மேலும் அறிய

BS Yediyurappa Resigns : கண்ணீருடன் ராஜினாமா அறிவிப்பு.. கர்நாடக ஆளுநருடன் முதல்வர் எடியூரப்பா சந்திப்பு

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினமா செய்வதற்காக அம்மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட்டை எடியூரப்பா ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தி்த்து வருகிறார்.

கர்நாடகத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதல்வராக பொறுப்பு வகித்து வருபவர் எடியூரப்பா. இவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த சில தினங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தது. அவர் ராஜினாமா செய்ய உள்ள தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா கடிதத்தை அளிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. இதையடுத்து, அந்த மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட்டை சந்திப்பதற்காக சற்றுமுன் முதல்வர் எடியூரப்பா நேரில் சென்றுள்ளார். இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளிப்பார் என்று எதிர்பார்க்ப்படுகிறது. 

கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பதற்கு முன்பாக, உணர்ச்சிகரமாக கண்ணீர்மல்க பேசியுள்ளார். நான் ஆட்சிக்கு வந்தது முதல் நெருக்கடி இருந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக தொற்று காலம். நாங்கள் அதற்காக கடினமாக உழைத்தோம். எனக்கு வருத்தம் ஏதுமில்லை. நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.  

BS Yediyurappa Resigns : கண்ணீருடன் ராஜினாமா அறிவிப்பு.. கர்நாடக ஆளுநருடன் முதல்வர் எடியூரப்பா சந்திப்பு

தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரியில் பா.ஜ.க. பெரிய வளர்ச்சி அடையாத சூழலில் கர்நாடகாவில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தியவர் எடியூரப்பா. கடந்த 2008-ஆம் ஆண்டில் முதன்முறையாக கர்நாடகாவின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடியூரப்பா, 2011ம் ஆண்டில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டால் அப்பொறுப்பில் இருந்து பதவி விலகினார். 

தற்போது அவரது தலைமையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், எடியூரப்பாவின் மகன்கள் ஆட்சி நிர்வாகத்தில் பெரிதும் தலையிடுவதாக டெல்லி பா.ஜ.க. தலைமைக்கு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சென்றது. மேலும் எடியூரப்பாவின் வயது மற்றும் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து கர்நாடக பா.ஜ.க.வினரால் எழுப்பப்பட்டு வந்தது. 

இந்த சூழலில், கடந்த வாரம் எடியூரப்பா திடீரென டெல்லி சென்றார். அப்போது, பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை நேரில் சந்தித்தார். பா.ஜ.க.வின் கொள்கைப்படி, 75 வயதானவர்கள் முக்கிய பொறுப்புகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், எடியூரப்பா ஆட்சி மீதான குற்றச்சாட்டுகள், அவரது வயது மூப்பு ஆகியவற்றின் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியானது. 


BS Yediyurappa Resigns : கண்ணீருடன் ராஜினாமா அறிவிப்பு.. கர்நாடக ஆளுநருடன் முதல்வர் எடியூரப்பா சந்திப்பு

மேலும், பாஜக தேசியத் தலைவர் நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் என் மரியாதையையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளனர். இந்த அன்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பாஜகவில் 75 வயது நிறைவடைந்த ஒருவருக்கு, பதவிகள் தரப்படுவதில்லை. ஆனால், என்னை 78-79 வயது வரை அவர்கள் பணி செய்ய அனுமதித்துள்ளார்கள். பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலில் மீண்டும் ஏற்ற வேண்டும். மாநிலத்தில் கட்சியை பலப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. ஜே.பி.நட்டா என்ன சொன்னாலும் அதைப் பின்பற்றுவேன். பா.ஜ.க.வின் மீது உயரிய விசுவாசம் கொண்டவன் என்பதில் பெருமை கொள்கிறேன். உயர்ந்த நடத்தை முறைகளை பின்பற்றி கட்சிக்கு சேவை செய்திருக்கிறேன். கட்சி நெறிமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.  கட்சிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்காள்வதாக கூறியிருந்தார்.

அவரது இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என்பதை உறுதி செய்தது. இந்த நிலையில், கர்நாடக மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அளிப்பதற்காக சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget