மேலும் அறிய

Hamas Attack: ‘இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலில் இருந்து தப்பித்தது எப்படி?’ - மீட்கப்பட்டவர்கள் பரபரப்பு பேட்டி

"இஸ்ரேல் அரசு ஒரு ஆஃப் மூலம் அனைவருக்கும் தொடர்ந்து தகவல்களையும், உத்தரவுகளையும் தந்து வந்தது. ராக்கெட் தாக்குதல் நடந்தால் கமெண்ட் வரும் வரை பங்கரில் இருந்தோம்."

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியில் ஆப்ரேசன் அஜய் என்ற பெயரில் அப்பகுதியில் இருந்த 212 இந்தியர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த 28 பேரில் 21 பேர் சென்னை விமான நிலையத்திற்கும், 7 பேர் கோவை விமான நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்படி டெல்லியில் இருந்து விமானம் மூலம் விமல், ரஞ்சித், சந்தியா, வினோத், சந்தோஷ், திவாகர், ராஜலட்சுமி ஆகிய 7 பேர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். இவர்களில் 2 பேர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் நாமக்கல், கரூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கோவை வந்த 7 பேரையும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார்.


Hamas Attack: ‘இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலில் இருந்து தப்பித்தது எப்படி?’ - மீட்கப்பட்டவர்கள் பரபரப்பு பேட்டி

இதுகுறித்து இஸ்ரேலில் இருந்து மீட்டு வரப்பட்ட திவாகர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “4 ஆண்டுகளாக இஸ்ரேலில் வேலை பார்த்து வந்தேன். போர் துவங்கிய நிலையில் இந்திய அரசு சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வந்தது. இஸ்ரேலில் இருந்த எங்களிடம் தமிழ்நாடு அரசு 3, 4 நாட்களாக தொடர்பில் இருந்தனர். தமிழ்நாடு அரசு தொடர்ந்து எங்களுடன் பேசி வந்தார்கள். டெல்லியில் இருந்து வர விமானம் மற்றும் உணவு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்தது. வீட்டுக்கு செல்லவும் ஏற்பாடு செய்துள்ளனர். எங்களை மீட்ட அனைவருக்கும் நன்றி. இஸ்ரேலில் தெற்கு பகுதியில் பிரச்சனை உள்ளது. இஸ்ரேலில் தெற்கு பகுதியில் உள்ள 2 நகரங்களில் ராக்கெட் தாக்குதல் நடந்தது. இஸ்ரேல் வடக்கில் பிரச்சனை இல்லை. லெபனான், ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தினால் அப்பகுதியில் பிரச்சனை ஏற்படும். ராக்கெட் தாக்குதல் நடந்த போது பாதுகாப்பிற்காக ஷெல்டரில் தங்கி இருந்தோம்” எனத் தெரிவித்தார்.

பாரதியார் பல்கலைக்கழக மாணவியான ராஜலட்சுமி கூறுகையில், “இஸ்ரேலில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இன்னும் நிறைய பேர் இஸ்ரேலில் உள்ளனர். இஸ்ரேலில் வடக்கு பகுதியில் நான் இருந்தேன். அங்கு பயம் இல்லை. இஸ்ரேலில் சிவிலியனுகளுக்கு பிரச்சனை இல்லை. இஸ்ரேல் அரசு பாதுகாப்பு தந்தது. இஸ்ரேல் அரசு ஒரு ஆஃப் மூலம் அனைவருக்கும் தொடர்ந்து தகவல்களையும், உத்தரவுகளையும் தந்து வந்தது. ராக்கெட் தாக்குதல் நடந்தால் கமெண்ட் வரும் வரை பங்கரில் இருந்தோம். பங்கரில் பாதுகாப்பு இருந்தாலும் பழக்கம் இல்லாததால் பயம் இருந்தது இஸ்ரேலில் உணவு, தண்ணீர், மின்சாரம் பிரச்சனை இல்லை. ராக்கெட் தாக்குதல் நடந்தால் தண்ணீர், மின்சார பிரச்சனை வரலாம்” எனத் தெரிவித்தார்.


Hamas Attack: ‘இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலில் இருந்து தப்பித்தது எப்படி?’ - மீட்கப்பட்டவர்கள் பரபரப்பு பேட்டி

இதனைத்தொடர்ந்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறுகையில், “இஸ்ரேலில் இருந்த கோவை, நாமக்கல், கரூர், நீலகிரி பகுதிகளை சேர்ந்த 7 பேர் கோவைக்கு வந்துள்ளனர். தமிழ்நாடு மாணவ, மாணவிகள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து கோவைக்கு 7 பேர் விமானம் மூலம் வந்துள்ளனர். கோவையை சேர்ந்தவர்களை அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வந்துள்ளனர். மற்ற பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் பிரச்சனை முடிந்த பின்னர் இவர்கள் அங்கு செல்லலாம். இஸ்ரேலில் யாராவது இருந்தால் அரசு அறிவித்த உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget