மேலும் அறிய

கோவை : 10 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கு : சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்..

சார்பு ஆய்வாளர் முருகனுக்கும், சாவித்திரிக்கும் பழக்கம் இருப்பதும், கமிஷனுக்கு ஆசைப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கிக் கிளை மேலாளர் அமித்குமார் என்பவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில், ’22 ம் தேதியன்று மதியம் 12 மணியளவில் பெண் உட்பட நான்கு பேர் வங்கிக்கு வந்து காசோலை ஒன்றைக் கொடுத்தனர். அதில் 9,99,91,000 ரூபாய் நிரப்பட்டிருந்தது. அந்தப் பணத்தை சென்னையில் ராம்சரண் அன்கோ என்ற பெயரில் நிறுவனத்தை மாற்ற வேண்டும் என கொடுத்தனர். காசோலையிலுள்ள கையெழுத்தில் சந்தேகம் வந்ததால் வங்கி ஊழியர், கிளை மேலாளருக்குத் தகவல் தெரிவித்தார். பெரிய தொகை என்பதால் செக்கில் குறிப்பிட்டிருந்த மத்தியபிரதேசம், போபாலிலுள்ள நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அப்போது அந்த நிறுவனம் சார்பில் இவ்வளவு தொகைக்கான காசோலை கொடுக்கவில்லை என பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 10 கோடி ரூபாய்க்காக கொடுக்கப்பட்ட காசோலை போலி என்பது உறுதியானது. விசாரணையில் போலி செக்கைக் கொடுத்து ஏமாற்றத் திட்டமிட்டது தெரியவந்தது. எனவே, போலி காசோலையைக் கொடுத்து ஏமாற்றத் திட்டமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் பேரில் ஜாபர் என்கிற இர்பான்கான், கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மேத்தீவ், கோவையைச் சேர்ந்த சாவித்திரி (40), கோவை துடியலூரைச் சேர்ந்த முருகன் (55), சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பானுமதி (44), திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் (39), நாராயணன், கோபிநாதன் ஆகியோர் மீது கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதில் முருகன் என்பவர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிவருவது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவருக்கும் அறக்கட்டளை நடத்தி வரும் சாவித்திரி என்பவருக்கும் பழக்கம் இருப்பதும், கமிஷனுக்கு ஆசைப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சார்பு ஆய்வாளர் முருகன் ஆறாவது எதிரியாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். இந்நிலையில் சார்பு ஆய்வாளர் முருகன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று பணியிடை நீக்கம் செய்து கோவை சரக காவல் துறை துணை தலைவர் முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த கலையரசி மோசடி நிறுவனங்கள் மீதான புகார்கள் வழக்குப் பதிவு செய்ய காலம் தாழ்த்தி, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரின் பேரில் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அடுத்தடுத்த நாட்களில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
Karunanidhi Birthday: உட்கட்டமைப்பு டூ தொழில்நுட்பம், எதையும் விட்டு வைக்காத கருணாநிதி - கொண்டாடும் திமுக
Karunanidhi Birthday: உட்கட்டமைப்பு டூ தொழில்நுட்பம், எதையும் விட்டு வைக்காத கருணாநிதி - கொண்டாடும் திமுக
RCB Vs PBKS Final: பெங்களூரு Vs பஞ்சாப் ஃபைனல் - இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா? பேட்டிங்கா? பவுலிங்கா?
RCB Vs PBKS Final: பெங்களூரு Vs பஞ்சாப் ஃபைனல் - இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா? பேட்டிங்கா? பவுலிங்கா?
Embed widget