மேலும் அறிய

Hamas Attack: ‘இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலில் இருந்து தப்பித்தது எப்படி?’ - மீட்கப்பட்டவர்கள் பரபரப்பு பேட்டி

"இஸ்ரேல் அரசு ஒரு ஆஃப் மூலம் அனைவருக்கும் தொடர்ந்து தகவல்களையும், உத்தரவுகளையும் தந்து வந்தது. ராக்கெட் தாக்குதல் நடந்தால் கமெண்ட் வரும் வரை பங்கரில் இருந்தோம்."

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியில் ஆப்ரேசன் அஜய் என்ற பெயரில் அப்பகுதியில் இருந்த 212 இந்தியர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த 28 பேரில் 21 பேர் சென்னை விமான நிலையத்திற்கும், 7 பேர் கோவை விமான நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்படி டெல்லியில் இருந்து விமானம் மூலம் விமல், ரஞ்சித், சந்தியா, வினோத், சந்தோஷ், திவாகர், ராஜலட்சுமி ஆகிய 7 பேர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். இவர்களில் 2 பேர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் நாமக்கல், கரூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கோவை வந்த 7 பேரையும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார்.


Hamas Attack: ‘இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலில் இருந்து தப்பித்தது எப்படி?’ - மீட்கப்பட்டவர்கள் பரபரப்பு பேட்டி

இதுகுறித்து இஸ்ரேலில் இருந்து மீட்டு வரப்பட்ட திவாகர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “4 ஆண்டுகளாக இஸ்ரேலில் வேலை பார்த்து வந்தேன். போர் துவங்கிய நிலையில் இந்திய அரசு சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வந்தது. இஸ்ரேலில் இருந்த எங்களிடம் தமிழ்நாடு அரசு 3, 4 நாட்களாக தொடர்பில் இருந்தனர். தமிழ்நாடு அரசு தொடர்ந்து எங்களுடன் பேசி வந்தார்கள். டெல்லியில் இருந்து வர விமானம் மற்றும் உணவு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்தது. வீட்டுக்கு செல்லவும் ஏற்பாடு செய்துள்ளனர். எங்களை மீட்ட அனைவருக்கும் நன்றி. இஸ்ரேலில் தெற்கு பகுதியில் பிரச்சனை உள்ளது. இஸ்ரேலில் தெற்கு பகுதியில் உள்ள 2 நகரங்களில் ராக்கெட் தாக்குதல் நடந்தது. இஸ்ரேல் வடக்கில் பிரச்சனை இல்லை. லெபனான், ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தினால் அப்பகுதியில் பிரச்சனை ஏற்படும். ராக்கெட் தாக்குதல் நடந்த போது பாதுகாப்பிற்காக ஷெல்டரில் தங்கி இருந்தோம்” எனத் தெரிவித்தார்.

பாரதியார் பல்கலைக்கழக மாணவியான ராஜலட்சுமி கூறுகையில், “இஸ்ரேலில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இன்னும் நிறைய பேர் இஸ்ரேலில் உள்ளனர். இஸ்ரேலில் வடக்கு பகுதியில் நான் இருந்தேன். அங்கு பயம் இல்லை. இஸ்ரேலில் சிவிலியனுகளுக்கு பிரச்சனை இல்லை. இஸ்ரேல் அரசு பாதுகாப்பு தந்தது. இஸ்ரேல் அரசு ஒரு ஆஃப் மூலம் அனைவருக்கும் தொடர்ந்து தகவல்களையும், உத்தரவுகளையும் தந்து வந்தது. ராக்கெட் தாக்குதல் நடந்தால் கமெண்ட் வரும் வரை பங்கரில் இருந்தோம். பங்கரில் பாதுகாப்பு இருந்தாலும் பழக்கம் இல்லாததால் பயம் இருந்தது இஸ்ரேலில் உணவு, தண்ணீர், மின்சாரம் பிரச்சனை இல்லை. ராக்கெட் தாக்குதல் நடந்தால் தண்ணீர், மின்சார பிரச்சனை வரலாம்” எனத் தெரிவித்தார்.


Hamas Attack: ‘இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலில் இருந்து தப்பித்தது எப்படி?’ - மீட்கப்பட்டவர்கள் பரபரப்பு பேட்டி

இதனைத்தொடர்ந்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறுகையில், “இஸ்ரேலில் இருந்த கோவை, நாமக்கல், கரூர், நீலகிரி பகுதிகளை சேர்ந்த 7 பேர் கோவைக்கு வந்துள்ளனர். தமிழ்நாடு மாணவ, மாணவிகள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து கோவைக்கு 7 பேர் விமானம் மூலம் வந்துள்ளனர். கோவையை சேர்ந்தவர்களை அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வந்துள்ளனர். மற்ற பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் பிரச்சனை முடிந்த பின்னர் இவர்கள் அங்கு செல்லலாம். இஸ்ரேலில் யாராவது இருந்தால் அரசு அறிவித்த உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget