மேலும் அறிய

அச்சுறுத்தும் டெல்டா ப்ளஸ் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்குங்கள் என அறிவுறுத்தியது மத்திய அரசு..!

டெல்டா பிளஸ் கொரோனா வைரசின் பாதிப்பு பரவத் தொடங்கியிருப்பதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 3 கோடியைத் தாண்டியுள்ளது. உருமாறிய டெல்டா வகை கொரோனாவே இந்த பாதிப்பிற்கு அதிகளவு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும் என்று ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில், நாட்டில் டெல்டா வகை கொரோனாவை விட ஆபத்து மிகுந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரசின் தாக்கம் பரவத் தொடங்கியுள்ளது. நாட்டிலே முதன்முறையாக மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் 65 வயது பெண்மணி ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு மகாராஷ்ட்ரா, கேரளம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இந்த ஆபத்து மிகுந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் சுமார் 40 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


அச்சுறுத்தும் டெல்டா ப்ளஸ் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்குங்கள் என அறிவுறுத்தியது மத்திய அரசு..!

நிபுணர்கள் இந்த புதிய வகை கொரோனா வைரசால் மூன்றாவது அலை வரக்கூடும் என்றும். இது திட்டமிட்டதை விட முன்கூட்டியே தனது தாக்குதலைத் தொடங்கும் என்றும் ஏற்கனவே  எச்சரிக்கை விடுத்திருந்தனர். டெல்டா பிளஸ் பரவலை கண்காணித்து வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்த புதிய வகை மாறுபட்ட வைரஸ் கவலையின் மாறுபாடாக உள்ளது என்றும், இதனால் மாநிலங்கள் இந்த புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகள் இன்சாகோக் (INSACOG) ஆய்வகங்களுக்கு அனுப்பபப்ட்டு வருகிறது. சுகாதாரத்துறை நிபுணர்கள் இந்த புதிய வகை டெல்டா பிளஸ் வைரஸ் மனித உடலின் நோய் எதிர்ப்புசக்தியை கடுமையாக பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உருமாறிய கொரோனா வைரசான டெல்டா வகை கொரோனா உலகம் முழுவதும் 80 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழலில், உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து, போலந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நேபாளம், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தற்போது காணப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த புதிய வகையான டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் இதுவரை 200 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரசின் பாதிப்பை எச்சரிக்கும் விதமாக, இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் நமக்கு முன்னால் ஒரு கடினமான கொடுங்காலம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அச்சுறுத்தும் டெல்டா ப்ளஸ் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்குங்கள் என அறிவுறுத்தியது மத்திய அரசு..!

டெல்டா பிளஸ் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறனை விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக பரிசோதிக்கவில்லை. ஆனால் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் முன்னாள் ஆணையர் டாக்டர் ஸ்காட் கோட்லீப், தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதாக தெரிகிறது என்று கூறியுள்ளார். இந்தியாவின் பிரபலமான வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்  தடுப்பூசி அளித்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும், முந்தைய தொற்றுநோய்களால் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி செயல்படத்தக்க ஆற்றல் வாய்ந்தது என்று அச்சம் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசின் இரண்டாம் அலை ஓய்வதற்கு முன்பாகவே டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு தனது தாக்கத்தை தொடங்கியிருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Iran-Israel War: ஈரான் - இஸ்ரேல் மோதல்! இந்தியாவுக்கு ஷாக்.. பாசுமதி அரிசிக்கு ஏற்பட்ட 'திடீர்' சிக்கல்.
Iran-Israel War: ஈரான் - இஸ்ரேல் மோதல்! இந்தியாவுக்கு ஷாக்.. பாசுமதி அரிசிக்கு ஏற்பட்ட 'திடீர்' சிக்கல்.
Social Media Ban: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை - முதலமைச்சர் உத்தரவு!
Social Media Ban: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை - முதலமைச்சர் உத்தரவு!
kerala lottery : 10 கோடி ஜாக்பாட்! சம்மர் பம்பர் BR-108 டிக்கெட் விற்பனை தொடக்கம், அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமா?
kerala lottery : 10 கோடி ஜாக்பாட்! சம்மர் பம்பர் BR-108 டிக்கெட் விற்பனை தொடக்கம், அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமா?
ரயில் கழிவறைக்குச் சென்ற நீதிபதி மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு!
ரயில் கழிவறைக்குச் சென்ற நீதிபதி மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
US India Russia Crude Oil: “உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
“உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
GOLD AND SILVER RATE TODAY : 15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
Ration Shop Employees Salary : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget