மேலும் அறிய

Laptop Import Ban: லேப்டாப், கணினி மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தற்காலிகமாக திரும்பப்பெற்ற மத்திய அரசு

இறக்குமதி தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நவம்பர் 1ஆம் தேதி வரை திரும்ப பெறுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது.

மடிக்கணினி, கணினி (பெர்சனல் கம்ப்யூட்டர்), டேப்லெட் ஆகியவற்றை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்தது. கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு:

அதன்படி, HSN 8741 விதியின் கீழ் வரும் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதி தடைசெய்யப்பட்டது. அதேநேரம், சரியான லைசென்ஸ் பெற்று இருந்தால் மட்டும், மேற்குறிப்பிடப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

அதன்படி, உரிய அனுமதி பெற்று இருப்பவர்கள் ஒரு மடிக்கணினி, கணினி மற்றும் டேப்லெட்டை மட்டும் ஆன்லைன் தளங்கள் உள்ளிட்டவை மூலம் போஸ்டல் அல்லது கொரியர் மூலம் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அவற்றிற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அனைத்து வரிகளும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டது.

அதோடு, R&D, சோதனை, தரப்படுத்தல், மதிப்பீடு, பழுதுபார்ப்பு, மறுஏற்றுமதி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நோக்கங்களுக்காக தடை செய்யப்பட்ட பொருட்களின் 20 எண்ணிக்கையை இறக்குமதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே இந்த விலக்கு வழங்கப்படுவதாகவும், விற்பனைக்கு அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவற்றிற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அனைத்து வரிகளும் பொருந்தும் எனவும் கூறப்பட்டது. 

உள்நாட்டு மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டாலும், இந்த அறிவிப்பு, பெரு நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  அறிவிப்பு வெளியான உடனேயே, துறைமுகங்களுக்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட மின்னணு பொருட்களை இறக்குமதி செய்ய விடாமல் தடுத்து நிறுத்த தொடங்கினார். 

கட்டுப்பாடுகளை தற்காலிகமாக திரும்ப பெற்ற மத்திய அரசு:

இந்த நிலையில், இறக்குமதி தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நவம்பர் 1ஆம் தேதி வரை திரும்ப பெறுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதேபோல, புதிய விதிகளின் கீழ் இறக்குமதி செய்ய அனுமதி கோருபவர்கள் தேவையான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அவர்களில் பெரும்பாலானோருக்கு இறக்குமதி செய்வதற்கான அனுமதி உடனடியாக வழங்கப்படும் அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதுகுறித்து உயர்மட்ட அரசு அதிகாரிகள் இருவர் கூறுகையில், "ஏற்கனவே இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, வந்து கொண்டிருக்கும் பொருகளுக்கு உரிமம் வாங்க வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. ஆனால், இறக்குமதி தடை தொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே புதிய விதியை செயல்படுத்த சுங்கத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர். இந்த ஏற்றுமதிகளுக்கு ஒப்புதல் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
Sabarimala Temple Calendar 2026: சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! எந்தெந்த வங்கியில் மீண்டும் காப்பீடு செய்யலாம்- வெளியான லிஸ்ட்
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! எந்தெந்த வங்கியில் மீண்டும் காப்பீடு செய்யலாம்- வெளியான லிஸ்ட்
Bihar Election: பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு இது ஒன்று தான் முக்கிய காரணம்.! அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை
பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு இது ஒன்று தான் முக்கிய காரணம்.! அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்
”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026
பீகாரின் 25 வயது பாஜக MLA பாடகி To அரசியல்வாதி யார் இந்த மைதிலி தாக்கூர்? | Bihar | Maithili Thakur
Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
TN Heavy Rain: தமிழகத்தில் கனமழை: 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை தீவிரம்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
Sabarimala Temple Calendar 2026: சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! எந்தெந்த வங்கியில் மீண்டும் காப்பீடு செய்யலாம்- வெளியான லிஸ்ட்
விவசாயிகளுக்கு குஷியான அறிவிப்பு.! எந்தெந்த வங்கியில் மீண்டும் காப்பீடு செய்யலாம்- வெளியான லிஸ்ட்
Bihar Election: பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு இது ஒன்று தான் முக்கிய காரணம்.! அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை
பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு இது ஒன்று தான் முக்கிய காரணம்.! அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
Puducherry Weather : புதுச்சேரிக்கு  'ஆரஞ்சு அலர்ட்' ! மக்கள் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை...
Puducherry Weather : புதுச்சேரிக்கு 'ஆரஞ்சு அலர்ட்' ! மக்கள் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை...
TRB TET Exam 2025: டெட் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 86% பேர் வருகை; இன்று 2ஆம் தாள்- முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TRB TET Exam 2025: டெட் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 86% பேர் வருகை; இன்று 2ஆம் தாள்- முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN Roundup:  தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
TN Roundup: தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
Embed widget