மேலும் அறிய

2ம் வகுப்பு மாணவனின் காலைப்பிடித்து தலைகீழாக தொங்கவிட்ட சைக்கோ ஆசிரியர்..!

தலைகீழாக தொங்கிய மாணவன் பயத்தில் கதறி அழும் சத்தம் கேட்டு அங்கு குவிந்த மாணவர்களும், மற்ற ஆசிரியர்களும் மாணவனை விட்டுவிடுமாறு தலைமை ஆசிரியரிடம் வற்புறுத்தினர்.

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவரின் கால்களை பிடித்து மாடியிலிருந்து தலை கீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியரை காவல் துறை கைது செய்து உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள பள்ளி ஒன்றில் சோனு யாதவ் என்ற மாணவர் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அருகில் மதிய உணவு இடைவெளி நேரத்தில் சக மாணவனை கடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடி வாங்கிய மாணவன் சோனு யாதவ் மீது ஆசிரியர்களிடம் புகார் அளித்து உள்ளார். இந்த புகார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மாவுக்கு எட்டியது. ஆத்திரம் அடைந்த தலைமை ஆசிரியர் மனோஜ், சக மாணவனை கடித்ததற்காக மாணவன் சோனு யாதவை பள்ளியின் மேல் மாடிக்குக்கு இழுத்துச் சென்று உள்ளார். அங்கு மாணவனின் கால்களை பிடித்து தூக்கி தலைகீழாக வைத்த தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா, தடுப்புச் சுவருக்கு வெளியே சோனு யாதவை அந்தரத்தில் தொங்கவிட்டார்.

தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த மாணவன் சோனு யாதவிடம், அவர் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்குமாறும், இல்லாவிட்டால் அப்படியே கீழே தூக்கி வீசிவிடுவேன் என்றும் மிரட்டி உள்ளார் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா. தலைகீழாக தொங்கிய மாணவன் பயத்தில் கதறி அழும் சத்தம் கேட்டு அங்கு குவிந்த மாணவர்களும், மற்ற ஆசிரியர்களும் மாணவனை விட்டுவிடுமாறு தலைமை ஆசிரியரிடம் வற்புறுத்தினர். அங்கிருந்தவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தலைமை  ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா மாணவன் சோனு யாதவை விட்டார். இதை பள்ளியில் இருந்த யாரோ வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலானது. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து உள்ளனர்.

2ம் வகுப்பு மாணவனின் காலைப்பிடித்து தலைகீழாக தொங்கவிட்ட சைக்கோ ஆசிரியர்..!

இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் மனோஜை மிர்சாபூர் போலீசார் கைது செய்தனர். தலைமை ஆசிரியர் மீது சிறுவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மாணவர் சோனு யாதவின் தந்தை ரஞ்சித் யாதவ், “தலைமை ஆசிரியர் செய்த செயல் தவறானது. ஆனால், அன்பின் வெளிப்பாடாகவே அவர் அவ்வாறு செய்து இருக்கிறார். எனவே இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.” எனத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தலைமை ஆசிரியர்  தெரிவிக்கையில், ”மாணவன் சோனு யாதவுக்கு குறும்புத்தனம் அதிகம். குழந்தைகளையும் ஆசிரியர்களையும் சோனு கடித்து விடுகிறார். அவரது தந்தைதான் என்னிடம் கண்டிக்க சொன்னார். பயம் காட்டுவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்.” எனத் தெரிவித்து உள்ளார்.

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் செய்தி! RailOne சீசன் டிக்கெட் விதிகள் மாற்றம்! 5 பேருக்கு புக்கிங்!
ரயில் பயணிகளுக்கு சூப்பர் செய்தி! RailOne சீசன் டிக்கெட் விதிகள் மாற்றம்! 5 பேருக்கு புக்கிங்!
அக்டோபர் 15 முதல் UPI-ல் புதிய மாற்றம்: MDR கட்டணம் எவ்வளவு? முழு விபரம் இதோ
அக்டோபர் 15 முதல் UPI-ல் புதிய மாற்றம்: MDR கட்டணம் எவ்வளவு? முழு விபரம் இதோ
Kudremukh: குதிரேமுக்கில் பூத்துக் குலுங்கும் நீலக் குறிஞ்சி! மலை முழுவதும் கண்கவர் காட்சிகள்!
Kudremukh: குதிரேமுக்கில் பூத்துக் குலுங்கும் நீலக் குறிஞ்சி! மலை முழுவதும் கண்கவர் காட்சிகள்!
EPFO டிஜிட்டல் புரட்சி: பிஎஃப் தகவல்கள் இனி வாட்ஸ்அப்பில்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
EPFO டிஜிட்டல் புரட்சி: பிஎஃப் தகவல்கள் இனி வாட்ஸ்அப்பில்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
kN Nehru: ”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Attack On Mecca: இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
Anbil Mahesh Raid: அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?
TN Weather News: இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Embed widget