கேரள லாட்டரி: 1 கோடி பரிசு வென்றது யார்? அதிர்ஷ்டசாலிக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்!
லாட்டரியின் சுவர்ண கேரளம் SK 43 குலுக்கல் முடிவுகள், மார்ச் 6ம் தேதி நேற்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம், பாளையம், பேக்கரி ஜங்ஷன் அருகே உள்ள கோர்க்கி பவனில் வெளியிடப்பட்டன.
கேரளா லாட்டரியின் சுவர்ண கேரளம் SK 43 குலுக்கல் முடிவுகள், மார்ச் 6ம் தேதி நேற்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம், பாளையம், பேக்கரி ஜங்ஷன் அருகே உள்ள கோர்க்கி பவனில் வெளியிடப்பட்டன. இந்தக் குலுக்கலில் குறைந்தபட்சம் பத்து பரிசுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல் பரிசை வென்ற அதிர்ஷ்டசாலிக்கு ரூ.1 கோடியும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்றவர்களுக்கு முறையே ரூ.30 லட்சம் மற்றும் ரூ.5 லட்சமும் கிடைக்கும். இது தவிர, RA, RB, RC, RD, RE, RF, RG, RH, RJ, RK, RL, RM ஆகிய சீரிஸ்களில் ரூ.5,000 மதிப்பிலான ஆறுதல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவர்ண கேரளம் SK 43 வெற்றியாளர்களின் எண்கள் பின்வருமாறு:-
முதல் பரிசு ரூ.1,00,00,000/- [1 கோடி] : RF 607844
ஆறுதல் பரிசு ரூ.5,000/- : RA 607844,RB 607844,RC 607844,RD 607844,RE 607844,RG 607844,RH 607844,RJ 607844,RK 607844,RL 607844, RM 607844
இரண்டாம் பரிசு ரூ.30,00,000/- [30 லட்சம்]: RD 865688
மூன்றாம் பரிசு ரூ.5,00,000/- [5 லட்சம்] : RJ 324467
நான்காம் பரிசு ரூ.5,000/- : 9175 9221 7756 7400 8929 4016 3872 3825 1576 1395 3829 4973 9219 2920 0506 4927 9091.
ஐந்தாம் பரிசு ரூ.2,000/, ஆறாம் பரிசு ரூ.1,000/, ஏழாம் பரிசு ரூ.500/,எட்டாம் பரிசு ரூ.200/, ஒன்பதாம் பரிசு ரூ.100/
இருப்பினும், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்ற லாட்டரி சீட்டுகளை விற்ற ஏஜெண்டுகளுக்கும் கமிஷன் மூலம் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏஜெண்டுகளுக்கு பரிசுத் தொகையில் 10% முதல் 12% வரை கமிஷன் வழங்கப்படும்.
உதாரணமாக, முதல் பரிசான ரூ.1 கோடியில் 10% கமிஷன் என்பது சுமார் ரூ.10,00,000 ஆகவும், 12% கமிஷன் என்பது ரூ.12,00,000 ஆகவும் இருக்கும். ஆனால் இது தவிர, பரிசுத் தொகைக்கு 30% வரியும், 4% செஸ் வரியும் விதிக்கப்படும். இந்தத் தொகைகள் கழிக்கப்பட்ட பிறகு, மீதமுள்ள பரிசுத் தொகையை வெற்றியாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

கேரளா லாட்டரி சுவர்ண கேரளம் SK 43 பரிசுத் தொகையை பெறுவது எப்படி?
பரிசுத் தொகை ரூ.5,000-க்கும் குறைவாக இருந்தால், கேரளாவில் உள்ள எந்தவொரு லாட்டரி கடைகளிலும் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், பரிசுத் தொகை ரூ.5,000-க்கு மேல் இருந்தால், சில கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ரூ.5,000-க்கு மேற்பட்ட பரிசுத் தொகையை, வெற்றி பெற்ற டிக்கெட்டை அதற்கென நியமிக்கப்பட்ட வங்கிகளிலோ அல்லது மாநில அரசுத் துறையிலோ சமர்ப்பிப்பதன் மூலம் பெறலாம். டிக்கெட்டுடன் பின்வரும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்:
- சுய சான்றொப்பமிட்ட, லாட்டரி டிக்கெட்டின் இரு பக்கங்களின் நகலுடன் (Photostat copy) உரிமை கோரும் விண்ணப்பம்.
- கெசட்டட் அதிகாரி/நோட்டரி மூலம் சான்றொப்பமிடப்பட்ட, பரிசு வென்றவரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
- பரிசுத் தொகையைப் பெறுவதற்கான ரசீதில், ரூ.1 மதிப்பிலான வருவாய் முத்திரை ஒட்டி, வெற்றியாளரின் முழு முகவரியுடன் சமர்ப்பிக்க வேண்டும் (இதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்).
- பரிசு வென்றவர் மைனராக இருந்தால், தகுந்த அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட காப்பாளர் சான்றிதழ்.
- ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட்டாக பரிசுக்கு உரிமை கோரினால், அவர்களில் ஒருவர் பரிசுத் தொகையைப் பெற அங்கீகரிக்கப்பட்டு, ரூ.50 மதிப்பிலான முத்திரைத் தாளில் 'கூட்டு உறுதிமொழிப் பத்திரம்' (Joint Declaration) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- பான் கார்டின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்கள்.
- அடையாளத்தை நிரூபிக்க சான்றொப்பமிடப்பட்ட ஆவணம் (ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் சான்றொப்பமிடப்பட்ட நகல்).
- கேரளா லாட்டரி விதிகளின்படி, குலுக்கல் நடந்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள், பரிசு வென்றவர் தேவையான அனைத்து ஆவணங்களுடன் தனது வெற்றி டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும்.























