மேலும் அறிய

400 வாய்தாக்கள்; 35 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற 85 வயது விவசாயி..

சாட்சி போதியதாக இல்லை எனக் கூறி 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு விவசாயி அவர் மீதான வழக்கிலிருந்து விடுவித்துள்ளது நீதிமன்றம்.

சாட்சி போதியதாக இல்லை எனக் கூறி 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு விவசாயி அவர் மீதான வழக்கிலிருந்து விடுவித்துள்ளது நீதிமன்றம்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் தரம்பால் சிங். இவருக்கு 85 வயதாகிறது. தரம்பால், ஷாம்ளி மாவட்டம் ஹரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி.  இவர் மீது கடந்த 1986 ஆம் ஆண்டு வீட்டிலேயே சட்டவிரோதமாக பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இவரது சகோதரர் குன்வர்பாலும் சேர்க்கப்பட்டிருந்தார். குன்வர்பால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தரம்லால் அந்த வழங்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: "நான் என் வாழ்க்கையில் பணம், புகழ், மன அமைதி ஆகியவற்றை இழக்க இந்த வழக்குதான் காரணம். 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதாவது எனக்கு நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி. இதற்காக நான் மாண்புமிகு நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நிறைய பணம் இழந்துவிட்டேன். இத்தனை ஆண்டுகளில் 400 வாய்தாக்களில் ஆஜராகியிருக்கிறேன்.

1986 நவம்பர் மாதம் தானா பவண் போலீஸார் என்னையும் என் சகோதரரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எங்கள் வீட்டில் இருந்து 26 பைகளில் போலி பூச்சிக் கொல்லிகளைக் கண்டெடுத்ததாகவும் கூறப்பட்டது. எங்கள் மூவர் மீதும் இபிகோ 420 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். பின்னர் ஜாமீனில் வெளிவந்தோம். அன்றிலிருந்து நான் 35 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஒருவழியாக இந்த வழக்கில் போதிய சாட்சி இல்லாததால் நான் விடுவிக்கப்பட்டிருக்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய மன ஆறுதலைத் தருகிறது" என்று கூறினார்.
இந்த வழக்கு குறித்து தரம்பாலின் வழக்கறிஞர் கரண் சிங் பண்டிர், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரில் குன்வர்பால் 5 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்துவிட்டார். லியாகாத் தலைமறைவாகிவிட்டார். அரசுத் தரப்பில் இந்த வழக்கில் இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு சாட்சியத்தைக் கூட காட்ட முடியவில்லை. கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்தும் காட்டப்படவில்லை.

இப்படியே இந்த வழக்கு 35 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட நிலையில் இப்போது தரம்பால் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினார்.

நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் சிவில் வழக்குகள் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியிருக்கும். சாதாரண வழக்குகளை விரைந்து விசாரித்து உரியவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே தரம்பால் போன்றோரின் கோரிக்கையாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget