மேலும் அறிய

Crime: சேர் கவர் கலர் சரியில்ல.. கல்யாண வீட்டில் தகராறு.. கொலையில் முடிந்த விபரீதம்!

பிரச்னை இல்லையென்றால் ஒரு நிகழ்ச்சிக்கு என்ன மரியாதை என வரிந்துக் கட்டிக்கொண்டு சண்டை போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார். அது சில நேரங்களில் எதிர்பாராத விஷயங்களில் சென்று முடியும் அளவுக்கு உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் நடைபெற்ற தகராறில் தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமண வீட்டில் தகராறு

பொதுவாக திருமணம் என்பது பெற்றோர்கள் மட்டுமல்லாது மணமக்களின் மிகப்பெரிய கனவாக இருக்கும். இத்தகைய கல்யாண பேச்சு தொடங்குவது தொடங்கி தாலி கட்டும் நேரம் வரை எந்தவித பிரச்னையும் வந்துவிடக் கூடாது என கடவுளை வேண்டிக் கொள்வோம். அதையும் மீறி பிரச்னை இல்லையென்றால் ஒரு நிகழ்ச்சிக்கு என்ன மரியாதை என வரிந்துக் கட்டிக்கொண்டு சண்டை போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார். அது சில நேரங்களில் எதிர்பாராத விஷயங்களில் சென்று முடியும் அளவுக்கு உள்ளது. அப்படியான ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

சேர் கவர் கலர் சரியில்ல

இதுதொடர்பாக காவல்துறையினர் தரப்பில் வெளியான தகவலின்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பார்சியா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சிங் என்பவர் அங்குள்ள  காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மருமகன் அஜித் குமார் சிங் என்ற போதா, நிகழ்ச்சிகளுக்கு பந்தல் போடும் பணியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் மஜோவா கிராமத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டு விட்டதாக கூறிய அவர்  வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்றும் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி தனது மருமகனை கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் ஹால்டி காவல் நிலையத்தில் அஜித் குமார் சிங் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே நவம்பர் 25 ஆம் தேதி, ஹுகும் சாப்ரா காட் அருகே கங்கை நதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அதில் ஒரு நபரின் உடல் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அவ்வழியாக சென்று பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்த நிலையில் இருப்பவர் காணாமல் போன அஜித் குமார் சிங் என்பது அடையாளம் காணப்பட்டது. 

இதனையடுத்து சகோதரர் சந்தன் குமார் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த கொலையை செய்ததாக பியூஷ் குமார் சிங், அனிஷ் குமார் சிங் மற்றும் அங்கூர் சிங்  ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிப்பட்டது. 

அதாவது, நவம்பர் 22 ஆம் தேதி மஜோவா கிராமத்தில் ஒரு திருமணத்திற்காக அஜித் பந்தல் போடுவதற்காக சென்றுள்ளார். அன்று அதிகாலை 1 மணியளவில், நாற்காலி மற்றும் சோபா கவர்களின் நிறத்தை மாற்றுவது தொடர்பாக அங்கிருந்த சிலருக்கும், அஜித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பியூஷ் குமார் சிங், அனிஷ் குமார் சிங் மற்றும் அங்கூர் சிங்  ஆகிய 3 பேரும் அஜித்தை கொன்று உடலை மோட்டார் சைக்கிளில் கட்டி கங்கை நதியில் வீசியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
Tamilisai Sholinganallur constituency : சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
சோழிங்கநல்லூரை குறிவைக்கும் தமிழிசை.! பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கும் இபிஎஸ்.? காரணம் என்ன.?
Kia Syros அல்லது Mahindra XUV 3XO; மைலேஜ், ரூ.10 லட்சம் பட்ஜெட்டுக்குள் எந்த SUV சிறந்தது.?
Kia Syros அல்லது Mahindra XUV 3XO; மைலேஜ், ரூ.10 லட்சம் பட்ஜெட்டுக்குள் எந்த SUV சிறந்தது.?
Top 10 News Headlines: கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
கீழடி 11-ம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி, தங்கம் விலை குறைவு, ஸ்மிருதி மந்தனா சாதனை - 11 மணி செய்திகள்
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
Embed widget