நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
பெஸ்ட் புதுவை’ இலக்கை எட்ட மாநில அந்தஸ்து தேவை: பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு !

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பிரதமர் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி கோரிக்கைபுதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மேடையிலேயே, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் கிடைக்க மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (01.03.2026) புதுச்சேரியில் 2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தத் திட்டங்கள் அடங்கியுள்ளன.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
பிரதமர் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி கோரிக்கைபுதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மேடையிலேயே, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் கிடைக்க மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார்.தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனைகள்விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
"தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் ஐந்து ஆண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மக்களுக்காக எந்தெந்தத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். இவை அனைத்தும் மத்திய அரசின் ஆதரவாலும், பிரதமர் மோடியின் உதவியாலும்தான் சாத்தியமானது.விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். மாணவர்களுக்குச் சிறந்த கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கோடு எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், மீனவர்களுக்கான உதவித்தொகை மற்றும் வீடு கட்டும் திட்டம் என அனைத்துத் தரப்பு மக்களின் சமூகப் பாதுகாப்பையும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி செய்துள்ளது.
"பெஸ்ட் புதுவை' இலக்கை நோக்கி...
"பிரதமர் மோடி விரும்பிய படி, புதுச்சேரியைச் சிறந்த மாநிலமாக (Best Puducherry) மாற்றும் நிலைக்கு அரசு உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங்கள் வியந்து பாராட்டும் வகையில் புதுவை வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வளர்ச்சிப் பாதைக்குத் துணையாகப் பிரதமர் மோடி தொடர்ந்து இருந்து வருகிறார். மேலும் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தி, மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அவர் வருகை தந்துள்ளார்."மாநில அந்தஸ்து - நீண்ட காலக் கோரிக்கை"திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றினாலும், எங்களிடம் ஒரு சிறிய வலியும் கோரிக்கையும் உண்டு.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தனி அதிகாரம் வேண்டும் என்பதே அது. இது புதுவை மக்களின் பல ஆண்டுகாலக் கோரிக்கையாகும். மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சட்டசபையில் இதுவரை சுமார் 13 முறை தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலம் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும், அங்குள்ள அமைச்சரவைக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் உரிய அதிகாரம் இருக்க வேண்டும் என்பது அவசியமானது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்காமல் இருப்பது எங்களுக்கு வலியையும் வருத்தத்தையும் தருகின்றது. பல ஆண்டுகளாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்டு வருகின்றோம். புதுச்சேரி மக்கள் விரும்பும் வகையில் எங்களுக்கு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என மிக தாழ்மையோடு பிரதமரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி என்று தெரிவித்தார். முதல்வர் இக்கோரிக்கையை முன்வைத்தபோது, அரங்கில் இருந்தவர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து, கைத்தட்டல்கள் நீண்ட நேரம் ஒலித்தன.























