கெடுத்துள்ளதாக விமர்சனம் மேற்கொண்டன.

இதற்கு மத்தியில், விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "கூறப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் எந்த விதத்திலும் இந்திய அரசின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. அவை, குறிப்பிட்ட ஒரு கும்பலின் கருத்து மட்டுமே" என தெரிவித்தது.

சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில், இரண்டு செய்தி தொடர்பாளர்களையும் பாஜக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்த ஒரு மதத்தையும் அல்லது பிரிவினரையும் அவமதிக்கும் கொள்கைக்கு எதிராக உள்ளோம். அம்மாதிரியான நபர்களையோ அவர்களின் தத்துவத்தையோ ஊக்குவிக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டது.


முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: போராட்டக்களமாக மாறிய இந்திய பகுதிகள்.. என்ன நடக்குது?

பாஜக செய்தி தொடர்பாளர்களின் கருத்தை கண்டித்துள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.

முன்னதாக, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய தூதர்களுக்கு கத்தார், ஈரான், குவைத் ஆகிய நாடுகள் சம்மன் அனுப்பியிருந்தன. இதற்கு, இந்திய தூதரகம் சார்பில் அறிக்கை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்திய பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் சார்பில் கருத்து பதியப்பட்டது. 

இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஹைதராபாத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.  இந்தியாவின் பெரிய மசூதிகளில் ஒன்றான ஜாமியா மசூதிக்கு வெளியே போராட்டம் நடைபெற்று வருகிறது. நூபர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்கள், ஒரு மணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். 

இதுகுறித்து ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் பேசுகையில், "இந்த போராட்டத்தை யார் ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை. வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் சிலர் கோஷங்கள் எழுப்பியதால் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் விரைவில் கலைந்து சென்றனர். இப்போது நிலைமை நன்றாக இருக்கிறது" என்றார்.

உத்தரப் பிரதேசம் சஹரன்பூர், மொரதாபாத், பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் மிக பெரிய மாநிலங்களில் ஒன்றான பிரயக்ராஜில் கல் வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. இருப்பினும், போராட்டக்காரர்களை காவல்துறையினர் தண்ணீர் புகை குண்டு வீசி அடக்கினர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.