மேலும் அறிய

கோவை : 10 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கு : சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்..

சார்பு ஆய்வாளர் முருகனுக்கும், சாவித்திரிக்கும் பழக்கம் இருப்பதும், கமிஷனுக்கு ஆசைப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கிக் கிளை மேலாளர் அமித்குமார் என்பவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில், ’22 ம் தேதியன்று மதியம் 12 மணியளவில் பெண் உட்பட நான்கு பேர் வங்கிக்கு வந்து காசோலை ஒன்றைக் கொடுத்தனர். அதில் 9,99,91,000 ரூபாய் நிரப்பட்டிருந்தது. அந்தப் பணத்தை சென்னையில் ராம்சரண் அன்கோ என்ற பெயரில் நிறுவனத்தை மாற்ற வேண்டும் என கொடுத்தனர். காசோலையிலுள்ள கையெழுத்தில் சந்தேகம் வந்ததால் வங்கி ஊழியர், கிளை மேலாளருக்குத் தகவல் தெரிவித்தார். பெரிய தொகை என்பதால் செக்கில் குறிப்பிட்டிருந்த மத்தியபிரதேசம், போபாலிலுள்ள நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அப்போது அந்த நிறுவனம் சார்பில் இவ்வளவு தொகைக்கான காசோலை கொடுக்கவில்லை என பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 10 கோடி ரூபாய்க்காக கொடுக்கப்பட்ட காசோலை போலி என்பது உறுதியானது. விசாரணையில் போலி செக்கைக் கொடுத்து ஏமாற்றத் திட்டமிட்டது தெரியவந்தது. எனவே, போலி காசோலையைக் கொடுத்து ஏமாற்றத் திட்டமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் பேரில் ஜாபர் என்கிற இர்பான்கான், கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மேத்தீவ், கோவையைச் சேர்ந்த சாவித்திரி (40), கோவை துடியலூரைச் சேர்ந்த முருகன் (55), சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பானுமதி (44), திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் (39), நாராயணன், கோபிநாதன் ஆகியோர் மீது கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதில் முருகன் என்பவர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிவருவது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவருக்கும் அறக்கட்டளை நடத்தி வரும் சாவித்திரி என்பவருக்கும் பழக்கம் இருப்பதும், கமிஷனுக்கு ஆசைப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சார்பு ஆய்வாளர் முருகன் ஆறாவது எதிரியாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். இந்நிலையில் சார்பு ஆய்வாளர் முருகன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று பணியிடை நீக்கம் செய்து கோவை சரக காவல் துறை துணை தலைவர் முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த கலையரசி மோசடி நிறுவனங்கள் மீதான புகார்கள் வழக்குப் பதிவு செய்ய காலம் தாழ்த்தி, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரின் பேரில் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அடுத்தடுத்த நாட்களில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Sirkazhi MLA Senthil Selvan : நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
Minister Jagadeeswari : என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sirkazhi MLA Senthil Selvan : நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
Minister Jagadeeswari : என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
Upcoming Tata EV: குட்டி, காம்பேக்ட், எம்பிவி..! மின்சார பிரிவை ஆள முடிவு - அடுத்தடுத்து வரும் 5 கார்கள் - பட்ஜெட், மைலேஜ்
குட்டி, காம்பேக்ட், எம்பிவி..! மின்சார பிரிவை ஆள முடிவு - அடுத்தடுத்து வரும் 5 கார்கள் - பட்ஜெட், மைலேஜ்
Best Hybrid Cars: ஹைப்ரிட் கிங்..! லிட்டருக்கு 27KM மைலேஜ், டொயோட்டாவுடன் மல்லுக்கட்டும் மாருதி - யார் பெஸ்ட்?
ஹைப்ரிட் கிங்..! லிட்டருக்கு 27KM மைலேஜ், டொயோட்டாவுடன் மல்லுக்கட்டும் மாருதி - யார் பெஸ்ட்?
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
Embed widget