மேலும் அறிய

400 வாய்தாக்கள்; 35 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற 85 வயது விவசாயி..

சாட்சி போதியதாக இல்லை எனக் கூறி 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு விவசாயி அவர் மீதான வழக்கிலிருந்து விடுவித்துள்ளது நீதிமன்றம்.

சாட்சி போதியதாக இல்லை எனக் கூறி 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு விவசாயி அவர் மீதான வழக்கிலிருந்து விடுவித்துள்ளது நீதிமன்றம்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் தரம்பால் சிங். இவருக்கு 85 வயதாகிறது. தரம்பால், ஷாம்ளி மாவட்டம் ஹரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி.  இவர் மீது கடந்த 1986 ஆம் ஆண்டு வீட்டிலேயே சட்டவிரோதமாக பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இவரது சகோதரர் குன்வர்பாலும் சேர்க்கப்பட்டிருந்தார். குன்வர்பால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தரம்லால் அந்த வழங்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: "நான் என் வாழ்க்கையில் பணம், புகழ், மன அமைதி ஆகியவற்றை இழக்க இந்த வழக்குதான் காரணம். 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதாவது எனக்கு நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி. இதற்காக நான் மாண்புமிகு நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நிறைய பணம் இழந்துவிட்டேன். இத்தனை ஆண்டுகளில் 400 வாய்தாக்களில் ஆஜராகியிருக்கிறேன்.

1986 நவம்பர் மாதம் தானா பவண் போலீஸார் என்னையும் என் சகோதரரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எங்கள் வீட்டில் இருந்து 26 பைகளில் போலி பூச்சிக் கொல்லிகளைக் கண்டெடுத்ததாகவும் கூறப்பட்டது. எங்கள் மூவர் மீதும் இபிகோ 420 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். பின்னர் ஜாமீனில் வெளிவந்தோம். அன்றிலிருந்து நான் 35 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஒருவழியாக இந்த வழக்கில் போதிய சாட்சி இல்லாததால் நான் விடுவிக்கப்பட்டிருக்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய மன ஆறுதலைத் தருகிறது" என்று கூறினார்.
இந்த வழக்கு குறித்து தரம்பாலின் வழக்கறிஞர் கரண் சிங் பண்டிர், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரில் குன்வர்பால் 5 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்துவிட்டார். லியாகாத் தலைமறைவாகிவிட்டார். அரசுத் தரப்பில் இந்த வழக்கில் இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு சாட்சியத்தைக் கூட காட்ட முடியவில்லை. கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்தும் காட்டப்படவில்லை.

இப்படியே இந்த வழக்கு 35 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட நிலையில் இப்போது தரம்பால் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினார்.

நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் சிவில் வழக்குகள் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியிருக்கும். சாதாரண வழக்குகளை விரைந்து விசாரித்து உரியவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே தரம்பால் போன்றோரின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Embed widget