மேலும் அறிய

கோவை : 10 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கு : சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்..

சார்பு ஆய்வாளர் முருகனுக்கும், சாவித்திரிக்கும் பழக்கம் இருப்பதும், கமிஷனுக்கு ஆசைப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கிக் கிளை மேலாளர் அமித்குமார் என்பவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில், ’22 ம் தேதியன்று மதியம் 12 மணியளவில் பெண் உட்பட நான்கு பேர் வங்கிக்கு வந்து காசோலை ஒன்றைக் கொடுத்தனர். அதில் 9,99,91,000 ரூபாய் நிரப்பட்டிருந்தது. அந்தப் பணத்தை சென்னையில் ராம்சரண் அன்கோ என்ற பெயரில் நிறுவனத்தை மாற்ற வேண்டும் என கொடுத்தனர். காசோலையிலுள்ள கையெழுத்தில் சந்தேகம் வந்ததால் வங்கி ஊழியர், கிளை மேலாளருக்குத் தகவல் தெரிவித்தார். பெரிய தொகை என்பதால் செக்கில் குறிப்பிட்டிருந்த மத்தியபிரதேசம், போபாலிலுள்ள நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அப்போது அந்த நிறுவனம் சார்பில் இவ்வளவு தொகைக்கான காசோலை கொடுக்கவில்லை என பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 10 கோடி ரூபாய்க்காக கொடுக்கப்பட்ட காசோலை போலி என்பது உறுதியானது. விசாரணையில் போலி செக்கைக் கொடுத்து ஏமாற்றத் திட்டமிட்டது தெரியவந்தது. எனவே, போலி காசோலையைக் கொடுத்து ஏமாற்றத் திட்டமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் பேரில் ஜாபர் என்கிற இர்பான்கான், கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மேத்தீவ், கோவையைச் சேர்ந்த சாவித்திரி (40), கோவை துடியலூரைச் சேர்ந்த முருகன் (55), சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பானுமதி (44), திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் (39), நாராயணன், கோபிநாதன் ஆகியோர் மீது கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதில் முருகன் என்பவர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிவருவது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவருக்கும் அறக்கட்டளை நடத்தி வரும் சாவித்திரி என்பவருக்கும் பழக்கம் இருப்பதும், கமிஷனுக்கு ஆசைப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சார்பு ஆய்வாளர் முருகன் ஆறாவது எதிரியாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். இந்நிலையில் சார்பு ஆய்வாளர் முருகன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று பணியிடை நீக்கம் செய்து கோவை சரக காவல் துறை துணை தலைவர் முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த கலையரசி மோசடி நிறுவனங்கள் மீதான புகார்கள் வழக்குப் பதிவு செய்ய காலம் தாழ்த்தி, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரின் பேரில் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அடுத்தடுத்த நாட்களில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா?  எளிய வழிமுறை இதோ..!
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா? எளிய வழிமுறை இதோ..!
IND Vs NZ Final: இந்தியா Vs நியூசிலாந்து - ஃபைனலுக்கான துபாய் மைதானம் எப்படி? மழைக்கு வாய்ப்பு? ரிசர்வ் டே இருக்கா?
IND Vs NZ Final: இந்தியா Vs நியூசிலாந்து - ஃபைனலுக்கான துபாய் மைதானம் எப்படி? மழைக்கு வாய்ப்பு? ரிசர்வ் டே இருக்கா?
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
Embed widget