மேலும் அறிய

Rahul Gandhi On BRS: ”நான்கு டயர்களும் பஞ்சரான வண்டி தான் பாஜக” - ராகுல் காந்தியின் பேச்சுக்கு குவியும் எதிர்வினைகள்

பிரதமர் மோடி மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரை விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

பிரதமர் மோடி மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரை விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். ஒரே தேர்தலில் வென்று விட்டு காங்கிரஸ் அதிகப்படியாக பேசி வருவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

தெலங்கானா தேர்தல்:

நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், தென்னிந்தியாவை சேர்ந்த தெலங்கானாவும் ஒன்று. சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த சந்திரசேகர் ராவ் கடந்த சில நாட்களாக அக்கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால், எதிர்வரும் தேர்தல்களில் சந்திரசேகர் ராவ் பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி பேசியது என்ன?

இந்நிலையில் தான் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் எனும் பகுதியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திசந்திரசேகர ராவ் பாரதிய ஜனதா கட்சியின் 'பி' கட்சியாக செயல்பட்டு வருகிறார். அந்த கட்சியை பாஜக ரெஷ்தேதார் (உறவு) சமிதி என்று அழைக்கலாம். சந்திரசேகர ராவ் மற்றும் அவரது கட்சியில் உள்ளவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு, அவரை பாஜகவிற்கு அடிபணியச் செய்துள்ளது. சந்திரசேகர ராவ் உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது. அவர் இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் காங்கிரஸ் இருக்காது என்பதை எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் வலியுறுத்துகிறேன்.

ரிமோட் கன்ட்ரோல் யாரிடம் உள்ளது?

சந்திரசேகர ராவ் மோடியிடம் உள்ள ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படுகிறார். சந்திரசேகர ராவ் தன்னை மன்னராகவும், தெலுங்கானா அவருடை ராஜ்ஜியம் என்றும் நினைக்கிறார். கர்நாடகாவில் ஊழல், மக்கள் எதிர்ப்பு அரசுக்கு எதிராக போராடி ஏழை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களால் பாஜகவை தோற்கடித்தோம். அதுதான் தெலுங்கானாவிலும் நடக்கப்போகிறது. ஒரு பக்கம் அரசின் பணக்காரர்களும், அதிகாரம் படைத்தவர்களும் இருப்பார்கள். இன்னொரு பக்கம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்கள் எங்களுடன் இருப்பார்கள். கர்நாடகாவில் என்ன நடந்ததோ அப்படியே தெலுங்கானாவில் நடக்கும். தெலுங்கானாவில் பாஜக இல்லை. அவர்களுடைய நான்கு டயர்களும் பஞ்சராகிவிட்டன. தற்போது காங்கிரஸ் கட்சிக்கும்- பாஜகவின் 'பி' அணிக்கும் இடையில்தான் போட்டிஎன பேசினார். அதோடு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.4000 ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார்.

குவியும் கணடங்கள்:

இதுதொடர்பாக பேசியுள்ள பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி “முந்தைய காலத்தில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியுடன் சமரசம் செய்து கொண்டு காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், பாஜக அவர்களுடன் கூட்டணி அமைக்காது. கர்நாடகாவில் ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதால் ராகுல் காந்தி எல்லை மீறி பேசுகிறார் ” என தெரிவித்தார். 

பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரான தசோஜு ஸ்ரவன் “சந்திரசேகர் ராவ் தொடர்பாக ராகுல் காந்தி பேசியது அடிப்படை ஆதாரமற்றது. அவர் கூறியது அனைத்தும் பொய்களின் மூட்டை. தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் தயாரித்த  திரைக்கதையின் அடிப்படையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் தெரித்துள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமானது” என சாடினார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Embed widget