மேலும் அறிய

See Pics | ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்து சிக்கனை ருசித்த கரடி.. அலறிய பணியாளர்கள்.. வைரலாகும் வீடியோ

கவர்னர் மாளிகையின் ஊழியர்கள் தங்கும் பகுதிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த கிச்சனில் வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டுள்ளது.

சிக்கிம் மாநில கவர்னர் மாளிகையில் இமாலயக் கருப்புக் கரடி ஒன்று புகுந்து கோழிக்கறி சாப்பிடதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் மாநில கவர்னராக இருப்பவர் கங்கா பிரசாத் சௌராஸியா. நேற்று அங்கே கவர்னர் மாளிகையில் இரவு இமாலயப் கருப்புக் கரடி ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கவர்னர் மாளிகையின் ஊழியர்கள் தங்கும் பகுதிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த கிச்சனில் வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டுள்ளது. கரடி புகுந்த தகவல் அறிந்ததும் உடனடியாக வனச்சரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இருட்டில் கரடியை பிடிப்பது கடினம் என்பதால் விடிந்த பிறகு கரடியைப் பிடிப்பது என்பது முடிவு செய்யப்பட்டது. அதனால் வனத்துறை காவலர்கள் விடியும் வரை ஆளுநர் மாளிகையைச் சுற்றி கரடி உள்ளே புகாமல் காவல் காத்தனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by EastMojo (@east.mojo)

விடிந்த பிறகு கரடி பிடிக்கக் களத்தில் இறங்கிய வனக்காவலர்கள் மதியம் வரை போராடி பதுங்கியிருந்த கரடியை பிடித்தனர்.  பயந்து போய் நீர் குழாயில் பதுங்கியிருந்த கரடியை துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர். 

கரடியைப் பிடித்தது குறித்து பகிர்ந்த வனச்சரகத்தினர், ‘இரவு முழுவதும் கவர்னர் மாளிகைக்குள் கரடி புகுந்துவிடாதவாறு காவல் காத்தோம். காலை முழுவதும் கரடியை வலைவீசித் தேடினோம். மதியம் வரை தேடியபிறகுதான் கரடி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. நீர் வெளியேறும் குழாயில் கரடி பதுங்கியிருந்தது. அதை அடுத்து கரடிக்கு துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தினோம். முதல் ஊசி குறிதப்பியதை அடுத்து இரண்டாவது ஊசி செலுத்தி கரடியைப் பிடித்தோம். பிடிக்கப்பட்ட கரடியைத் தற்போது பங்கலகா வனவிலங்கு சரணாலயத்தில் விடவிருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

இமாலயக் கருப்புக் கரடிகள் அழிந்துவரும் விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget