மேலும் அறிய

TRS MP Maloth Kavitha: ஓட்டுக்குப் பணம் : இந்திய அரசியல் வரலாற்றில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எம்.பி கவிதா மலோத்

இந்திய அரசியல் வரலாற்றில் வாக்களார்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் சிட்டிங் எம்.பி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில், மக்களவை உறுப்பினர் கவிதா மலோத் மற்றும் அவரது கூட்டாளி குற்றவாளியளாக நிரூபிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஆறு மாத சிறைத்தண்டனையும், ரூ .10,000 அபராதத் தொகையும் செலுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கவிதா மலோத் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு மஹபூபாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் வாக்களார்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் சிட்டிங் எம்.பி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.     

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான குற்றவியல் வழக்குகளை விசாரிக்கம் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இருப்பினும், தீர்ப்பை எதிர்த்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் நோக்கில், இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தனது உத்தரவில் தெரிவித்தது.   

தேர்தல் ஆணையத்தின் அதிகம் செலவினம் செய்யப்படும் தொகுதிகள் என கண்டறியப்பட்ட பட்டியலில்  மஹபூபாபாத்தும் அடங்கும். இத்தொகுதியில், 2019 மக்களவைத் தேர்தலின்போது, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டது.    

இந்நிலையில், மஹபூபாபாத் தொகுதியில் கவிதாவுக்கு ஆதரவாக சவுகத் அலி வாக்களார்களுக்கு பணம் விநியோகித்ததை பறக்கும் படை கண்டறிந்தது.  அவரிடமிருந்து சுமார் ரூ .9,500 ரொக்கம்  பறிமுதல் செய்யப்பட்டது. அலி முதல் குற்றவாளியாகவும், கவிதாவை இரண்டாவது குற்றவாளியாகவும் புர்கம்பகத் (Burgampahad) காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.   

தேர்தல் நடத்தை விதிமுறைகள்:  

இந்திய தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10,00,000/- மேல் மதிப்புள்ள பொருட்கள் வருமான வரித்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படும். மேலும், சம்பந்தப்பட்டவரின் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீடு குழு (Appellate Authority) தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில், ரூ. 3,456.22 கோடி மதிப்பிலான    ரொக்கப் பணம், மது, போதைப் பொருள், இலவச பொருட்கள், தங்கம், வெள்ளிப் பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டும், ரூ. 428 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், மது, போதைப் பொருள், இலவச பொருட்கள், தங்கம், வெள்ளிப் பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

மேலும் வாசிக்க: 

Mirabai Chanu | "முதல்ல இதை சாப்பிடணும்” : ஆசைப்பட்ட தங்கமகள் மீராபாய்...! லைஃப்டைம் முழுக்க ஃப்ரீ என்று சொன்ன டோமினோஸ்...!  

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget