Breaking News Live : தமிழ்நாட்டில் இன்று 1,500 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
LIVE

Background
நாளை அதிமுக ஆலோசனைக் கூட்டம்
அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,500 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,472 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 26 June 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 26, 2022
Today/Total - 1,472 / 34,68,344
Active Cases - 7,458
Discharged Today/Total - 691 / 34,22,860
Death Today/Total - 0 / 38,026
Samples Tested Today/Total - 25,821 / 6,70,44,064@
Test Positivity Rate (TPR) - 5.7%#TNCoronaUpdate #TN pic.twitter.com/smfkqOk6uA
அதிமுக-வை காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது- சசிகலா
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையை என்னால் சரி செய்ய இயலும். எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். அதிமுக கட்சியை காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எங்கள் பிரச்னையை நாங்கள சரி செய்து கொள்வோம் என சுற்றுப்பயணத்தின் போது சசிகலா தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் அரசியல் பயணம்..! புரட்சிப் பயணத்தை தொடங்கிய சசிகலா..!
அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலா தற்போது தி.நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து தமிழ்நாடு முழுவதும் புரட்சிப்பயணம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார்.
அசாதாரண சூழலை உருவாக்கியவர்களுக்கு மக்கள் தண்டனை வழங்குவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கருத்து
மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வில் நிகழும் அசாதாரண சூழலை உருவாக்கியவர்களுக்கு மக்களும் தொண்டர்களும் தக்க தண்டனை வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

