”2024 இல் மீண்டும் மோடிதான் “ - ஜெர்மெனி வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
”இந்த போரில் யாரும் வெல்லப்போவது கிடையாது . எல்லோருக்குமே இது இழப்புதான்”

பிரதமர் மோடி தற்போது வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ளார். இந்த ஆண்டின் முதல் சுற்றுப்பயணத்தை நேற்று (மே 2 ) தொடங்கிய பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடுகளான ஜெர்மெனி, டென்மார்க் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு சென்ற பிரதமர் மோடி , அந்நாட்டு அதிபர் Olaf Scholz சந்தித்து பேசினார். அதன் பிறகு இந்தியா - ஜெர்மெனி இடையேயான பசுமை மற்றும் நீடித்த எரிசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் நரேந்திர மோடியும், ஜெர்மெனி பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஸும் கையெழுத்திட்டனர். இந்த சந்திப்பிற்கு தலைநகர் பெர்லிங்கில் கிட்டத்தட 2,000 இந்தியர்கள் அடங்கிய கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.

அப்போது அங்கிருந்த இந்தியர்கள் “வந்தே மாதரம் “, “பாரத் மாதாவிற்கு ஜே“ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக “ 2024, மோடிதான் மீண்டும் (2024, modi again ) என்னு கோஷத்தை எழுப்பி உற்சாக வரவேற்பை ஏற்படுத்தினர். வருகிற 2024 ஆம் ஆண்டு பிரதமரை தேர்வு செய்வதற்கான லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மீண்டும் மோடியே தங்கள் பிரதமராக வர வேண்டும் என ஆராவாரம் செய்திருப்பது தற்போது இணையத்தில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மோடியின் சுற்றுப்பயணம் சில ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களை உருவாக்கி கொடுத்திருப்பதுதான் இந்த ஆதரவிற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய மோடி , “ எனது நாட்டு குழந்தைகளை பெரிலிங்கில் சந்திப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.ஜெர்மெனியின் பல்வேறு நகரங்களில் இருந்து நீங்கள் இந்த கூட்டத்திற்காக வந்துருப்பது மகிழ்ச்சி” என தனது உரையை தொடங்கிய மோடி .... ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் குறித்தும் பேசினார். அதில் “ ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு அமைதிப்பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு. இந்த போரில் யாரும் வெல்லப்போவது கிடையாது . எல்லோருக்குமே இது இழப்புதான். இந்தியா அமைதியையே விரும்புகிறது. உகரைனுக்கு இந்தியா உதவி வருகிறது. இந்த பிரச்சினை காரணமாக ஏழை , எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சா எண்ணை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது ” என்றார்.

ஜெர்மெனி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டென்மார் செல்லும் பிரதமர் மோடி, அங்கு முதற்கட்டமாக அதிபரை சந்திக்கவுள்ளார். அதன் பின்னர் இந்திய - நர்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. பின்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிபர் மெக்ரானை சந்தித்து பேசிவிட்டு , நாளை மறுநாள் இந்தியா திரும்புவார் என தெரிகிறது.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்






















